வீர நரகாசூரன்
புதியவன்
நரகாசூரனின் வீர
வாழ்த்துக்கள்...
ஆரிய ராமனிடம்
சுக்ரீவனைப்போல
குகனைப்போல
அனுமனைப்போல
அண்டி பிழைக்காமல்
திராவிட பழங்குடிகளையும்
அவர்களின்
காடுகளையும் விலங்குகளையும்
பாதுகாக்க
நேர்மையான தலைவனாக
வேலேந்தி போரிட்டேன்.
நேர்மையற்ற ஆரியர்கள்
வில்லெய்தி வீழ்த்தினர்.
உங்களைக் காக்கும்
போரில்
ஆரிய அம்புகளை
நெஞ்சில் தாங்கிய
என்னை
தீபம் ஏற்றி நினைத்து
மகிழ்வீர்களெனில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
வீரத்தையும்
சமூக மரியாதையையும்
போற்றி வாழ்க என்
திராவிடச் செல்லங்களே!
- பேரன்புடன் வீர
நரகாசூரன்
No comments:
Post a Comment