Monday, July 6, 2020

விடுதலைக்காக…

விடுதலைக்காக
புதியவன்

கடலலையாய் சிரிக்கத்தான்
வானம் காலமெல்லாம் அழுதது

விடியலாக வளரத்தான்
பொழுது இருட்டுக்குள்ளே ஒழிந்தது

தடையின்றி பரவத்தான்
காற்று உருவமின்றி அலைந்தது

வாழ்வில் புதுமை மலரத்தான்
நம் பழமை வாடி வதங்குது

ஒற்றுமை பூத்து மகிழத்தான்
வாழ்க்கை தனிமையிலே வேகுது

வெந்துவிட்டால் எளிமைதான்
கனிந்துவிட்டால் இனிமைதான்
மக்கள் வாழ்வின் விடியல்தான்

வர்க்கப் போரின் வழியில்தான்!





No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை