Wednesday, February 28, 2024

அணிலாடும் நெடுமரங்கள்

அணிலாடும் நெடுமரங்கள்

 

சுள்ளென்று எரித்தது வெயில்

மூன்று நெடு மரங்கள்

கோடிணைத்தால் முக்கோணம் வடிவுறும்

அகண்ட பாரதமாய் நிழலிட்டன

இலைகளுக்கு இடையில் நிலமெங்கும் வெண்புள்ளி

 

புலி கொன்ற மடமானின் எஞ்சிய எலும்பு

இந்திரனின் வஜ்ரம்போல் காட்சி தந்தது

 

ஒழுக்கமுள்ள எறும்புகள்

இந்திரனை மிதித்தபடி உணவு சேகரித்தன

 

 

ஒளிந்தொளிந்து தப்பித்து

ஓடோடும் பெண் அணிலை

மரத்திற்கு மரம் மாறி

அணிலாடும் ஆணினங்கள்

வன்புணர்ந்து விளையாடின

 

வில்லாடும் ராமன்

அணில் முதுகை வருடியபடி

நிழலாடி மகிழ்ந்திருந்தான்

 

சில்லிட்டு காற்றடிக்க

அணில்களால் கிளரப்பட்ட ராமன்

சிற்றின்ப தீனிக்கு புராணமெல்லாம் நினைவசைத்தான்

 

பார்வதியை மோகித்து மகள் புணர்ந்த பிரம்மன்

நிர்வாணத்தை எட்டிப்பார்த்து தலை இழந்த பிரம்மன்

 

அகலிகையை ஏய்த்த இந்திரன்

துளசியை ஏய்த்த ஸ்ரீவிஷ்ணு

நாரதனின் வில் ஏங்க

அறுபது பெண் புணர்ந்து வருடம் தந்தான்

மோகித்த நாரதனையும் புணர்ந்திசைத்தான்

 

சிறுத்தை அடித்த மான்

ஓநாய் திருடிக் கவர்தல் போல

சிசுபால ருக்மணியை

கிருஷ்ணன் திருடிப் புணர்ந்தான்

பிறர் மனை எழுவரை புணர்ந்த தாகம் தீராதும்

கோபியப் பெண் பத்தாயிரம்

புசிபுசித்தப் பின்பும்

ராதையும் புணர்ந்தான் கள்ளக் கிருஷ்ணன்

 

நினைவாடும் புராணங்கள்

ராமன் தலை கிறுகிறுக்க

அணிலாடு மன்றத்தில்

காம வெறி உச்சமிட

மன்றம் தொடங்கினான் ராமன்

பாலியல் ஜல்சாவில்

பலபல தொண்டர்கள்

பாரத மகள்களை வில்லெய்து எரித்தனர்

 

வன்புணர்ந்து பிசுபிசுத்த கோயில் கருவறை

கொலைபட்ட சிறுமியின் நசுங்கிய எலும்புகள்

புண்பட்டு பிளந்த யோனிபோல்

ரத்தம் பிசுப்பேறி கிடந்தன பாறைகள்

அனுமன் ஓய்வாக சாய்ந்திருந்தான்

குருதியில் வால் நனைத்து மகிழ்ந்திருந்தான்

 

ஊர்கூடி வன்புணர

நிர்வாண மகளை ஊர்வலம் செய்தனர்

மண்ணும் வானும் வெட்கி குனிந்தன

 

காற்றெங்கும் காவிகளின் ராம கோசம்

நாடெங்கும் பெண்கள்பிண நாற்றம் வீசும்

 

வில்விட்ட அம்பு உயிர் தொடுதல்போல்

உயிர்விட்ட பெண்குரல் செவி பாய்ந்தன

 

அணங்கு சூல் இசக்கி

கொல்லிப்பாவை மாரி

காளி வனப்பேச்சி

தவ்வை கொற்றவை

ஒருமித்த தமிழுடல்

சினமேறி சிலிர்த்தன

கரு நீல சிவப்பொளியில் போருடலாய் மிளிர்ந்தன

 

