BBA மாணவிகள் (தலைமை - லீமா தபா)
அன்புள்ள தமிழ் ஆசிரியரே
உங்களிடம் நாங்கள்
கண்ட குறைகள்...
1.நீங்கள் தூய தமிழில்
பேசுவது குறை
2.நீங்கள் அருமையாக
பாடம் நடத்துகிறீர்கள் அதுவும் குறை
3.நீங்கள் அருமையாக
பாட்டு பாடுகிறீர்கள் அது குறை
4.நீங்கள் உணர்ச்சிபூர்வமாக
பாடம் நடத்தி எங்கள் மனதில் பாடம் புகுத்துகிறீர்கள் அது குறை
5.நீங்கள் உங்கள் மாணவர்களை
மரியாதையுடன் நடத்துகிறீர்கள் அது குறை
மேல் உள்ள அனைத்து
வாக்கியங்களிலும் அது குறை என்ற வார்த்தைகளை நீக்கினால் உங்களுக்குப் புரியும்
அது வஞ்ச புகழ்ச்சி
அணி ஆகும்
இப்படிக்கு உங்கள்
BBA மாணவிகள்
S.ஜோதிப்பிரியா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM013
புனைபெயர் - விமர்சி
வணக்கம் ஐயா. என் வாழ்நாள்
முழுவதும் நான் உங்களுக்கு கடமைபட்டு இருக்கிறேன். கல்லூரியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள்
நான் இருந்த இடமே தெரியாமல் இருந்திருக்கிறேன். தாங்கள் வந்த பிறகுதான் என் வாழ்விலும்
எங்கள் வகுப்பிலும் பல்வேறு மாற்றங்கள். எங்களுக்குள் இருக்கும் திறமைகளை ஆதரித்து
வெளிக்கொண்டு வந்தது மட்டுமல்லாமல், அதை மேலும் எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம்
கூறினீர்கள். உங்களைப்போன்ற ஒரு மாமேதையை நான் கண்டதே இல்லை. இனி நான் காணவும் மாட்டேன்
என்றுதான் நினைக்கிறேன்.
உங்களிடம் பல்வேறு
திறமைகள் ஒளிந்து இருக்கிறது. இந்த ஒரு வருடத்திலேயே நான் பல நற்குணங்களை உங்களிடம்
இருந்து கற்றுக்கொண்டு என்னை நான் மாற்றிக்கொண்டு உள்ளேன். அனைவரிடமும் பாரபட்சம் இல்லாமல்
பழகுவது, மதிப்பெண் நம் மதிப்பை கணக்கிடாது என்பது, பல்வேறு திறமையுள்ள மாணவர்களை உருவாக்குவது
என எண்ணிக்கொண்டே போகலாம். நான் முதன்முதலில் சமூகத்திற்காக வாழும் மனிதரைப் பார்க்கிறேன்.
கொள்கைகளைத் தீட்டி வாழும் மனிதரை நான் பார்த்ததே இல்லை. உங்களைக் கண்டு ஆச்சரியப்பட்ட
விஷயங்கள் பல. எனக்கு ஒரு ஆசை ஐயா. நீங்கள் ஒரே கல்லூரியில் வேலை செய்தால் குறிப்பிட்ட
மாணவர்களின் திறமைகளை மட்டுமே வெளிப்படுத்த முடியும். ஆனால், பல்வேறு மாவட்டங்களில்
உள்ள கல்லூரியில் வேலை செய்தல் பல மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருதுகிறேன். இதை
நீங்கள் கருத்தில்கொண்டு விவாதிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவர்கள் என்பது நம் கல்லூரியில்
உள்ள மாணவர்களை மட்டும். பல மாணவர்கள் என்பது தமிழ்நாடு முழுவதும். அனைத்து கல்லூரிகளிலும்
தங்களைப் போன்ற நல்ல ஆசிரியர் கிடைத்தால் சமூகம் மேன்மை அடைவது மட்டும் இன்றி எங்களைப்
போன்ற மாணவர்களின் வாழ்வும் ஒளிமயமாகும். நான் எப்பொழுதும் உங்களுடைய எழுத்துக்களுக்கு
ரசிகை ஐயா. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். உங்களது படைப்பை எதிர்நோக்கி
காத்துக்கொண்டு இருப்பேன். நீங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உடல்
நலனில் அக்கறை செலுத்துங்கள். வேலை வேலைக்குச் சாப்பிடுங்கள். நீங்கள் அனைவருக்கும்
சேர்த்து சாப்பிட்டேன் என்று கூறுவது எனக்கு பிடிக்கும். நாங்கள் இந்த கல்லூரியை விட்டு
சென்றாலும் நம் நட்பு தொடர வேண்டும். நான் எப்பொழுது சந்தேகம் கேட்டாலும் எனக்கென்று
நேரம் ஒதுக்கி கூறினீர்கள் நன்றி ஐயா. எனக்கு ஒரே ஒரு வருத்தம். ஐந்து மாடி வீட்டை
தாங்களே எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். அது மிகவும் அருமையாக இருந்தது. உங்களது
கட்டுரையை விளக்க அது பல்வேறு தளங்களில் பயன்பட்டு இருக்கும். இப்பொழுது அது பயன் இன்றி
போய்விட்டது. நீங்கள் வகுப்பில் குழு கலந்துரையாடல் செய்யச் சொல்வது எங்களுக்கு மிகவும்
பயனளித்தது. அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். எனக்கான சிறந்த முன்மாதிரியாக உள்ளீர்கள்
ஐயா. என் மீது குறைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் ஐயா. நான் தவறாக எண்ண மாட்டேன்.
நான் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள். என்றும் நலமுடனும் வளமுடனும்
வாழ வாழ்த்துக்கள் ஐயா.
உலகம் ஒளிருவது கதிரவன்
வரவால் என்றால்
இந்தக் கல்லூரி ஒளிருவது
தங்களின் வரவால்
இப்படிக்கு விமர்சி
(சே.ஜோதிபிரியா)
ஆசானே! வணக்கம்
காலையில் எழுந்து
அவசர அவசரமாய் கிளம்பி
உணவு உண்டும் உண்ணாமலும்
ஒன்பது மணிக்குள் கல்லூரியை
அடைந்து
ஒன்பதரை மணிக்குள்
வகுப்பில் நுழைந்து
இரவு முழுவதும் கண்
விழித்து படித்ததை
ஒரு மணி நேரத்திற்கு
முன்பே முடித்து
மாணவர்களின் சமூக அறிவைத்
தூண்டியவரே!
உங்களின் அறிவு மழையில்
நனைய
நான் மட்டும் அல்ல
இந்த கல்லூரி முழுதும்
காத்திருக்கிறது
எனக்கென்ன தெரியும்
என்பதை மாற்றி
உனக்கென்ன உன்னால்
முடியும்
என்று கூறியவரே நீங்கள்தான்
தங்களின் வகுப்பிற்காக
காத்திருந்தது
நான் மட்டும் அல்ல,
இந்த வகுப்பறையும்தான்
பெண்களகூட எடுக்கத்
தயங்கிய பாடத்தை
பெருமூச்சு அடைத்து
எடுக்க முடிந்தது எவ்வாறு
நீங்கள் எப்பொழுதும்
உங்களின் செயல்களில்
இருந்து மாறக்கூடாது
என்பது என் எண்ணம் அல்ல
என் எதிர்பார்ப்பே!
உங்களின் வீரத்தை
(அறிவை)
விரும்பிய இடங்களில் எல்லாம் சொல்லும்போது
என்
தலை நிமிர்ந்தது
நானும் உங்கள் மாணவி
என்று சொல்ல
உங்களின் சூரியன் போன்ற
பேரொளியில்
சிறிய ஒளியைப் பெற
நினைக்கும் மாணவி
மகள்
விமர்சி
கடவுளில் உயர்ந்தவர் சிவனாக இருக்கலாம் ஆனால்
கடமையில் உயர்ந்தவர் சிவாவாகத்தான் இருக்க முடியும்.
என்னுள் ஒரு வினா?
எறும்புகூட உங்களிடம் இருந்துதான்
சுறுசுறுப்பைக் கற்றுக்கொண்டதோ என்று.
நீங்கள் மூச்சு விடாமல் பேசியது
எனக்கு மூச்சு அடைத்துவிட்டது.
பலர் எங்கள் மீது அவநம்பிக்கைதானே கொண்டுள்ளனர்..
எங்கள் மீது நம்பிக்கை வைக்க உங்களால் மட்டும் எப்படி முடிந்தது.
இது போன்ற பல கேள்விகள்
விடை எங்கே?
இருபது வயதில் தந்தையை
தந்தையைத் தத்தெடுத்த மகள்
உங்களின் சூரியன் போன்ற அறிவொளியில்
நிலா போல சக்தியைப் பெற நினைக்கிறேன்…
இந்த “குமாரின்”
“குமாரத்தி” ஆவேனோ
என்ற கேள்வியுடன்???...
ஆசிரியர் தின நினைவிற்காக 5.9.2020
நான் ஏன் எழுதுகிறேன்.
என்னுடைய எழுத்து இயற்கை வர்ணனைகள்,கவிதை நடை போன்ற இலக்கியச் சுவை முற்றிலும் குறைந்ததாக சில பிழைகளுடன் தான் இருக்கும்.
நான் என்னைசுற்றி நடப்பனவற்றையும் என்னை பாதித்தவனவற்றையும் பற்றியே எழுத முயற்சிக்கிறேன்
நான் தமிழ் துறையில் இலக்கண இலக்கியங்கள் படித்தாலும் தமிழின் மீது காதல் கொண்டு எழுத்தின் கரங்களை பிடிக்கவில்லை.
அதிக அளவு படித்தாலும் குறிப்பிட்ட அளவு மட்டுமே தேர்வு கூட எழுதுவேன்.போதும் என்று மனதிற்கு தோன்றிவிட்டால் அத்தோடு தேர்வையும் முடித்துவிடுவேன்.
மதிப்பெண்கள் நம்மை உயர்த்தாது.திறமைகள் மட்டுமே நம்மை நிலைநாட்டும் என்பதை உணர்ந்தவள்.திறமையை வளர்த்துக்கொள்வதில் அதிக ஆர்வம் உண்டு எனக்கு.
ஓரளவு பாராட்டுக்கள் பெற்றிருந்த போதிலும் துறையால் சில அவமானங்களை சந்தித்த சாதாரண தமிழ் துறைமாணவிதான் நான்.
படித்தாலும் பல திறமைகள் இருந்தாலும் தன்னம்பிக்கை என்பது கொஞ்சம் கூட இல்லை.அவசியமானவற்றிற்கு கூட வாய் திறந்து பேச பயப்படும் முதுகெலும்பு இல்லாதவளாக பலகாலம் வாழ்ந்திருக்கிறேன்.
நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் என்னுடைய போராசிரியர் தான்.
எளிமையானவர் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பவர்.பல மாணவர்களின் தனிதிறமைகளை கண்டுபிடித்து அவற்றை வளர்க்க தூண்டுகோளாய் நின்றிருக்கிறார்.
அவர்களுள் நானும் ஒரு புள்ளியாக.
நான்கு நண்பர்களுடன் மட்டுமே சுற்றித்திரிந்த என்னை அடையாளப்படுத்தினார்.எழுதவைத்தார்.