பாலியல் ஜல்சா வில்லர்கள்

பிண மாலை ஆனார்கள்

சனாதனப் பன்றி வெட்டி

வில்லர்கள் நெருப்பேறி

கிளரப்பட்ட பேய் கஞ்சி

காளியின் போர் கஞ்சி

சமூக நீதிக்கு நோய் மருந்து

ஜனநாயக உயிர்க்கு பெரும் விருந்து

 

கருத்த நெற்றியில் பவுர்ணமிப் பொட்டு

திரிசூலக் கூத்தாடும் முத்தமிழ் அணங்கு

புரட்சியின் மூவண்ணப் புகையாக சூழ்ந்தாள்

சனாதன ராமனை அருவமாய்ச் சூழ்ந்தாள்

தொடைநடுங்கி ராமன்

அச்சத்தின் உச்சம் தொட்டான்

சரயு நதி எங்கே?

திசையெங்கும் தேடினான்

தற்கொலைக்கு ஏங்கினான்

 

சோலி முடித்தாள் தமிழணங்கு

வில்லாடும் ராமனின் சங்கறுத்தாள் வில்லறுத்தாள்

அறுபட்ட வில் துடிதுடித்து புரள

சனாதனப் பேயன்

கடல் அழித்த சுவடானான்


Sunday, February 25, 2024

திரிசூலம்

 

திரிசூலம்

 

வெகு சில ஆண்டுகளாக

எலும்பிச்சம்பழம் குத்தப்படாமல்

பூசாரி கிழவியும் சூலாயுதமும்

பொலிவின்றி நிற்கின்றன

 

குங்குமச் சாறு பிதுங்க

எலும்பிச்சம் பழம் ஒன்றை

சூலத்தில் சூடினேன்

 

கொலை செய்த பாதகர்களே

ஓய்.. ஏய்.. என்று

பூசாரி கிழவி கொற்றவை ஆடினாள்

 

கண்ணீர் பூ உதிர்த்தபடி

வெறி பிடித்து அலறினாள்

 

மீன்குஞ்சு போல் திரிந்த

சிறுசுகளை கொளுத்துனீக

 

தெருத்தெருவா வீடுடைத்து

இளசு பெருசு துடிதுடிக்க

வாள் வீசி வெட்டுனீக

ஜெய்ஸ்ரீராம் தாகம் தீர

ரத்தப் பிண்டம் கொடுத்தீக

 

வேட்டிக்குள் விரைத்திருந்த

ராமனின் வில் பாய்ச்ச

காக்கை உடை கிழித்து

உடைந்த பெண்களை எரித்தீக

 

வில்லெடுத்த ராமன்களே

நிறைமாத கர்பிணிக்கும்

புடைத்த வயிறு கிழித்தீக

சிசுவென்று பாராது

தின்றொழித்த ஓநாய் போல்

சூலாயுத வாயால்

உயிர் செருகி எரித்தீக

 

காவி வெறி பேடிகளே

சனாதனத்தின் மலக்கழிவே

அணங்கு சூழ் கொற்றவை

காளி ஆடி வருகிறாள்

நீலம் கருப்பு சிவப்பு

திரிசூலம் ஏந்தி வருகிறாள்

 

காவிக்குடுமி பொசுங்க

விரைத்த குறி

அறுந்த வாலாய் துடிதுடித்து புரள

எலும்பிச்சம் பழம் போல்

சனாதன மூளை அழுகி பிசுபிசுக்க

சூலாயுத கூர் நாவில்

காவிக் கதை முடிப்பாள்

Saturday, February 24, 2024

மூதாதையராக சிரித்த மகள்

 

மூதாதையராக சிரித்த மகள்

 

கண்ணாடி

எம்மை பிம்பம் செய்தது

கதை பேசியபடி கண்டிருந்தோம்

செல்ல மகளும் நானும்

 

என் எழுத்து பற்றிய கதையிலும்

பாட்டி பாட்டன் பற்றிய கதையிலும்

சிலாகித்துப் போனாள் செல்ல மகள்

 

அறம் செய்வதையே விரும்பிய

அவ்வையின் நரைத்த முடிகள்

இருட்டில் வெள்ளி மழையாக பொழிந்திருக்கும்

அத்தகு நரைமுடி உன் பாட்டிக்கும் உண்டு

 

மனமே மனிதரின் ஆறறிவென்ற

தொல்காப்பியரின் கண்கள்

முல்லை நில கொடிகளின் முல்லைப்பூ ஒத்தன

உன் பாட்டனின் கண்களும் முல்லைப்பூ கண்களே

 

தெய்வங்களுக்கெல்லாம் முதல் தெய்வம்

அகர முதல எழுத்துக்களே என்றுரைத்த

வள்ளுவரின் நெற்றியொளி அரை நிலவின் ஒளி ஒத்தன

உன் பாட்டனின் நெற்றியும் அரைநிலவு கவர்ந்தனவே

 

கடவுளை மற மனிதனை நினையென்ற

பகுத்தறிவு பெரியாரின் உரையாடும் உதடுகள்

மின்னலின் அசைவுகளை ஒத்திருப்பவை

உன் பாட்டனின் உதடுகளும் அத்திறம் வாய்ந்தவை

 

வர்ண சாதி இந்து மடமைக்கு சாவு மணியடித்த

அம்பேத்கர் தாத்தனின் உள்ளங்கைகள்

சூரியனின் முழு வெப்பம் சுமந்தவை

உன் பாட்டனின் கரங்களும் அநீதிகளை எரித்தவை

 

பொதுவுடைமை சமூகத்தின் திசைகாட்டிய

காரல் மார்க்ஸ் தாத்தனின் முகத்தோற்றம்

வெண்பஞ்சு மேகமாய் திரண்டிருக்கும்

உன் பாட்டனுக்கும் நெடுந்தாடி

வெண்பஞ்சாய் நிறைந்திருக்கும்

 

மனிதகுலத்தின் தத்துவ மேதை காரல் மார்க்ஸை

தன் கலையறிவில் பெற்றுத்தந்த ஜென்னி மார்க்ஸ் 

உள்ளத்திலும் பேரழகி

தங்க நிற கொன்றை மலரின் அடுக்கான பண்பழகி

உன் பாட்டிக்கும் பண்புகள் ஜென்னி மலர் ஒத்திசைக்கும்

மனிதகுலம் முழுமைக்கும் பேரன்பு மிளிர்ந்திருக்கும்

 

கண்ணாடி முன் உடனமர்ந்து

வியந்தபடி சிலிர்த்திருந்தாள்

இல்லாத பாட்டி பாட்டனை

இட்டு கட்டி நான் இசைக்க

வியக்க வியக்க கண்டிருந்தாள்

 

பாட்டியும் பாட்டனுமாக நான் வருவேன்

உறுதியும் மகிழ்வுமாய் சொல்லிச் சிரித்தாள்

 

அய்யோ மகளே!

உனக்கு தாடியும் முதுமையும் முளைப்பதா?

 

அய்யோ அப்பனே!