எனக்குள் புதைந்திருந்த எழுத்தாற்றலை கண்டுபிடித்து என்னை எனக்கே புதிதாக அறிமுகம் செய்தார்.
அவரிடம் கண்டுவியந்தவை பல.
இளங்களை மூன்றாமாண்டின் தொடக்கம்.ஏதோ ஒரு ஆசிரியர் புதிதாக வந்திருக்கிறார்.அவர் சிறப்பாக பேசுகிறார்.டப்பிங் பாடல் பாடுகிறார்.இது போல் சில சலசலப்புகள் வகுப்பில்.
யார் வந்தால் நமக்கென்ன நம்ப உண்டு நம்ப வேலை உண்டுனு இருந்துட்டு போயிடுவோம்.
என்பதாக இருந்தேன்.
அவரின் முதல் நாள் வகுப்பு.இடைவேலைக்குப்பிறகு தொடக்கம்.
இடைவேலையில் ஏதேனும் புத்தகம் படித்ததை நண்பர்களுடன் உரையாடுவது வழக்கம்.
அதுபோல் அன்றும் உரையாடினோம்.நேரம் ஆனது கூட தெரியாமல்.
வகுப்பை வந்து பார்த்தால் Sir ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார்.நண்பர்கள் ஆங்காங்கே நின்றுக்கொண்டிருந்தனர்.
வகுப்பின் உள்ளே வந்து இடத்தைபிடித்து அமர்ந்துவிட்டேன்.
நடுவில் வந்து சேர்ந்ததால் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
நின்றிருந்தவர்களை அமரச்சொன்னார்.
அதற்குள் அருகில் இருந்தவளிடம் என்ன நடக்கிறது என்று கேட்டு தெரிந்துக்கொண்டேன்.
ஏதோ நம்மை நாமே அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டுமா.
என்னையும் எழுப்பிவிட்டார்.
பெயர் ஊரைமட்டும்,சொல்லிவிட்டு அமர்ந்தேன்.இதைதவிர சொல்வதற்கு என்னிடம் என்ன இருக்கிறது.பிறரின் அடையாளங்களில் ஒளிந்திருப்பவள் தான் நான்.
பிறகு அவர் ஒரு டப்பிங்பாடல் பாடினார்.நன்றாக இருந்தது.
அது போல என்னாலும் டப்பிங் செய்ய முடிந்தது.
அதை என் தோழி ஒருவளை பாடிக்காட்டசொன்னேன்.
அதற்கு அவள் படித்துவிட்டு,
உன் கதை,கவிதைகளைப்போல் தான் இருக்கிறது என்றாள்.
நன்றாக இருக்கிறதா? என்றேன்.
அவள் சிரித்துக்கொண்டே மொக்கையாக என்றாள்.
மற்ற இரண்டு தோழிகளும் சிரித்துக்கொண்டே சரிவிடுமா ஜோ.
போக போக எல்லாம் சரியாகிவிடும்
என்றார்கள்.
Sir Class வந்தது.அனைவரும் சுறுசுறுப்பாக இருந்தனர்.நான் மட்டும் அந்த நோட்டையே புரட்டிக்கொண்டிருந்தேன்.
என் முகம் மட்டும் வாடிக்கொண்டிருந்தது போல.
அவர் கண்டுபிடித்து எழுப்பிவிட்டார்.
அந்த மொக்கை நோட்டுடன் எழுந்து நின்றேன்.
அந்த நோட்டில் என்ன இருக்கிறது.ஏன் அதையே பார்த்துக்கொண்டிருக்கீங்க என்றார்.நான் தான் வாய்திறந்து கூட பேசாதவளாச்சே!
ஒன்றும் இல்லை சார் என்று சொல்லத்துவங்குவதற்கு முன் என் தோழிகள் மானத்தைவாங்கிவிட்டனர்.
கவிதை நோட் சார்.இதில் இருப்பவைகள் அனைத்தும் அவள் எழுதியது.இன்று புதிதாக ஒரு டப்பிங் பாடலும் இணைந்திருக்கிறது.
அப்படியா? அருமை.வாழ்த்துக்கள் மா.
ஒரு கவிதை சொல்லுங்க என்றார்.
நான் தயங்கி நின்றேன்.
தயங்காதீங்க சொல்லுங்க.
கொஞ்சநேரம் யோசித்துவிட்டு,
எட்டுவழிச்சாலையை பற்றி ஒன்று சொன்னேன்.
நான்குபேருக்கு மட்டுமே அறிமுகமானது அன்று தான் நாற்பது பேருக்கு அறிமுகமானது.
பாடலையும் பாடசொன்னார்.
நானெல்லாம் ரசிப்பதோடு சரி.
பாடத்தெரியாது என்றேன்.
பாடமுயற்சி செய்யுங்கள் என்றார்.
சரி பாடிடுவோம்.இல்லையென்றால் விடமாட்டார் என்பதால் பாடினேன்.
நன்றாக இருந்தது போல.
எல்லோரும் வியப்பாக பார்த்தனர்.
என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.அவர் போனதும் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.
நண்பர்கள் சிலர் நோட்டை
வாங்கிப்பார்த்தனர்.நன்றாக இருக்கு வாரம் ஒரு முறை கவிதை சொல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
இப்படியே சென்றது சில மாதங்கள்.
இணைய தளம் ஒன்றை ஏற்படுத்தி அதில் பதிவிட்டேன்.
என்னோடு எழுதும் சில தோழிகளையும் இணைத்துக்கொண்டேன்.
அவர்களை இணைப்பதற்கு வாட்சப்பை பயன்படுத்திக்கொண்டேன்.
தற்பொழுது ஒருசிலர் அந்த இணைய தளத்தில் எழுதிவருகின்றனர்..
இது எனக்கும் என் தொழிகளுக்கும்
ஒரு நம்பிக்கையை கொடுத்துவருகிறது.
என் நிலையும் மாறத்தொடங்கியது.
நிறைய கற்றுக்கொள்ளத்தொடங்கினேன்.
எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகியது.
எழுதுவதற்காக பல புத்தகங்களை
படிக்கத்துவங்கியுள்ளேன்.
புத்தகங்களும் என் ஆசிரியர்களும் என்னை நேர்வழியில் நெறிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு,
சாரல் ஜோ.
M.ஹரிஷா
(இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM0
வணக்கம் ஐயா. முதல்முதலில்
நீங்க வகுப்பிற்கு வந்தபோது நான் அன்று வரவில்லை. இரண்டு நாள் கழித்து நான் வந்தபோது
என் தோழிகள் உங்களைப் பற்றி கூறினார்கள். புதுசா ஒரு ஐயா வந்துருகாரு சூப்பரா பேசுனாரு
நீதான் miss பன்னிட்டனு சொன்னாங்க ஐயா. அதுவும் நீங்க சமூகச் சிந்தனையோடு பேசியதாக
சொன்னாங்க. எனக்கு சமூகச் சிந்தனையோடு பேசுவது மிகவும் பிடிக்கும். பிறகு உங்களுடைய
வகுப்பு வந்தது. பெண்ணியம் வகுப்பு. ஒரு நாள் பேசியதிலேயே நீங்க எங்களுக்குள் வீரத்தை
தூண்டுமாறு பேசினீங்க. எங்களுக்கு புரியாத சில சிக்கலான சொற்களையும் மிக அழகாக தெளிவாக
சொன்னீங்க ஐயா. பிற வகுப்புகளில் நான் சோர்வாக இருந்தாலும் பெண்ணியம் வகுப்பு வந்தாலே
ஒரு தனி உற்சாகம் வந்துவிடும். மாணவியரின்
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கான இடைவெளியைக் கொடுத்தீர்கள். மிக முக்கியமானது
உங்களைப் போன்ற சுருசுருப்பான ஒரு மனிதரை இதுவரை நான் பார்த்ததில்லை. முதல் இரண்டு
வருடங்களில் பல ஆசிரியர்கள் எங்கள் திறமைகளை வெளிக்கொணருமாறு கூறியுள்ளார்கள். ஆனால்
நீங்கள் ஒருவர் மட்டுமே வெறும் வாய் வார்த்தையாக செய் என்று கூறாமல் தாங்களே எங்களின்
திறமையை வெளிக்கொண்டுவரும் முழு முயற்சியில் இறங்கினீர்கள். அதன் பின் எங்களுக்கே தெரியாத
எங்களின் திறமைகள் வெளிப்பட்டது. அதற்கு மிக்க நன்றி ஐயா. உங்களுக்கு உணவு கொணடக்க
வேண்டும் என்று நாங்கள் ஆசைபட்டோம். அதற்கு உங்கள் மீது நாங்கள் கொண்ட பாசமும் காரணமாகும்.
ஆனால் சில காரணங்களால் எங்களால் கொடுக்க முடியவில்லை. பல விஷயங்கள் நான் உங்களிடம்
கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டவற்றை என் அம்மாவிடம் சென்று பகிர்ந்து கொள்வேன். ஒரு
நாள் நீங்கள் ஒலிப்பதிவு செய்து அனுப்பியிருந்தீர்கள் ஐயா. Soft skill மாணவர்களின்
பெயர் பட்டியல் என்னிடம் இருந்தது. அதை கேட்டு
ஒலிப்பதிவு அனுப்பியிருந்தீர்கள் ஐயா. அதை நான் பெருமையாக என் அம்மாவிடம் காட்டினேன்
ஐயா. என் அம்மா அதைக்கேட்டு பலரிடம் காட்டி மகிழ்ந்தார். இந்த காலத்தில் இப்படி பணிவோடு
பேசும் இளம் வயது ஆசிரியர் உள்ளார் என்று கூறி மகிழ்ந்தார். உங்களிடம் பல விஷயங்களை
கண்டு நான் வியந்ததுண்டு ஐயா. சமூகம் மீது இவ்வளவு அக்கறை கொண்டிருந்தும் இங்கு நடக்கும்
எதையும் தட்டிக்கேட்கவில்லையே என்று நான் யோசித்ததுண்டு. பிறகு நான் புரிந்துகொண்டேன்
புலி பதுங்குவது பயத்தினால் அல்ல இரையை அடிப்பதற்கான தகுந்த நேரத்திற்கு காத்திருப்பதாகும்.
உங்களிடம் நான் அதைதான் கற்றுக்கொண்டேன். தவறை தட்டிக் கேட்கவோ மாற்றவோ எண்ணினால் அறிவும்
திறமையும் மட்டும் இருந்தால் போதாது, பொறுமையும் வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்.
ஜோதிபிரியா உங்களை வேறு கல்லூரிக்கு செல்லுமாறு கூறியதாக நீங்கள் கூறினீர்கள். ஆனால்
எளிமையாக மாற்ற முடிகின்ற ஒன்றை மாற்றுவதைவிட கடினமான ஒன்றை மாற்றுவதே சிறந்தது. தாங்களும்
கடினமான ஒன்றை மாற்ற எண்ணுகிறீர்கள். அதுவே மிக மிக சிறந்ததாகும். அதுவே வீரமும் திறமையும்
சிறந்த அறிவும் என்று நான் எண்ணுகிறேன். உங்களின் இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும்
என்று ஆசைப்படுகிறேன். நீங்கள் எல்லாவற்றிலும் எங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறீர்கள்.
மிக்க நன்றி ஐயா. ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்களே. எப்படி ஒரு மனிதர் இத்தனை
சுருசுருப்பும் பலவற்றில் திறமை படைத்தவராக இருக்க முடியும் என்று உங்களைப் பார்த்து
வியந்தேன். இன்னொன்றையும் கூற வேண்டும் என்று தோன்றுகிறது. தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்
என்ற நம்பிக்கை. கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் ஐயா. உங்களின் மேன்மையான சமூகப்
பணிக்கு உதவும். உங்களால் எங்களிடம் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதைப்போன்று
உங்களின் ஆசைப்படி உங்களால் இந்த சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என்ற பலத்த நம்பிக்கை
கொண்டுள்ளேன் ஐயா. ஏதேனும் தவறாக கூறியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா. நன்றி.
ஆ.தேவிகா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு
16UTAM049
வணக்கம் ஐயா. நான்
உங்கள் மாணவி ஆ.தேவிகா
எங்களுக்கு முதன் முதலில்
பெண்ணியம் பாடத்தை நடத்துவதற்காக உங்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் நீங்கள்தான் சிறந்த
பெண்ணியத்தை முன்னேற்றுவீர்கள் என்று தெரிந்தோ தெரியாமலோ... உங்களைப்போல் இவ்வுலகில்
எவரும் இல்லை என்ற ஆச்சரியத்தில் விடைப்பெறுகிறோம் என்ற கனத்த குரலுடன் வகுப்பின் சார்பாகவும்
உங்களை கஷ்டப்படும்படி நடந்து கொண்டால் மன்னித்துவிடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்வின்
அனுபவங்களையும் படைப்புகளையும் கண்டு வியந்துள்ளேன்.
எழுதும்போது கை நடுங்குகிறது.
என் வாழ்நாளில் உங்களைப்போல எந்த ஒரு ஆசிரியரை பார்த்ததில்லை. எனக்கு கவிதையே எழுதத்
தெரியாது. ஆனால் நீங்கள் ஒரு நாள் அனைவரிடமும் நீங்கள் நாளை கவிதை எழுதி வரவேண்டும்
என கூறினீர்கள். இது எனது மனதில் ஆழமாக பதிந்தது. அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. அன்று
வீட்டில் அமர்ந்தபடியே கவிதையினை யோசித்தேன். தெரியவில்லை. அனைவரிடமும் சென்று கவிதை
எப்படி எழுதனும் என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டனர். நான் இன்றைக்கு ஒரு
கவிதையாவது எழுதனும் என்னும் நோக்கத்துடன் எழுதினேன்.. எழுதினேன்.. ஒன்றல்ல மூன்று
கவிதை எழுதினேன். பிறகு சிவக்குமார் ஐயாவிடம் இதனை படித்துக் காட்ட வேண்டும் என்ற ஆர்வம்
அதிகமாக கவிதை பல எழுத தொடங்கினேன். உங்களால்தான் கவிதைக்கு வகுப்பில் தலைமையிடம் பெற்றேன்.
இதுவரை நான் கல்லூரி
சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் இல்லாத மாற்றம் நீங்கள் வந்த ஓராண்டுகளில்தான் கண்டேன்.
அனைத்து மாணவிகளையும் மாற்றியவருமு் அவர்களின் திறமைகளை அவர்களுக்கே உணர்த்தியவரும்
நீங்களே.
எந்த ஒரு ஆசிரியரும்
வாழாத ஒரு வாழ்வான ஆசிரியர் வாழ்வினை வாழ்ந்துகொண்டு இருக்கும் பெருமையுடையவரும் நீங்களே!
கல்லூரியில் ஆசிரியரின் கூட்டத்தில் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு.
எந்த ஒரு ஆசிரியரும் செய்யாத ஒன்று... ஆசிரியர்கள் எப்போது மாணவிகள் வணக்கம் தெரிவித்தால்
மட்டுமே வணக்கம் தெரிவிப்பர். ஆனால் நீங்கள் அனைவரிடமும் இயல்பாகவும் வணக்கம் சொல்லாத
மாணவருக்கும் நீங்கள் வணக்கம் சொல்லும் பெரிய மனிதர். உங்களைப் பார்த்தால் எனக்கு மட்டுமல்லாமல்
எல்லோருக்கும் பொறாமையாக இருக்கும். உங்களின் நடை அனைவரின் எண்ணத்தில் மறக்க முடியாத
நினைவுகள். குனிந்தபடியே, கையை அசைத்துக்கொண்டு வேகமாக ஒட்டம்போல் ஓடி வருவீர் வகுப்பறைக்கு...
அந்த நாட்களை எண்ணி இதுபோல் நாட்களை எதிர்பார்த்தபடியே நாங்கள்!
உங்களுக்காக நான் கவிதையினை
எழுதியுள்ளேன்.
குளத்தில் மறைந்திருக்கும்
மீனை
தூண்டிலைக் கொண்டு
வெளிக்கொணர்வதுபோல,
மாணவிகளின் திறமையை
தூண்டிவிட்ட புதியவனே!
கவிதை எப்படி இருக்கு...
எனக்கு தெரிந்தது இதுவே.. தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள். அனைவருக்கும் மடல் எழுதியவரும்
நீங்களே! உங்களை ஆசிரியராகவும் எங்களின் தோழனாகவும் ஏற்றுக்கொண்டோம். நாங்கள் எவ்வளவு
தவறு செய்தாலும் கோபப்படாமல் பாடத்தை தொடர்ந்து நடத்தியதற்கு நன்றி. பல அரிய கருத்துக்களை
எங்களிடம் கூறினீர்கள். அதனை சமூக உணர்வுடன் உணர வேண்டும் என்று கற்றுத்தந்தவரும் வாழ்க்கையை
எப்படி வாழ வேண்டும்,, எதற்காக வாழ வேண்டும் என்பதை கற்றுத் தந்தவரும் நீங்களே!
எங்களின் இன்ப துன்பங்களில்
உற்ற துணையாக இருந்து காத்தவரும் நீங்களே! உங்களின் ஆசைப்படி சமூகத்திற்கு நல்ல எண்ணங்களையும்
கருத்துக்களையும் தருவேன். நாம் ஒரு நாள் சந்திக்கும் நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டு,
சமூகப் பொறுப்புணர்வோடு காத்துக்கொண்டு இருப்பேன். என் தோழிகளோடு அரட்டை செய்யும்போது அக்கறையுடன்
கோபப்படுவீர். அது எனக்கு மிகவும் பிடிக்கும். சிறிதளவு விளையாட்டு, பெரிதளவு சமூக
அக்கறையுடன் செயல்படுவேன். I miss u... நன்றி ஐயா... உங்கள் மாணவி ஆ.தேவிகா
M.சௌந்தர்யா (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG099
மரியாதைக்குரிய ஐயா, நீங்கள் உங்கள் கடமையாகிய
பாடங்கள் நடத்துவதில் எந்தவொரு குறைபாடும்
இல்லாமல் முடித்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு வருடமாக எங்களுக்கு பாடம் எடுத்துவருகிறீர்கள்.
நீங்கள் வகுப்பை ஆளுமைப்படுத்த மட்டும் ஏன் முயல்வதில்லை என்று எனக்கு தெரியவில்லை.
நீங்கள் இந்த வகுப்பு
நடத்துவதும் உங்கள்பொறுமை குணத்திற்கும் உங்கள்
ஆசிரியர்தான் காரணம் என்று அறியும்போது நீங்கள் அவரை பெருமைபடுத்துவது எனக்கு பிடித்திருக்கிறது.
ஆனால் நீங்கள் வகுப்பு நடத்தும்போது வகுப்பு அமைதியாக இருக்கவும், அனைவரும் கவனிக்க
முயல்வதில் நீங்கள் இன்னும் கடுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
நீங்கள் பாடங்களை பாடமாய்
நடத்தாமல் எங்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை அதிகமாக புகுத்துவது எனக்கு
மிகவும் பிடித்ததாகும்.
என் 12ம் வகுப்பு படிக்கும்போது
எனக்கு கிடைத்த தமிழ் ஐயாவில் ஒரு பங்குதான் நீங்கள். உங்களை குறை கூறுவதற்கு சொல்லவில்லை.
ஆனால் அவருக்கு இருக்கும் திறமைகளுள் ஒன்று இரண்டு உங்களிடம் காணுவதில் எங்கள் தமிழ்
ஐயாவை மேலும் மேலும் நினைவுக்கு வரவைக்கிறது. அவர்தான் என்னிடம் கவிதை கதை வகுப்பு
ஆளுமைபடுத்தும் திறமை யாவும் அவர் கற்பித்ததுதான். அவை யாவும் அழிந்துவிடும் என்று நினைத்தேன். நீங்கள்
என்னை ஊக்குவிக்கும் வகையில் என்னை நான் வளர்த்துக் கொள்ளும் வகையில் பேருதவியாக இருந்தது.
நீங்கள் ஒவ்வொரு கதையிலும்
நடிப்புத்திறன் வெளிப்படத்துவதில் நீங்கள் இன்னும் வளர்த்துக்கொள்ளுங்கள். அவ்வாறு நடத்துவது எல்லாருடைய மனதிலும் நிலையாய் நிற்க வைக்கிறது.
பாடல்கள் பாடும் கலையை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் எனக்கு பாடம் நடத்தியதற்கு உண்மையில்
மனதார நன்றி கூறுகிறேன். இலக்கணப் பகுதியை மட்டும் கரும்பலகையில் நடத்தினால் நன்றாக
இருக்கும்.
G.அம்மு (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG059
வணக்கம் ஐயா. உண்மையில்
உங்களின் வகுப்பில் நாங்கள் அனைவருமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். உங்கள் அளவிற்கு
பொறுமையான ஒருவரை நான் உண்மையில் பார்த்ததில்லை ஐயா. வகுப்பில் நீங்கள் பயிற்சியளிக்கும்
தினமும் ஐந்து வாக்கியங்கள் எழுத வைத்தது, கரும்பலகையில் ஒவ்வொருவராக அழைத்து எழுத
வைத்தது, ஒவ்வொருவரையும் கதை சொல்ல வைத்தது என்ற அனைத்தும் மிகவும் பயனுடையதாக இருந்தது.