என் செயல்களில் வெளிவரும் பாட்டி பாட்டனுக்கு

தாடியும் வயதும் தேவையில்லையே

 

கண்ணாடி பார்த்து வியந்தேன்

இட்டுகட்டிய பாட்டி பாட்டன்கள்

மகள் உருவில் சிரிக்கின்றார்கள்

நாங்கள் கண்ணாடி பார்த்தபடி

கனவெல்லாம் சிரித்திருந்தோம்

காவிப் பம்பரம்

 

காவிப் பம்பரம்

 

பச்சோந்தி விழிகளை மெல்ல சுழற்றுதல்போல

விரல்களின் இடுக்கிலிருந்து சாட்டையை

மெல்ல சுழற்றினாள் செல்ல மகள்

 

அனுமன் வாலால் சுற்றப்பட்ட ராமன்போல்

சுற்றப்பட்டிருந்தது காவிப் பம்பரம்

 

சொடுக்கி விடப்பட்ட வேகத்தில்

துகில் உரிக்கப்பட்ட பாஞ்சாலிபோல்

ஓம் என்று சப்தமிட்டு

புழுதி பறக்க சுற்றுகிறது பம்பரம்

 

அதானி விமானத்தில் மோடி

சுற்றுசுற்றாய் சுற்றிய

நாடும் வானும் போல

பம்பரம் சுற்றுவதாக சிலிர்க்கிறான் தந்தை

 

நம் மானத்தை மண்ணோடு பறித்து விற்ற

கேடியின் கதையை அறியலயோ

ஏய்யென்று வருந்திச் சிரிக்கிறாள் தலைவி

டெல்லிக்கிளி

 

டெல்லிக்கிளி

 

காளாண் பயிரிட பச்சிலை கத்திரித்த

பல லட்சம் எறும்புகள்போல

பச்சை கொடி கட்டி

டிராக்டர் முழங்க

டெல்லி சலோ விவசாயிகள்

அணிவகுத்துச் சென்றனர்

 

டெல்லி கோட்டைபோல

கால்விரித்து நின்றது

காவிநிற வெட்டுக்கிளி

 

பச்சிலை எம் உரிமையென

திசையெங்கும் முழங்கின எறும்புகள்

 

அலட்சியம் செய்த டெல்லிக்கிளி

முட்கள் நிறைந்த முன் கால்களால்

எறும்புகளைக் கவ்வியது

 

இறகசைத்து பறந்தும்

பின் கால்களை உதைத்தும்

அணிவகுத்த எறும்புகளைச்

சிதறி ஓடச் செய்தது

 

தாமரையின் மொட்டு போன்ற கூரிய வாயால்

கையில் கவ்விய எறும்புகளைக் கொய்து தின்றது

 

எறும்புகளின் பச்சிலைகள் சிவப்புக் கொடிகளாக மாறின

கோட்டையின் கால்களை திசையெங்கும் தாக்கின

 

கால் பரப்பி வீழ்ந்தது டெல்லிக்கிளி

மொய்த்துக் கொன்றன எறும்புகள்

 

பின்னொரு காற்றுப் பொழுதில்

காவி இறகும் தாமரை மொட்டு போன்ற தலையும்

பிறழ்ந்தன உருண்டன முடிந்தன

Saturday, February 10, 2024

தமிழுக்கு அறிவென்று பேர்

 

தமிழுக்கு அறிவென்று பேர்

புதியவன் முனைவர் கே.சிவக்குமார்

 

தமிழை தாய் மொழியாகக் கொண்ட நண்பர்களே. தாய் மொழியில் ஆழமாகவும் அடர்த்தியாகவும் நடைமுறை அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே பழுதின்றி சிந்திக்கும் சுயத்திறம் உள்ளவர்களாக திகழ்வோம். அதனால்தான் மனிதவளம் மேன்மையடைவதற்கு அடித்தளமாக குழந்தைகளுக்கு தாய்மொழி வழியில் கல்வி வழங்கும் அறிவியல் பூர்வமான நடைமுறையை உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால், நாம் கடைபிடிக்கின்றோமா?