உங்களிடம் கறை என்று ஒன்று சொல்ல வேண்டும்
என்றால் நீங்கள் மிகவும் பொறுமையாக இருப்பதே ஐயா. ஆனால் அதுவே உங்களின் நிறையும் ஆகும். உண்மையில் உங்களிடம் நான் எப்படி பொறுமையாக
இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். இவ்வளவு நாள் நாங்கள் கொடுத்த தொல்லைகளையெல்லாம்
பொறுத்துக்கொண்டு எங்களை வழிநடத்திச் சென்றதற்கு மிகவும் நன்றி ஐயா. உங்களின் மனம்
புண்படும் வகையில் நாங்கள் ஏதேனும் செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள் ஐயா. உங்கள்
கீழ்படிந்த மாணவி கு.அம்மு
முனைவர் ஹ.ஹாபியா பேகம் (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு)
18UENG041
மதிப்பிற்கும்
மரியாதைக்கும் உரிய முனைவர் சிவக்குமார் ஐயா அவர்களுக்கு
ஐயா
இக்கல்லூரியில் மனம் கவர்ந்த ஆசிரியர் நீங்களே. நீங்கள் பாடம் நடத்தும் முறை மாணவிகளுடன்
உரையாடும் முறை மிகவும் நல்ல முறையில் இருந்தது. நாங்கள் வகுப்பில் எவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தாலும்
நீங்கள் அதை மிகவும் எளிமையான முறையில் வழிநடத்துவீர்கள். நான் உங்கள் திறமைக்கு மிகப்பெரிய
ரசிகை. நானும் என் வாழ்வில் உங்களைப்போல் திறமையாக
வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்கள் திறமைக்கு நான் தலை வணங்குகிறேன். எங்களுக்கு
கிடைத்த ஆசிரியரைப்போல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். நீங்கள் என் கவிதையில் ஏதேனும்
திருத்தம் இருந்தால் அதனை கூறி என்னை மீண்டும் ஒரு கவிதை எழுதுவதற்கு ஊக்கப்படுத்துவீர்கள்.
உங்களிடம் எனக்கு பிடித்த சொல்...
· அம்மா...
உங்கள் தோழிகளை ஊக்கப்படுத்துங்கள்
· அம்மா
வகுப்பு எடுக்கும்போது ஒத்துழையுங்கள்
· அம்மா
நம்ம நேத்து வகுப்புல நடத்துன விஷயத்தை உங்களுக்குள் கலந்துரையாடுங்கள்
இவ்வாறு
மாணவிகளை ஊக்கப்படுத்துவீர்கள். இதுவரை இப்படிப்பட்ட ஆசிரியரை நான் எங்கும் கண்டதில்லை.
எனவே நான் உங்கனைத் தலை வணங்குகிறேன்.
ஐயா
நான் உங்களுக்காக எழுதிய ஓர் கவிதை
சி
– சிறந்த
வ-
வள்ளல்
கு
– குணம் கொண்ட
மா-
மா முனைவர் எங்கள்
ர்
– ஆசிரியர் என்னும் தந்தை சிவக்குமார்
உங்களைப்போல் ஓர் ஆசிரியர்
பெண்களுக்கு ஓர் தந்தையாகும் சிறந்த வழிநடத்துபவராகவும் இருத்தல் வேண்டும்.
ஆசிரியர் பணியே நற்பணி
அதற்கே என்னை அற்பணி என்னும் கவிதைக்கு உரிய மகா வள்ளல் எங்கள் ஐயா நீங்கள் மட்டும்தான்.
தங்களின் பெயருக்கேத்த
சிவனைப்போல் தங்களது பக்தர் என்னும் மாணவிகளை வழிநடத்துபவர் நீங்கள் நீங்கள் நீங்கள்
இப்படிக்கு முனைவர்
ஹ ஷாபியா பேகம்
1. அன்புள்ள
மரியாதைக்குரிய முனைவர் சிவக்குமார் ஐயா அவர்களுக்கு
“ஆசிரியர் பணியே அறப்பணி
அதற்கே உன்னை அர்ப்பனி” என்னும் வாக்கியத்திற்கு இணங்க நீங்கள் வகுப்பறையில் ஆசிரியர்
பணியை மிகவும் சிறப்பாக ஆற்றுவீர். உங்கள் திறமையை நீங்கள் அதிகளவில் வகுப்பறையில்
வெளிக்கொணர்ந்துள்ளீர்கள். உங்களின் உக்குவிக்கும் திறன் மாணவர்கள் மத்தியில் அதிகளவில்
இருக்கும். உங்களைப் பார்த்த பின்புதான் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை
தெரிந்துகொண்டேன். ஒரு மரம் வளர வேண்டுமென்றால் அதற்கு முதலில் விதை தேவை, அதைப்போல
ஒரு மாணவி திறமையாக ஆக வேண்டுமென்றால் உங்களது அறிவுரைகள் எங்களுக்குத் தேவை. எங்கள்
வாக்கியத்தில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும் நீங்கள் அதை தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.
நீங்கள் அன்று எழுதிய இரண்டு பாடல்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக
விளங்ககிறது. நீங்கள் வகுப்பறையில் கூறிய பேய் தட்டச்சு அடித்தபோது என்ற கதை கேட்பவற்கு
ஆர்வத்தை ஊட்டும் வகையில் இருக்கும். இந்த ஆசிரியர் பணியை மேன்மேலும் தொடர வேண்டும்
என்று நாங்கள் வேண்டுகிறோம்.
சி – பணியில் சிறந்தவர்
வ-வகுப்பறையில் வல்லவர்
கு-
குணத்தில் நல்லவர்
மா-மாணவர்களுக்கு பிடிக்கம் மாமுனைவர்
ர்-இவை
எல்லாம் சேர்ந்தவர்தான் இவர்
இனிய ஆசிரியர்தினம்
நல்வாழ்த்துக்கள்
C.பிரியதர்ஷினி (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு)
18UENG033
மதிப்பிற்குரிய ஐயா.
உங்களைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்காக நான் எழுதித்
தருகிறேன்.
நீங்கள் ஒரு மனிதனாகவும்
இருந்து, ஆசிரியராகவும் இருந்து, ஒரு நண்பராகவும், ஒரு அண்ணனாகவும் இருந்து வழநடத்தினீர்கள்.
ஒரு ஆசிரியராக நீங்கள் சரியாகத்தான் இருக்கிறீர்கள். நாங்கள்தான் தவறாக இருக்கிறோம்.
உங்கள் வகுப்பில் எல்லாம் அவரவர் வேலையைப் பார்க்கிறார்கள். நீங்கள் கொஞ்சம் சரியாக
இருக்க வேண்டும். அடுத்த வருடம் வரும் மாணவர்களிடம் கொஞ்சமாவது strict ஆக இருங்கள்
ஐயா. நான் கவிதை எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி ஐயா. நான் உங்களை
மறக்க மாட்டேன்.
K.வினோதினி
(இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG109
மதிப்பிற்குரிய
ஐயாவிற்கு,
ஐயா எனக்கு உங்கள ரொம்ப
பிடிக்கும். உங்கள பிடித்ததாலதான் எனக்கு தமிழ் மீது பெரிய மதிப்பு ஏற்பட்டது ஐயா.
உங்கள மாதிரி உற்சாகமூட்டும் ஆசிரியர் எனக்கு முன்னாடியே கிடைத்திருந்தால் நான் மிக
அறிவாளியாகவே இருந்திருப்பேன். ஆனால், நான் ரொம்ப தாமதமாக வந்து உங்களைப் பார்த்ததால்
நான் மிகவும் கவலை அடைகின்றேன். எல்லா வகுப்பை விட கூடிய கவனம் உங்க வகுப்பில் செலுத்துகிறேன்.
ஏனென்றால். நீங்கள் நடத்தும் பாடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனை நான் தவறாமல் கவனிப்பேன்.
ஐயா... உங்களை நாங்கள் தவறவிடப் போகிறோம் என்று நானும் என் தோழி ஷாபியாவும் முன்னாடியே
கவலையடைந்தோம். உங்களுக்கு குறைகள் ஒன்றும் இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவர்களின்
வாய்ப்பை நீங்க தவற விட வில்லை. எல்லோரையும் சரிசமமாகத்தான் பார்த்தீர்கள். ஒரு சில
நேரத்தில் எனக்கு தோனும் நீங்க என் அப்பாவாக இருந்தால் எப்படி இருக்கும். என் அப்பாவுக்குகூட
எனக்கு என்ன திறமை இருக்கு என்றுகூட தெரியாது. அப்படி இருக்கும்போது என் திறமையை நீங்க
வெளியே கொண்டுவந்து அதனை அனைவரிடமும் வெளிப்படுத்தி என்னை மகிழ வைத்தீர்கள். இப்படிபட்ட
நீங்க என் அப்பாவாக இல்லையே என்று நான் என்றும் வருந்துகிறேன். உங்களுடன் எப்பவுமே
நான் மாணவியாக உங்க கூடவே இருக்க வேண்டும் ஐயா... அடுத்த ஆண்டும் முடிந்தால் எங்களுக்கு
தமிழ் ஆசிரியராக வாங்க ஐயா...
இப்படிக்கு அன்புள்ள
உங்கள் கா.வினோதினி
S.M.ரம்யவாணி (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG089
மதிப்பிற்குரிய சிவக்குமார்
ஐயா அவர்களுக்கு,
ஐயா, எனக்கு உங்கள்
வகுப்பு மிகவும் பிடிக்கும். ஏனென்றால், நீங்கள் மட்டும்தான் எங்களிடம் இருக்கும் திறமையை
வெளிப்படுத்தி எங்களை ஊக்கப்படுத்துகிறீர்கள். ஆனால், ஐயா நீங்கள் எங்களுக்குத் தரும்
உரிமை மற்றும் சுதந்திரத்தை சிலர் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதற்கு நீங்கள் கவலைப்பட
வேண்டாம். நயா நான் உங்களின் யூடியூப் முகவரியான புதியவன் சிவா பார்த்தேன். நான் உங்களின்
பாம்பின் முட்டைகள், உங்கள் திறமையில் நீங்கள் இயற்றிய பாடல்கள், (வேலைவாய்ப்பு, இன்றைய
நாட்களில்) பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. இன்றைய அரசியல் வாதிகளின் ஆக்கம்,
மக்களின் அடிமைத்தன்மை மற்றும் இன்றைய செயற்கை
பானங்கள் பற்றி மிகவும் அருமையாக நீங்கள் கூறியுள்ளீர்கள். ஐயா உங்கள் வருப்பிற்கு
வருவதுதான்எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் ஐயா. நீங்கள்தான் எங்களுக்கு மீண்டும்
தமிழ் ஐயாவாக அடுத்த வருடம் வர வேண்டுமென நான் உங்களிடம் வேண்டிக் கொள்கிறேன். நீங்கள்
மீண்டும் எங்களை ஊக்குவித்து எங்களின் திறமைகளை வளர்க்க உதவி செய்யவும். நீங்கள் மீண்டும்
எங்களின் தமிழ் ஆசிரியராக வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஐயா,
நீங்கள் எங்களின் திறமையை வளர்க்க நீங்கள் கூறும்போது எனக்கு நாவல் மற்றும் தொடர்கதை
எழுதும் ஆர்வம் வந்துவிட்டது. ஆதலால் நான் ஒரு நாவல் எழுதலாம் என்று திட்டமிட்டு உள்ளேன்.
ஐயா நீங்கள் என்னை நாவல் எழுத உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாழ்மையுடன் உங்கள்
மாணவி ச.மு.ரம்யாவாணி
N,ரித்திகா
(இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG112
1. தமிழ்
ஐயாவுக்கு
ஐயா, நீங்க பாடம் நடத்துரது
எனக்கு பிடிக்கும். நீங்க ஜாலியா பேசுவிங்க ஐயா. இதுவரை எந்த ஒரு வீட்டுப்பாடமும் அதிகமாக
மத்த ஆசிரியர்விட நீங்க கொடுத்தது இல்லை ஐயா. நீங்க என்ன பொறுத்தவரை பாரபட்சம் பார்த்தது
கிடையாது. தமிழ் தேர்வில் நான் இரண்டாவது தோல்வி அடைந்தேன். எனக்கு மிகவும் வருத்தமாக
இருந்தது. ஐயா உங்களிடம் ஒரு தப்பு இருக்கின்றது. அதாவது படிச்சு புரிஞசு எழுதுறவங்களுக்கு
மதிப்பெண் கம்மியா போடுறீங்க. கதை எழுதுறவங்களுக்கு
மதிப்பெண் அதிகமாக போடுறீங்க ஐயா. வகுப்பில் நிறைய மாணவிகள் பேசிகொண்டிருக்கிறார்கள்
ஐயா. அதை நீங்கள் கண்டுகாதீங்க ஐயா. இப்ப வகுப்பில் Enjoy பண்ணாம நாங்க எப்ப Enjoy
பண்றது ஐயா. எதாவது தப்பா எழுதிருந்தா மன்னிக்கவும்.
1. மதிப்பிற்குரிய
சிவக்குமார் ஐயா அவர்களுக்கு
ஐயா எனக்கு உங்கள்
வகுப்பு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் பொறுமையாக நடத்துவீர்கள். நீங்கள் அர்த்தம்
சொல்வீர்கள். எனக்கு தமிழ் பாடம் மிகவும் பிடிக்கும். அதிலிருந்து நான் திறமையை வளர்த்துக்கொண்டேன்.
தமிழ் பாடத்தை புரிந்து படிக்க ஆரம்பித்தேன். அதனால் நல்ல மார்க் எடுத்தேன். இதற்கு
யார் காரணம் என்றால் நீங்கதான் காரணம். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அடுத்த வருஷம் நீங்கள் எனக்கு
தமிழ் வகுப்பிற்கு வருவீர்களா வரமாட்டீர்களா தெரியவில்லை. உங்கள் வகுப்புக்கு வருவது
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. உண்மை சொல்லப்போனால் நீங்கள் என்னை எழுப்பி கேள்வி
கேட்பது எனக்கு பிடிக்கும். ஆனால் நீங்கள் என்ன கே்ள்வி கேட்கிறீங்க என்றது தெரியாது
மறந்துவிடும். நான் பருவத்தேர்வில் தமிழில் நல்ல மதிப்பெண் எடுப்பேன் ஐயா.
அன்புள்ள மாணவி
மதிப்பிற்குரிய ஐயா,
நீங்கள் பாடம் நடத்துவதில் எந்த வித குறையும் இல்லை. ஆனால் நீங்கள் பாடம் நடத்தும்
பொழுது பேசிக்கொண்டு இருப்பவர்களை கண்டிக்க மாட்டீர்கள். அது கவனிப்பவர்களையும் தொந்தரவு
செய்கிறது. இந்த ஒரு பண்பு மட்டும்தான் நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். மற்றபடி நாங்கள்
உங்கள் வகுப்பில் எந்த ஒரு குறையும் கண்டதில்லை.
நீங்கள் பாடத்தை தவிர்த்து மற்ற கருத்துள்ள விஷயங்களையும் வகுப்பில் உரையாடுகின்றீர்கள்.
அது எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. அடுத்த வருடமும் தமிழ் ஆசிரியராக நீங்களே
வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.
இப்படிக்கு உங்கள்
அன்புள்ள மாணவி
N.புனிதா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM019
வணக்கம் ஐயா
ஐயா நீங்க நல்லா வகுப்பு
எடுப்பீங்க. எல்லோரிடமும் நல்லா பேசுவீங்க. நீங்க எப்படி சமூகத்தில் அக்கறை உள்ளவராக
இருக்கின்றீர்களோ அதே மாதிரி நானும் சமூகத்தில் அக்கறை உள்ளவராக இருப்பேன் ஐயா. நீங்கள்
100 வருடங்கள் நன்றாக வாழ்வதற்கு என்னுடைய
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா. உங்களையும் நீங்கள் எடுக்கும் பாடத்தையும் நான் ரொம்ப
miss பன்றேன் ஐயா.
S.சூர்யா
(இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM031
மதிப்பிற்கும் மரியாதைக்கும்
உரிய ஐயா அவர்களுக்கு. ஐயா உங்கள் மேல பெரிய நம்பிக்கையும் மரியாதையும் உண்டு. நீங்க
சொன்ன மாதிரியே என் சிந்தனைகளை சமூகத்திற்கு பயன்படுத்துகிறேன் ஐயா. ஒரு உண்மைய சொல்லனும்னா
நீங்க வந்ததுக்கப்புறம்தான் சிந்திக்கவே தொடங்கினேன். நீங்க என் வாழ்க்கையின் பெரிய திருப்புமுனை ஐயா.
ஐயா உங்களை ஒரே ஒரு தடவை அப்பா என்று அழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்கள்
நம்பிக்கைக்குரிய மாணவி சு.சூர்யா
S.வீரசத்யா
(இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM036
ஐயா நீங்கள் பெண்ணியம்
தொடர்பாக பல சிந்தனைகளை எங்களுக்கு சொன்னீர்கள் அதில் பல விஷயங்களை கற்றுக் கொண்டோம்.
பெண்கள் தொடர்பாக பல விஷயங்களை கற்று கொடுத்து எல்லோரையும் அந்த சிந்தனைக்குள் அழைத்து
சென்றீர்கள். அது மிகவும் பிடித்திருந்தது. உங்களின் மூலம் எங்கள் வகுப்பறையில் பல
சிந்தனையாளர்களை கண்டேன். மூன்று ஆண்டுகளில் நாங்கள் மூன்றாம் ஆண்டு உங்களின் மூலம்
பல திறமையும் நடிப்பையும் பாடலையும் கற்றுக்கொண்டோம். நன்றி ஐயா. நீங்கள் இல்லையென்றால்
பல திறமைகள் எங்கள் மாணவர் முன்னால் மறைந்து போயிருக்கும். உங்களுக்கு நன்றி சொல்ல
கடமைபட்டிருக்கோம். நீங்கள் சொன்னீங்க என்னுடைய முயற்சியில் தோல்வி பெற்றுவிட்டேன்
என்று. நான் அப்படி செய்திருந்தால் மன்னித்துவிடுங்கள். கண்டிப்பா என்னுடைய முயற்சியை நான் தொடங்குகின்றேன் ஐயா. நான் ஒரு நல்ல ஆசிரியர்
முன்னால் ஒரு நல்ல மாணவியாக இருக்கவில்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கின்றது.
இனியும் நான் இப்படி இருக்க மாட்டேன் ஐயா. என்னுடைய ஆளுமை திறனை வளர்த்துக்கொள்கிறேன்.
நன்றி ஐயா.
P.சூரியா
(இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM030
மதிப்பிற்குரிய ஐயா
அவர்களுக்கு. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா. காரணம் நீங்க பாடம் எடுக்கும் விதமும்
மாணவிகளுக்கு புது புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு நல்ல ஆசிரியராகவும் மாணவிகளுக்கு சிறந்த சகோதரராகவும்
மாணவிகளின் தனித்திறமையை வெளிக்கொணரும் குருவாகவும் பெண்களை மதிக்கும் மாபெரும் பண்பும்
இந்த சமூகத்தின் மேல் உள்ள அக்கறையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கம் ஐயா. என் வாழ்க்கை
காரணமாக இருப்பவர்களில் நீங்களும் ஒன்று ஐயா. உங்களை நான் எப்பொழுதும் மறக்க மாட்டேன்
ஐயா. என் சகோதரிகளுக்கும் உங்களைப் போன்ற ஒரு சிறந்த ஆசிரியர் கிடைக்க எனது வாழ்த்துக்கள்
ஐயா. வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன் ஐயா!
B.திவ்யா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM009
வணக்கம் ஐயா. நீங்கள்
முதன்முதலில் எங்கள் வகுப்பிற்கு வந்தபோது ரொம்ப அற்புதமாக பேசினீங்க. நீங்க முதல்
வகுப்பில் பண்பாடு பற்றி கூறியபோது அதை பற்றிய தெளிவான புரிதல் எங்களுக்கு கிடைத்தது.
உங்களுக்கு பிடித்த பாடத்தையே நீங்கள் நடத்த அனுமதி தந்தார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியை
அளித்தது. மனிதகுல வரலாறு பற்றி நீங்கள் கூறியபோதுதான்நான்
அறிந்துகொண்டேன். சமூகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறை, ஆர்வம், உணர்வு ஆகியவற்றை
கண்டு நான் சமூகத்தைப் பற்றி ஓரளவு சிந்திக்க ஆரம்பித்தேன். இன்றைய தகவல் பற்றி ஒவ்வொருவரையும்
கூற செய்வதால் நிறைய செய்திகளை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. இதுவொரு சிறப்பான ஒன்றாக
உள்ளது. வகுப்பில் குழு விவாதம் என்ற முயற்சி மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இதன் மூலம்
பலரின் அனுபவங்களைக் கருத்துக்களை பரிமாற்றம் செய்ய முடிந்தது. எங்களுடைய கருத்துக்களைக்
கேட்பது மூலம் ஓரளவு எங்களால் சிந்தித்து செயல்பட முடிந்தது. எங்களுக்கு நீங்கள் எல்லா
விதத்திலும் சுதந்திரம் அளித்தீர்கள். நீங்கள் எனக்கு நிறைய தன்னம்பிக்கை அளித்தீர்கள்.
அதனால் எனக்கு நிறைய தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்பட்டது. அதன்பிறகுதான் எனக்குள்
என்னுடைய திறனை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பெண்ணியம் பற்றி இதுவரைக்கும்
நான் அறிந்ததில்லை. உங்கள் மூலமாக நான் அறிந்துகொண்டதோடு அதை பற்றிய விழிப்புணர்வும்
எனக்கு ஏற்பட்டது. அதனால் சமூகத்தில் பெண்கள் நிலையை அறிய முடிந்தது. மேலும் நீங்கள்
ஒரு நல்ல வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் உள்ளீர்கள். உங்களிடமிருந்து நான் நிறைய
கற்றுக்கொண்டேன். எங்களுக்கு எந்த ஐயம் ஏற்பட்டாலும் அதை தெளிவுபடுத்துவது எனக்கு மிகவும்
பிடித்தது. பாடத்தை மட்டுமே கூறாமல் மற்றச் செய்திகளையும் எங்களிடம் பகிர்ந்து கொள்வது
மிகவும் பிடித்தது. எல்லோரையும் ஊக்குவிக்கும் தன்மை எனக்கு பிடித்தது. இந்த பண்பை
தங்களிடமிருந்து நானும் கற்றுக்கொண்டேன். என்னிடம் தலைமைப்பண்பு கவிதை எழுதும் திறன்,
படம் வரைதல் இவையெல்லாம் நீங்கள் கூறியபோதுதான் நான் சிறந்திருப்பதை அறிந்துகொண்டேன்.