                தமிழ் வழியில் கல்வி பயில்வதை இழிவாகவும் சாத்தியமற்றதாகவும் கருதும் நிலையும் இருக்கின்றது. ஐந்து மாத குழந்தையிலிருந்து தமிழ் மொழியில் பழக்கப்பட்டு வளரும் குழந்தைகளுக்கு அவர்களது மொழியை எழுதவும் படிக்கவும் சிந்திக்கவும் கற்றுக்கொடுக்கும் கடமையைச் செய்யாமல் தவறுகிறோம். தாய்மொழியில் ஆளுமைத்திறன் உடையவர்களால் மட்டுமே விருப்பமொழியாக எத்தனை மொழியையும் உரிய குறுகிய கால பயிற்சிகள் மூலமாக பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறை உண்மையைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றோம். இதனால் விளைவுகளைப் பற்றி அறிவியல் பூர்வமாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுக்காமல் குற்றம் புரிகின்றோம்.

                குழந்தைகள் அவர்களது வாழ்வியல் வரலாற்றுச் சூழலில் இயல்பாகப் புரிந்துகொண்டு பேசுகின்ற தாய்மொழி வழியாக எழுதவும் படிக்கவும் பயில்வது அவர்களது அடிப்படை உரிமை. ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழி வழியில் பயில்வது அவர்களது அடிப்படை உரிமையாகும். அவர்களது கல்வி உரிமைகளை பாதுகாத்து வழங்குவது மனிதகுல சமூகத்தின் தவிர்க்கக்கூடாத கடமையாகும்.

நாம் கடமை தவறி தாய்மொழி அல்லாத அந்நிய மொழியில் கல்வி பெறும் நிலைக்கு குழந்தைகளை ஆளாக்கினால் அது அவர்கள் மீது சமூகம் தொடுக்கின்ற வன்முறை குற்றமாகக் கருதப்பட வேண்டும்.  ஏனெனில், தனக்கு அறிவுத் தொடர்ச்சி அல்லாத அயல் மொழியில் கற்கும் நிர்பந்தம் நிகழும்போது உள்ளத்தின் இயல்பான சுதந்திரநிலை உடைந்து செயற்கையான மன இறுக்கத்திற்கு ஆட்பட நேர்கின்றது. உள்ளத்தியல்பில் சுதந்திரமான இயல்பு நிலையிலுள்ள கற்கும் திறனானது செயற்கையான மன இறுக்கத்திற்கு ஆட்படும்போது பலமடங்கு குறைபாடுடையதாக வினையாற்றுகின்றது. இதனால் இயல்பு நிலை தாய்மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் நிகழ வேண்டிய கற்றல் சிந்தித்தல் செயல்படுதல் மேம்பட்டநிலையில் மேலும் கற்றல் சிந்தித்தல் செயல்படுதல் என்ற சுழல்வட்ட ஏற்ற நிகழ்வானது முற்றிலும் சிதைவடைகின்றது. மாறாக, அயல் மொழி வழியிலான கற்றல் செயல்பாட்டில் கற்றலாவது நினைவில் மறவாதிருத்தல் ஒப்புவித்தல் எழுதிமுடித்தல் என்ற தேக்கநிலைக்கு குழந்தைகளை ஆட்படுத்தி மனித நிலைக்கு உயரவிடாமல் மந்தைநிலைக்கு ஆளாக்குகின்றது.

சுழல்வட்ட ஏற்ற வடிவிலான தாய்மொழி வழிக் கல்வியில் உரிய முறையில் படித்தல், புதுமைகளைப் படைத்தல், உண்மைகளைக் கண்டுபிடித்தல் என்பதாக சிந்தனைப்பூர்வமான கற்றல் நடவடிக்கை நிகழ்கின்றது. அதனால்தான் தாய்மொழிக் கல்வி நடைமுறையிலிருந்த காலம்வரை தமிழ்நாட்டில் தலைசிறந்த அறிஞர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் கண்டுபிடிப்பாளர்களும் உலகம் அறியும்படி உயர்ந்துள்ளார்கள். ஆனால் தேக்கநிலைக்கு ஆட்படுத்தும் தாய்மொழிவழியற்ற கல்வியானது சிந்திக்க இயலாத மந்த புத்தியுடைய தலைமுறைகளை உருவாக்குகின்றது. அதனால்தான் தாய்மொழிவழிக் கல்வி அற்றுப்போன காலத்தில் அயல்மொழி வழிக்கல்வி வழியாக ஆளுமையுள்ள மனிதர்களை நம்நாடு பெற்றெடுக்க இயலவில்லை. எனவே, மனிதர்களாக உயர்த்தப்பட வேண்டிய நம் குழந்தைகளை வெறும் மந்தைகளாக உருமாற்றிய குற்றவாளிகள் நாம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