நாங்கள் ஏதாவது உதவி கேட்டால் செய்து கொடுப்பீர்கள். ஆனால் எனக்கு மிகப்பெரிய வருத்தம்
தங்களுக்கு உணவினை அளிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த சிறிய உதவியை செய்ய முடியாது
போனது வருத்தம் அளித்தது. உதவி செய்ய முடியாவிட்டாலும் உங்களின் மகிழ்ச்சியே எனக்கு
நிறைவை அளித்தது. இந்தக் கல்லூரியில் எந்தப்
பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாகக் கையாளும் திறன் எனக்கும் ஊக்கத்தை அளித்தது. நீங்கள்
எங்களிடம் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளீர்கள். தற்போது நீங்கள் எடுக்கும்
முயற்சியில் எங்களுக்கு ஒரு வாய்ப்பினை அளித்துள்ளீர்கள். அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி
ஐயா. அந்த முயற்சி நன்மை தருவதாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. எனக்கு சிறு அச்சம்
என்னவென்றால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது. நீங்கள்
செய்த அனைத்து உதவிகளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி ஐயா.
சமூக மேன்மைக்கு
சமூக மாற்றத்திற்கு
சமூக நன்மைக்கு
உங்கள் சேவை
சமூகத்திற்கு தேவை
B.விஷ்ணுபிரியா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM041
வணக்கம் ஐயா, ஐயா உங்களை
எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா. நான் வகுப்பில் இருக்கும்போது நீங்கள் வகுப்பில் வந்தாலே
போதும் எனக்கு ரொம்ப ரொம்ப பயமா இருக்கும் ஐயா. எதானவது என்னை கேள்வி கேப்பிங்களே அப்படின்னு
நான் மறஞ்சி மறஞ்சி உட்காருவேன் ஐயா. நீங்க எதனாவது கேள்வி கேட்டாலே எனக்கு ரொம்ப பயமா
இருக்கும் ஐயா. அதற்கு அப்பறம்தான் எனக்கு தெரிய வந்தது, இன்னம் என்னை மேன்மேலும் உயர்த்துகிறீர்கள்
என்பது. அதே போல் என்னை நல்லா பாராட்டுவீங்க. தப்பா சொன்னாலும் அதை சரிபடுத்திக்கோங்கம்மா
என்று மிகவும் பண்பா பேசுவீங்க ஐயா. உங்கள மாதிரி நான் வேற யாரையுமே பார்த்ததே இல்ல
ஐயா. ரொம்ப நல்ல மனிதராக இருக்கிறீங்க ஐயா. அது எனக்கு ரொம்ப பிடிக்குது ஐயா. எல்லா
இடங்களிலும் இயல்பா இருப்பீங்க ஐயா. இப்பவும் என்னைப்பற்றி பேசுனது ரொம்ப பிடிக்குது
ஐயா. மணி அடிச்சிடிச்சு ஐயா. மன்னித்துவிடுங்கள் ஐயா. நிறைய எழுதனும் அப்படின்னு நினைத்தேன்.
சரி, நன்றி ஐயா.
இப்படிக்கு உங்கள்
உண்மையுள்ள மாணவி பா.விஷ்ணுபிரியா
K.விஜி (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM040
வணக்கம் ஐயா.
உன்ன எனக்கு ரொம்ப
பிடிக்கும் சார். நீங்க எனக்கு பாடம் எடுப்பது எனக்கு பயனுள்ள வகையில் அமைந்தது சார்.
பெண்களின் அடிமைத்தனத்தைப் பற்றி எனக்கு ரொம்ப தெரியாமல் இருந்தது சார். உங்கள் மூலமாக
நான் தெரிந்துகொண்டேன் சார். சமூகம் என்றால் எனக்கு தெரியாது சார். அதைப்பற்றியும்
நீங்கதான் சார் எனக்கு சொன்னீங்க சார். நன்றி சார். இதை எல்லாம் எனக்கு கற்று கொடுத்ததுக்கு.
உங்களை போலவே நானும் பாடம் எடுக்கனும் என்று ஆசை இருக்கு. நானும் உங்களை மாதிரி பாடம்
எடுப்பேன் சார். உங்களை எப்போதும் மறக்க மாட்டேன் சார். உங்களைப் பற்றியும் உங்களிடம் கற்றதைப் பற்றியும் எல்லோரிடமும் பயனுள்ள
மாதிரி பகிர்ந்துகொள்வேன் சார். உங்களையும் உங்க பாடத்தையும் ரொம்ப miss பன்றேன் சார். நன்றி.
உங்கள் உண்மையுள்ள
மாணவி க.விஜி
C.சாருமதி (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM030
எனக்குள் இருந்த திறமைகளை
வெளியில் கொண்டு வந்தது நீங்கள். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பல முறை உங்களை
பார்த்து வியந்து இருக்கிறேன். நீங்கள் பேசுவது நடிப்பது எனக்கு பிடிக்கும். என்னுடைய
திறமைகளை நான் சரியாக பயன்படுத்தவில்லை ஐயா. என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் கூறும்
நிறை குறைகள் எனக்கு பிடிக்கும். என்னை ஒரு பேச்சாளராக உருவாக்கியிருக்கிறீர்கள். அதற்கு
உங்களுக்கு நன்றி. அனைத்து பெண்களுக்கும் ஹீரோ அப்பா. எனக்கும் அதுவே. ஆனால் இந்த கல்லூரியில்
மூன்றாம் ஆண்டு தமிழ் துறையில் நீங்கள்தான்
ஹீரோ. உங்கள் சமூக உணர்வு எனக்கு பிடிக்கும். இந்த காலத்திலும் இப்படி அக்கறையாக உள்ளார்
என்று நான் வியந்து இருக்கின்றேன் ஐயா. நான் உங்கள் கண்களுக்கு தவறாக இருந்தால் என்னை
மன்னித்துவிடுங்கள். நான் முன்பெல்லாம் மேடையில் ஏறுவதற்கு பயப்படுவேன். இப்போது அது
எனக்கு இல்லை. அதற்கு காரணம் நீங்கள். நான் நல்லா பேசுவேன் என்பதே நீங்கள் சொல்லித்தான்
தெரியும். ஆனால் நான் அதை சரியாக முழுமையாக பயன்படுத்தவில்லை. வாய்மொழித்தேர்விற்கு
வந்த ஐயா எனது குரல் அழகாக இருக்கு என்று கூறினார். நீங்கள் ஒரு பேச்சாளர் போன்று எனக்கு
தெரிகின்றது என்று கூறினார். அதற்கு காரணம் நீங்கள்தான் ஐயா. நீங்கள் எனக்கு ஒரு மறு
தந்தை ஐயா. நான் இந்த கல்லூரியை விட்டு வெளியே சென்றாலும் நான் உங்களை மறக்க மாட்டேன்.
என் திறமையை வெளிப்படுத்துதல் காரணம் நீங்கள் ஐயா. உங்களை நான் ரொம்ப miss பன்னுவேன்
ஐயா.
V.வைஸ்ணவி (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM034
வணக்கம் ஐயா. நான்
வைஷ்ணவி ஐயா. நான் சத்தமாக பேசுவேன் என்பது நான் அறிந்ததே. ஆனால், இப்படிலாம் பேசுவேன் என்பதை உங்களால்தான் ஐயா நான் உணர்ந்தேன். இதுவரைக்கும்
நான் எங்கேயும் எழுந்து பேசுனதே இல்லை. அமர்ந்துகொண்டே நண்பரிடம் பதில்களையோ அல்லது
நான் பேச நினைப்பதையோ கூறிக்கொண்டு இருப்பேன். என்னிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்தமைக்கு
நன்றி ஐயா. பேசுவதற்கே தயங்கிக் கொண்டிருந்த நான் பாவேந்தர் பேரவை நிறைவு விழாவின்போது
கருத்தரங்கில் மேடையில் அனைவரின் முன்னிலையில் பேசியதற்கு காரணம் நீங்கள்தான். உங்களிடம்
பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இருக்காது. அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகுவீர்கள்.
சிறியதாக ஒரு செயல் செய்தால்கூட அதற்காக பாராட்டுவீர்கள். எல்லோரிடமும் அந்த குணம்
இருக்காது. அந்தப் பாராட்டுக்களே எங்களை மேன்மேலும் வளர்க்கிறது. நான் இதுவரை யாருடைய
வகுப்பையும் கட் அடிச்சிட்டு போனதில்லை. ஆனால் முதல் முறையாக அன்று கடைசி மணிநேரம்
உங்களுடைய வகுப்பை கட் அடிச்சிட்டு போயிட்டேன். அதற்காக நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன் ஐயா. அதற்காக என்னை
மன்னிச்சிடுங்க ஐயா. உணவுத் திருவிழாவின் பொழுது நான் எடுத்திட்டு வந்த உணவை நீங்கள்
உண்ணவில்லை என்று என்னிடம் கேட்டு நீங்கள் அதனை உண்டீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக
இருந்தது ஐயா. உங்களுடைய சமூகப்பார்வையை நானும் பின்பற்றுவேன். பெண்ணியம் வகுப்பு எனக்குள்
ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு என்ன எழுதுவது என்பது தெரியவில்லை.
உங்களுடைய கவிதை, டப்பிங் பாடல்கள் எல்லாம் உணர்வுபூர்வமாக இருந்தது. எதைப்பற்றியாவது
கூறும்போது அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுவீர்கள்.
M.தெய்வசத்யா (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM032
வணக்கம் ஐயா நான் தெய்வசத்யா.
உங்களை ரொம்ப பிடிக்கும்.
நீங்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக பார்ப்பீர்கள். யார் என்ன உதவி கேட்டாலும் உடனே மறுக்காமல்
செய்துவிடுவீர்கள். நீங்கள் மிக அருமையாக எல்லோருக்கும் புரியும் நடையில் பாடம் நடத்துவீர்கள்.
ஒரு நாள் நான் கடைசி மணி நேரத்தில் உங்கள் வகுப்படை கட் அடித்து சென்றோம். ஆனால் அதை
நீங்கள் என்னிடம் கேட்கவில்லை. அதை நினைத்து நினைத்து நான் மிகவும் வருந்தினேன். மன்னிக்கவும்
ஐயா. உங்களை முன்மாதிரியாக வைத்து தான் இனி நான் இருக்கப்போறேன். உங்களுக்காக நாங்கள்
பெண்ணியம் பாடத்தை கேட்டு வாங்கினது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த நாளில் உங்களது
மனதை கஷ்டப்படுத்தியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையை
வளர்ப்பீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் இந்த கல்லூரிக்கு வந்த பிறகு எங்களுள் ஒரு
மாற்றம். நீங்கள் சமுதாயத்தை மாற்றுவதில் குறிக்கோளாக உள்ளீர்கள் என்பதை நான் உணர்ந்தேன்.
நான் இதுவரை கண்டதில்லை. யாரிடமும் பார்க்காத உங்களிடம் உள்ள திறமையை. நீங்கள் மிக
அருமையாக பாடுவீர்கள். நம்ம குழுவில் தினமும் ஒரு பாடலை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் கவிதை, கட்டுரை, பாட்டு போன்ற திறமையுள்ள சிந்தனைகள் உங்களிடம் உள்ளது. உங்களைப்
பற்றி சொல்ல வார்த்ததை இல்லை. உங்களிடம் நான் தினமும் கவனிப்பது ஒருவரை தட்டிக்கொடுத்து அவரை உயர்த்துவது. நீங்கள் வந்தபிறகுதான் என்னிடம்
தைரியம் பிறந்தது. நீங்கள் எனக்கு feedback
கொடுத்ததற்கு ரொம்ப நன்றி ஐயா. Miss u sir.
மீண்டும் கூறுகிறேன்.
உங்கள் சிந்தனைகளையும் திறமைகளையும் காண இரண்டு கண்கள் போதாது என்று உணர்கிறேன்.
M.ரோஸி (இளங்கலை தமிழ் இறுதியாண்டு 16UTAM022
ஐயா நீங்கள் பாடம்
நடத்தும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வித கூச்சமும் இன்றி பாடத்தை நடத்துவீர்கள்.
ஏன் நம் துறை ஆசிரியை ஒருவம் பூப்புக்காலம் பற்றி பேசுவதற்கு அவ்வளவு தயக்கத்துடன்
நடத்தினார். இது மட்டும் அல்லாமல் உங்களுக்கே தெரியும் என்று கூறி அந்த பக்கத்தையே
நடத்தவில்லை. ஆனால் நீங்கள் பெண்ணியம் பற்றியம்
சமூகத்தைப் பற்றியும் எங்களுக்கு எவ்வித தயக்கமும் இன்றி நடத்துவது எனக்கு ஆச்சரியமாக
இருந்தது. ஐயா நீங்க எப்பொழுதும் இதுபோலவே இருங்கள். யாருக்காகவும் உங்கள் திறமையையும்
நீங்கள் கற்றுத்தரும் முறையையும் மாற்றி கொள்ளாதீர்கள் ஐயா. நான் முதன்முதலில் பாடம்
நடத்தும் முறைஐயயும் சமூகத்தை அறிந்துகொள்ளும் முறையையும் உங்களிடம்தான் கற்றுக்கொண்டேன்.
நான் எவ்வளவுதான் வகுப்பில் உங்களுக்கு தொந்தரவு தந்திருந்தாலும் என்னை மன்னித்துவிடுங்கள்
ஐயா. நான் கண்டிப்பாக இனிமேல் சமூகத்தைப்பற்றி தெரிந்து கொள்வேன். நீங்கள் என்னை “சற்றேனும்
உணரும் அறிவு அறிந்தால் முயற்சி செய்“ என்று கூறியிருக்கின்றீர். எனக்கு அந்த உணரும்
அறிவு இருக்கின்றது என்று நிரூபிக்க நாளை முதல்
சமூகம் பற்றியம் நாட்டில் நடப்பவை பற்றியும் தெரிந்துகொள்கிறேன் ஐயா. இதுபோல் யாரும்
எனக்கு இதுபோன்று feed back சொன்னது கிடையாது. ஆனால் நீங்கள்சொல்லியிருக்கிறீர்கள்.
அதனால் மிகவும் நன்றி பாராட்டி மகிழ்கிறேன் ஐயா. நான் இதுவரை எழுதியது அதாவது பேச்ச
மொழியில் எழுதியிருக்கின்றேன். நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள்.ஏனென்றால் உங்களை
ஐயா என்ற முறையில் பார்த்த நாட்களைவிட அண்ணன் என்ற முறையில் பார்த்த நாட்களே அதிகம்.
ஐயா நீங்கள் எப்பொழுதும் சமூகம் பற்றி எங்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருங்கள். ஐயா
நீங்கள் வெளிப்படையான மனிதர். எதுவாக இருந்தாலும் உடனடியாக தைரியமாக வெளிப்படுத்துவீர்கள்.
கவிதாவிற்கும் ரோஜவிற்கும்தான்
மல்லாட்டையா அண்ணா. எனக்கும் தயவுடன் தாங்க அண்ணா. அண்ணியை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
பாப்பா பிறந்தவுடன் எனக்கு மிட்டாய் தாங்க. இதற்கு முன் நாம் same peach போட்டோட்.
அதனால் இரண்டு மிட்டாய். சரிதானே அண்ணா.
ஐயா நல்லா சாப்பிடுங்க.
பாடம் நடத்துவதில் எனக்கு எந்த குறைபாடும் தெரியவில்லை. அதனால் இதுபோலவே பாடம் நடத்துங்க.
சமூகம் பற்றி எனக்க எப்பொழுதும் சொல்லுங்க ஐயா. நான் இதற்கு முன் எதுவும் தெரியாமல்
இருந்தேன். நீங்க எங்களுக்கு பாடம் எடுக்க வந்தபிறகுதான் நான் கொஞ்சம் வெளி உலகம் பற்றி
தெரிந்துகொண்டேன். இதனைக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி ஐயா. சிவா ஐயா நீங்க எப்பவும்
எல்லாரை விடவும் எனக்கு சிறந்தவர் சிறந்தவர் ஐயா.
N.ஜனரஞ்சனி _ 1st BCA 18UCAP057
உங்களை எங்களுக்கு
ரொம்ப பிடிக்கும். நீங்கள் எனக்கு முன்மாதிரியான ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல் என்னை
நன்றாக பாராட்டி என்னுடைய திறமைகளை அச்சமின்றி வெளிக்கொணற உதவி செய்தீர்கள். அதுமட்டுமின்றி
நீங்கள் அனைவருக்கும் ஊக்கப்படுத்துவது எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் தினம் தினம்
தகவல் சொல்வது நல்ல அறிவாற்றலை மேம்படுத்துகின்றது. நீங்கள் எங்கு பார்த்தாலும் வணக்கம்
வைப்பது நல்ல பண்பை எங்களுக்கு தூண்டுகிறது. உங்களிடம் எந்த ஒரு எதிர்மறை பண்பும் நான்
கண்டது இல்லை. வலைதள சிறப்பு விருந்தினராக வந்தீங்க. அது எங்களுக்கு முன்மாதிரியாக
இருந்தது ஐயா!
B.சந்தியா_ 1stBCA 18UCAP077
வணக்கம் ஐயா! உங்களை
எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ஐயா. தலைக்கணம் இல்லாமல் தன்னடக்கத்தோடு இருப்பீங்க. எங்கயாவது
பார்த்தால் நீங்களே வணக்கம் சொல்லி சாப்பிடீங்களானு கேப்பீங்க. வகுப்பிலும், பாடத்திட்டம்
மட்டும் இல்லாமல் பொதுவாகவும் ரொம்ப பேசுவிங்க. அது ரொம்ப பிடிக்கும். வகுப்பில் இருக்கிற
ஒவ்வொரு மாணவியும் ஒருவருக்கொருவர் முன்னோடியாக இருக்கனும்னு ஊக்கப்படுத்துவது ரொம்ப பிடிக்கும் ஐயா. எங்களோட
திறமைகள் எங்களுக்கே தெரியாமல் வெளிவந்தது ஐயா உங்கள் வகுப்பில். ரொம்ப நன்றி ஐயா!
ரா.ரம்யா _ 1st BCA (NSS)
வணக்கம் ஐயா... நீங்க
ரொம்ப ரொம்ப நல்லவர் ஐயா. உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐயா. நான் உங்க வகுப்பில்
இல்லை. ஆனாலும் நீங்களென்றால் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுமட்டும் இல்லாமல்
நீங்க நல்லா நடத்துவீங்க ஐயா... (NSS)ல் நீங்க பேசுறது நல்லா இருக்கும். நாங்க உங்களுக்கு
வணக்கம் வைக்கலனாலும் நீங்க வணக்கம் சொல்றது பிடிக்கும். நீங்க எல்லாரையும் பார்த்து
சாப்டீங்களாம்மா என்று கேட்பது பிடிக்கும் ஐயா. எனக்கு உங்க கிட்ட நேர்மறை பண்புகள் மட்டும்தான் தெரியும், எதிர்மறை
பண்புகள் தெரியாது. நான் எழுதியதில் எதாவது தவறு இருந்தால் என்னை மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள்
மாணவி ரா.ரம்யா
K.ஐஸ்வர்யா 1st COMPUTER SCIENCE 18UCSC019
வணக்கம் ஐயா. உங்களுடைய
வகுப்பு எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. உங்களுடைய முயற்சிகள் எனக்கு ரொம்ப பயனுள்ளதா
இருந்துச்சு. முக்கியமா அந்தக் கதைகள் கலந்துரையாடல் மிகவும் சரியா பயன்பட்டது. உங்களை
குறை சொல்ற அளவுக்கு தகுதி எனக்கில்ல ஐயா. இருந்தாலும் இந்த குறையை வேறு யாரையும் சொல்ல
வைக்காம பாத்துக்குறது உங்ககிட்ட படித்த மாணவி என்னுடைய பொறுப்பு. நீங்க அந்த தினமும்
ஐந்து வாக்கியங்கள் எழுத சொன்னீங்களே, அதை கொஞ்சம் தொடர்ந்து இறுதி வகுப்புவரை செய்யுங்க
ஐயா. உங்க வகுப்பில் மாணவிகள் எல்லோரும் பேசுறாங்க ஐயா. அப்படி பேசாம இருக்க ஏதாச்சும் ஒரு வழி யோசிங்க ஐயா. உங்க வகுப்புல
என்ன பேச வச்சு என்னோட திறமையை தட்டிக்கொடுத்து உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி ஐயா.
முக்கியமா என்னோட பெயர் இன்னிக்கு மூன்றாம் ஆண்டு சகோதரிகள் பல பேருக்கு தெரிஞ்சதுக்கு
காரணம் “’மகளிர் தினம்“ அதுல பேசுனது நானா இருந்தாலும் கருத்துக்கள் நீங்க சொன்னது.
ரொம்ப நன்றி ஐயா.
இப்படிக்கு உங்களிடம்
பயின்ற மாணவி ஐஸ்வர்யா
K.ரிஹானா பர்வின் 2nd MATHS 17UMAT114
ஐயா வணக்கம், உண்மையின்
அடையாளமாய் சமூக பொறுப்பை தன் கடமையாய் ஊக்கத்தின் உறுதியாய் நின்ற ஆசானே.
ஆரம்பம் பெண்ணுக்கு
உண்டு, முடிவு யாருக்கு இல்லை என்று கூறியவரே
இந்த பிரேத உடல் அழிவை
நோக்கி செல்லலாம். ஆனால் உன் ஆன்மா ஞானம் இவை பெரும் வளர்ச்சியை நோக்கி செல்லும்
திறன் அறியாததை எங்களை
தெளிய வைத்தவரே வேண்டுகிறோம். மீண்டும் உங்கள் மகளாய் ஞான உலகில் பயணிக்க வேண்டுகிறோம்.
காற்று தூய்மையானது
ஆனால் பல சூழ்நிலையில் காற்றை மாசுபடுத்த நேரிட்டது கல்லூரி தலைமையிடம் அந்த நிலையை
எண்ணி வேதனையுடன் மன்னிப்ப கேட்கிறோம்.
தலை நிமிர்ந்து நில்லடா
என்ற வாக்கியத்தை மாற்றி தலைநிமிர்ந்து நில்லம்மா என்று கூறிய ஆசானே.
நம் சமூக மேன்மைக்காக
நம் நாட்டின் ஓர் முனையில் நின்று குரல் கொடுப்போம்.