அறிவியல் தமிழைப் பாரம்பரியமாகப் பெற்றுள்ள நாம்…

கணினி தமிழிலும் சிகரம் தொட்டுள்ள நாம்..

இளமைக்கு இளமையாகவும் முதுமைக்கு முதுமையாகவும்

பேரழகின் பேரறிவாகவும் திகழும் தமிழ்மொழியின் குழந்தைகளாகிய நாம்…

 தாழ்ந்து இழிந்தமைக்கு யார் காரணம்?

 ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சி, ஆங்கிலேயர்களின் காலணிய அடிமைநிலை, சுயராஜ்யத்தில் பார்ப்பனிய சூழ்ச்சி, கார்ப்பரேட் காவி பாசிச அரசியல் சூழல் என்று எத்தனை அரசியல் பின்னணிகளைக் கைகாட்டினாலும் நாம்தான் அரசியல் தெளிவற்று நம் குழந்தைகளின் அறிவை பலி கொடுத்தவர்கள் என்ற உண்மையை மறுக்க முடியாதல்லவா. எனவே, நாம் குற்றவாளிகள்தான்.

நமது குற்றத்தின் விளைவு என்ன தெரியுமா? நம் குழந்தைகள் கண்ணிருந்தும் குருடர்களாக வகுப்பறைகளில் மேய்க்கப்படுகிறார்கள். காதுகளிருந்தும் செவிடர்களாக நாடெங்கும் திரிகின்றார்கள். வாயிருந்து ஊமைகளாக பிதற்றிக்கொண்டு ஓடுகிறார்கள். தாய்மொழியில் நன்கு படிக்கும் வாய்ப்பை கொடுக்காததாலும் அயல்மொழி வழியில் படித்தாக வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கியதாலும் கற்றல் திறனில் குறைபாடுடையவர்களாக பெருந்திரளான மாணவர்கள் மந்தையாக்கப்பட்டுள்ளார்கள்.  அவர்கள் படித்து முடித்தப் பாடங்களைப் பற்றி அவர்களிடம் பேசினாலோ ஆராய்ந்தாலோ இவற்றை அறிய முடிகின்றது. அவர்களது பாட நூல்களில் சில வார்த்தைகளைச் சுட்டிக்காட்டி வாசிக்கச்சொன்னால் வாசிக்கத் தெரியவில்லை. தவறாக வாசிக்கிறார்கள். சரியாக வாசித்தாலும் சரியான பொருள் புரிதலுடன் விளக்கத் தெரியவில்லை. மொழியைச் சரியாக கையாண்டு அவர்களால் எழுத முடிவதில்லை.