A,ஆர்த்தி 2nd MATHS 17UMAT001
நல்ல பண்புகளை உங்கள்
வகுப்பில் கற்றுக்கொண்டோம் அய்யா. அதுக்கு நன்றி ஐயா. நீங்கள் தினமும் ஒரு செய்தி கூற
சொல்லி அன்றாட நிகழ்வுகளைப் பேசுவீர்கள். அதற்கு நன்றி. எப்படி தமிழ் பண்பாடு என்று
பேசுவீர்கள். அது நன்றாக இருக்கும். நீங்கள் எடுக்கும் தமிழ் வகுப்பு மிகவும் பிடிக்கும்.
ஆனா இனி அந்த மாதிரி வகுப்பு வராது. அத
miss பண்ணுவேன். நீங்கள் கூறும் கவிதை உணர்ச்சிகரமானது. நீங்கள் நாட்டைப் பற்றி
யோசிக்க கற்றுக்கொடுத்து இருக்கீங்க. அதுக்கு நன்றி. உங்கள் வகுப்பில் நான் படித்ததற்கு
மிகவும் ஆனந்தம் கொள்கிறேன். நன்றி அய்யா.
P.சர்மிளா பானு 2nd MATHS 17UMAT120
வணக்கம் ஐயா, நீங்கள்
நடத்தும் பாடத்தில் எந்த குறைகளும் இல்லை. நீங்கள் தரும் பல பதிய தகவல்கள் எனக்கு மிகவும்
பயன்படுகின்றது. இன்றைய தகவல் மூலம் பலர் கூறும் செய்திகள் பெரிதும் பயனுள்ள வகையில்
இருந்தது. இதனை அனைத்து வகுப்பிலும் செயல்படுத்துங்கள். ஒரு குறை உண்டு. நீங்கள் எங்களை
அமைதியாக இருக்கனும் என்றாலும் சிலர் பேசுவது வழக்கம். அதனால் நீங்கள் சிறிது கண்டிப்பாய்
இருக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பாய் நடந்துகொண்டால் மாணவர்கள் நீங்கள் கூற வருவதை
அமைதியாக கேட்பார்கள். உங்களைப்போல் ஒரு சிறந்த ஆசிரியரை என் வாழ்நாளில் மீண்டும் பார்க்க
முடியுமா என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் கூறிய அறிவுரைகளை பயன்படுத்தி என் வாழ்வில்
நிச்சயமாய் ஓர் சிறந்த இடத்திற்கு செல்வேன். உங்கள் மாணவி என்று நான் கூற மிகவும் பெருமை
கொள்கிறேன். ஏனென்றால் என் திறமையை வெளிக்கொண்டு வந்தவர் நீங்கள் ஐயா. மீண்டும் வாய்ப்பு
இருந்தால் நாம் ஓர் வகுப்பில் சந்திப்போம்.
இப்படிக்கு உங்களால்
என் திறமையை உணர்ந்த மாணவி ஷர்மிளா பானு
ஐயா! உங்களால் ஓர்
நல்ல பேச்சு ஆற்றலை வளர்த்துக் கொண்ட மாணவி ஷர்மிளா பானு. உங்கள் பேச்சும் பல கருத்துக்களும்
எங்கள் அனைவருக்கம் மிகவும் பயன்பட்டது. உங்கள் வகுப்பில் பலரின் திறமைகள் வெளிவந்தது.
பலரை ஊக்கப்படுத்தியும் முயற்சி செய்ய கூறியும் பலரின் படைப்பை வெளிக்கொண்டு வர செய்த
ஓர் சிறந்த வழிகாட்டி நீங்கள் ஐயா. அடுத்த பருவத்தில் மீண்டும் நீங்கள் வரவேண்டும்
என்று எல்லோரின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். வரும் காலத்தில் நான் ஓர் சிறந்த கதை
எழுத்தாளராகவும் ஓவியம் கவிதையும் எழுத முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன். வாழ்க்கை
என்னும் வெற்றியை நான் அடைய ஓர் சிறந்த தூணாக நீங்கள் அமைந்துள்ளீர்கள். நன்றி என்றும்
சிறிய வார்த்தையை கூறி நான் உங்களை சிறியவராக்கவில்லை. அதற்கு பதில் என் வெற்றியின்
பெரிய பங்கு உங்களுக்கு உண்டு ஐயா! மீண்டும் சந்திப்போம்...
பெயர் குறிப்பிடாத மாணவி
மதிப்பிற்குரிய அய்யா,
நீங்க பாடம் நடத்துவது மிகவும் பிடிக்கும் அய்யா. மாணவிகள் புத்தகம் வாயிலாக பெறும்
அறிவோடு சமூக அறிவையும் பெற வேண்டும் என்று நீங்கள் செயல்படுவது மிகவும் நன்றாக உள்ளது.
வகுப்பில் இன்றைய தகவல் பேசுவது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அன்றாட செய்திகள், செய்தித்தாள்கள்
வாயிலாக தகவல்களை தெரிந்துகொள்ள தவறினாலும் நாங்கள் வகுப்பில் வந்து இன்றைய தகவல் மூலம்
அறிந்துகொள்கிறோம். தினமும் ஐந்து வாக்கியங்கள் எழுதுவது மூலம் தமிழில் எழுதும்போது
வரும் பிழைகளை திருத்திக் கொள்கிறோம். எங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கு சிறந்த
வழிகாட்டியாக உள்ளீர்கள் அய்யா. நீங்கள் எங்களை மிகவும் ஊக்குவிக்கிறீர்கள் அய்யா.
நாடகம் எழுதிய அனுபவம் நன்றாக இருந்தது. எங்களது தனித்திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு
அளிக்கிறீர்கள் அய்யா. இதுபோலவே அடுத்தடுத்து வரும் மாணவிகளுக்கும் உங்கள் வகுப்புகளைக்
கொண்டுபோங்க.
G.விக்னேஸ்வரி 2nd MATHS 17UMAT063
உங்கள் வகுப்பு மிக
மகிழ்ச்சியாக இருக்கும். இதைத்தவிற உங்களைப் பற்றி கூறுவதற்கு வார்த்தை இல்லை ஐயா.
அறிவு சார்ந்த கருத்துக்களை வகுப்பில் கூறுவது எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.
S.பவித்ரா 2nd MATHS 17UMAT039
நீங்க எங்கள் அனைவருக்கும்
புரியும்படி பாடங்களை எடுக்கிறீங்க ஐயா. எங்கள் வகுப்பில் நிறைய படைப்பாளிகளை உருவாக்க
உங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தீர்கள் ஐயா. உங்கள் முயற்சி கண்டிப்பாக வீண் போகவில்லை
ஐயா. உங்களால் இந்த வகுப்பில் நிறைய படைப்பாளிகள் உருவாகி இருக்காங்க ஐயா. இந்த வகுப்பில்
நிறைய மாணவர்களுடைய திறமையை அவர்களுக்கு உணர வைத்திருக்கீங்க. வாழ்க்கையில் மாணவர்களுக்கு
மதிப்பெண் மட்டும் முக்கியம் இல்லை என்பதை நீங்க உணர்த்திருக்கீங்க ஐயா. உங்களை நாங்கள்
கண்டிப்பாக miss பண்ணுவோம்
U.காயத்திரி (இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு) 18UENG016
ஐயா, நீங்கள் மிகவும்
நன்றாக பாடம் எடுக்கிறீர்கள். அதில் எந்தவொரு
குறையும் இல்லை. நீங்கள் நடத்தும் அனைத்து பாடமும் எனக்கு நன்றாக புரிகிறது.
பாடத்தை தவிர்த்து பல விஷயங்கள், பல தகவல்கள் போன்றவற்றை எங்களிடம் பகிர்ந்துக் கொண்டதற்கு
நன்றி. உங்கள் மூலம் பல விஷயங்களை நான் அறிந்துகொண்டேன். நீங்கள் இன்னும் கொஞ்சம்
strict ஆக இருந்தால், எப்போதும் கேட்கும் சலசலப்பு சப்தம் கேட்காது. நீங்கள் எல்லா
விதத்திலும் பொறுமையாக இருந்து எங்கள் சேட்டைகளை பொருத்துக் கொள்கிறீர்கள். அதற்கு
நன்றி.
-
-மு.வாணி, ஆஷிபா பேகம், வினோதினி BA I English, 2018
படிப்பதற்கு அறிவும்
செயலும் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவுக்கு எம்மாதிரியான
மாணவியர்களுக்கு
எங்கள் முனைவர் சிவக்குமார்
ஐயா அவரும்
அவருடைய ஊக்குவிக்கும்
பேச்சுத் திறமையும் முக்கியம்.
Arthi 18utam01
BA II தமிழ் இரண்டாம் ஆண்டு
உங்களை நாங்க ரொம்ப மிஸ் பண்றம் சார் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் இவ்ளோ நாள் யங்களுக்க இவ்ளோ கஷ்டப்பட்டு இருகிங்க இனி உங்களை மாறி ஒரு நல்லா ஒரு வகுப்பு ஆசிரியரை நாங்க பாத்ததே இல்ல உங்களை ரொம்ப புடிக்கும் சார் ஆன நீங்க படம் எடுக்கும் போது சார் எனக்கு போர் அடிக்கும் ஆன ஒரு சில நேரம் நா கவனிப்பான் உங்களுக்கு கோவம் வர மாறி நா நெறய தடவ தப்பு பண்ணி இருக்கான் அத நெனச்சி ரொம்ப பில் பண்ணி இருக்கான் சார் சாரி சார் உங்களை நாங்க கஷ்ட படுத்தி இருந்த எங்க வகுப்பு சார்பாக நா மன்னிப்பு கேக்குறான் ஆன நாங்க உங்களுக்கு எப்படி பட்ட மாணவர்கள் தெரியல ஆன நீங்க எங்களுக்கு ஒரு நல்லா வகுப்பு ஆசிரியர் நீங்க தா எங்களுக்கு நெறய விஷயம் சொல்லி குடுத்து இருக்கீங்க உங்களுக்கு அப்புறம் யாரு எங்க கிட்ட இன்றய தகவல் கேப்பாங்கனு தெரியல நீங்க சொல்லி குடுத்த நல்ல செய்லகளை நாங்க மறக்க மட்டம் நீங்க வேற ஒரு கல்லூரிக்கு போகும் போது யங்களை மாறி மாணவர்கள் இருபகல்னு தெரியல ஆன நீங்க எங்களுக்கு சிறப்பான ஒரு ஆசிரியர் உங்களை நாங்க எப்பவும் மறக்க மட்டம் சார் எங்க ஞாபகம் உங்களுக்கு இருக்குமான்னு தெரியல உங்களுடைய ஆசிரியர்பணி மேலும் வளர்ச்சி பெற எங்க வகுப்பு சர்ர்ப்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் சார் நீங்க போறது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார் அதும் எங்களுக்கு கல்லூரி இல்லாத நேரத்துல போறது ரொம்ப கஷ்டமா இருக்கு சார் மிஸ் யூ சார்
சமூக அக்கறையுடன், ஆணாதிக்கத்திற்கு எதிராக ஓர் இளம் பேராசிரியர் உருவெடுத்து வருவதைக் காண மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்! - சேகர்.
ReplyDelete👏🙏
Deleteநன்றி தோழர்
ReplyDeleteநன்றிம்மா சரண்யா 🤝👍
ReplyDelete