ஆங்கிலம் விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம் எண்களைத் தமிழில்  சொல்லுகையில் ஒன்று இரண்டு… பத்து. பத்துக்கு பிறகு வரும் எண்களை பதினொன்று, பன்னிரண்டு என்றுதான் சொல்கின்றோம். அதாவது பிரித்தால் பத்து ஒன்று, பத்து இரண்டு என்று பொருள்படும். ஆனால் ஆங்கிலத்தில் One … Ten. பிறகு தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக Ten one, Ten two என்று சொல்லாமல் Eleven, Twelve என்று சொல்கிறீர்கள். பிறகு உடனடி திருப்புமுனையாக Thirteen முதல் Nineteen வரையிலும் teen பாட்டு பாடுகிறீர்கள். பிறகு Twentyல் நின்று தமிழில் வழங்கப்படுவதற்கு இணையாக Twenty one, Twenty two… என்று நீட்டிச்செல்கிறீர்களே என்ன காரணம் என்று விளக்க முடியுமா? என் கேள்விக்கு ஒருவர்கூட விடையளிக்கவில்லை. ஒரு மாணவி வகுப்பறையில் ஆசிரியரிடம் கேட்டாராம். இதுமாதிரியான மொக்கை கேள்விக்கெல்லாம் விடை கிடையாதென்று சொல்லிவிட்டாராம். ஒரு மொக்கை கேள்விக்குக்கூட பதில் சொல்லத் தெரியாத யோக்கியதையில்தான் வகுப்பறை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும்படி சொல்லிவைத்தேன்.

தமிழை விரும்பிப் படிக்கும் மாணவர்களிடம்  எண்களைத் தமிழில் வரிசைபட சொல்லுகையில் பத்துக்கு முன்பாகவே ஒன்பது என்று பத்து குறிப்பிடப்படுகின்றதே ஏன்? நூறுக்கு முன்பாகவே தொண்ணூறு என்று நூறுவும் ஆயிரத்திற்கு முன்பாகவே தொள்ளாயிரம் என்று ஆயிரமும் குறிப்பிடப்படுகின்றதே ஏன்? என்று வினவியதற்கு தெரியவில்லை என்று முடித்துக்கொண்டார்களே அல்லாமல் தவறான பதிலைகூட முன்வைக்க யாரும் இல்லை. பிறகு என்னை விளக்கச் சொன்னவர்களிடம் முன்பு சொல்லப்பட்டவை அனைத்தும் தொடு என்பதாக விளக்கம் பெறுகின்றது என்ற கருதுகோளை முன்வைத்தேன். அதாவது, பத்துக்கு முன்பாகவே பத்தைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு பத்து என்றாகி ஒன்பது என்று திரிந்துள்ளது.  நூறுக்கு முன்பாகவே நூறைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு நூறு என்றாகி தொண்ணூறு என்று திரிந்துள்ளது. ஆயிரத்திற்கு முன்பாகவே ஆயிரத்தைத் தொடப்போகிறது என்று அறிவுறுத்தும் பொருளில் தொடு ஆயிரம் என்றாகி தொள்ளாயிரம் என்று திரிந்துள்ளது. எனது விடை சரியோ தவறோ மாணவர்களிடமிருந்து வெளிப்படுவதற்கான சிந்தனைத்திறன்கள் முற்றிலும் தவறியுள்ளது என்பது மட்டும் உறுதியாகின்றது.

பயிற்றுமொழியும் புரியவில்லை. தாய்மொழியிலும் அறிவில்லை. மனனம் செய்து வாந்தி எடுப்பதில் என்ன திறன் என்றும் தெரியவில்லை. எப்படி மதிப்பெண் பெற்றோம், எப்படி மதிப்பெண் இழந்தோம், நாம் எடுக்கும் மதிப்பெண்ணுக்கு என்னதான் மதிப்பு, எதுவும் புரியவில்லை. படிப்பால் நம் அறிவு வளர்ந்திருக்கிறதா இல்லையா தெரியவில்லை. தனக்கு எதைப்பற்றி தெரியும், எதைப்பற்றி தெரியாது, எவற்றை தெரிந்துகொள்ள வேண்டும், ஏன் தெரிந்துகொள்ள வேண்டும், எத்தகைய சூழலில் நம் வாழ்க்கை இருக்கின்றது, இதன் கடந்தகாலம் எத்தகையது, வருங்காலம் எத்தகையதாக இருக்க வாய்ப்பிருக்கின்றது எதுவும் தெரியாது. தன் அறிவின் மீதும் தன்னம்பிக்கை இல்லை. அறியாமையை ஒப்புக்கொள்ளும் துணிச்சலும் இல்லை. தெரியாதவற்றையும் தெரிந்ததுபோலவே நடித்தாக வேண்டிய நிர்பந்தத்தில் ஓடிக்கொண்டு வெற்றியடைந்ததாக நம்பும் யாவற்றிலும் தோல்வி பற்றிய அச்சத்துடனே புதைந்துகொண்டிருக்கிறார்கள். தாம் புதைந்து போதலை பெற்றோரின் விருப்பத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் தாங்கள் ஆற்ற வேண்டிய தியாக நடவடிக்கைகளாகவும் கருதிக்கொள்கிறார்கள். தமது இயலாமையை பலவீனப்படுதலை வெளிப்படையாக பெற்றோர்களிடம் வெளிப்படுத்தவும் தெரியவில்லை. மேலும், தங்களை பெரும் சொத்துக்களாகக் கருதும் பெற்றோர்களிடம் தெரியப்படுத்துவதால் எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்பது அவர்களது சித்தமாகவும் இருக்கலாம்.

தெளிந்த அறிவு, உறுதியானப் பேச்சு, தன்னம்பிக்கை மிக்க செயல் இவற்றை இழந்து, இந்தத் தலைமுறை குழந்தைகள் பலவீனப்பட்டு முடங்கியுள்ளார்கள் என்பதே கல்விச்சூழல் கண்டுள்ள காலத்தின் நிதர்சனம். குழந்தைகளுக்குத் தெரியாத மொழியில் எந்த அறிவைக் கொடுத்தாலும் சுவைக்க முடியாத கனியாகவோ, செறிக்க முடியாத உணவாகவோ, தொண்டையில் சிக்கிய முள்ளாகவோ, அறியாமையின் மீப்பெரும் நோயாகவோ வினையாற்றும் என்ற சாதாரண உண்மையை உணராமல் நாமாற்றிய அயல்மொழிக் கல்வியின் விளைவுகளை மேலும் விளக்குவதற்கு அவசியம் இல்லையென்று கருதுகின்றேன். இந்தத் தருணத்திலிருந்தாவது குழந்தைகளின் தாய்மொழி வழி கல்வி உரிமைக்கு வழியமைப்போம். தமிழ் பேசும் நம் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்போம்.

தமிழ் எழுத்தறிவாகிய கல்வியறிவே இந்த உலகிற்கு முதல் கடவுள் ஆகும் என்கிறார் வள்ளுவர். தாத்தன் வள்ளுவன் வழியில் வந்தவர்கள் நாம். நம் குழந்தைகளுக்குப் பேசத் தெரிந்த தமிழ் வார்த்தைகளில் இருந்தே அடிப்படை எழுத்துக்களாகிய உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துக்களையும் கற்றுக் கொடுப்போம். ஆய்த எழுத்து ஃ (அக்) என்பது உயிரெழுத்துக்களாகிய அகர வரிசை முடிந்து க் என்ற மெய் வரிசையின் தொடக்கம் என்று காரணம் விளக்குவோம். உயிர் மெய் எழுத்துக்களை மெய்யும் உயிரும் உயிர்மெய் ஆகின்ற வழியில் (க்அக.. களி, அகம்) சொற்களோடு இணைத்தறியும் வழியில் பயிற்சி வழங்குவோம். சொற்களற்று ஒலிக்கும் எழுத்துக்களை எளிதாக புரிந்துகொள்ள வழியமைப்போம். கலை மற்றும் அறிவியல் இலக்கியங்களை படிப்பவர்களாகவும் படைப்பவர்களாகவும் உருமாற்றுவோம். எந்தத் துறையிலும் இலக்குடைய மனிதர்களாக வெற்றியடைய வாழ்த்துரைப்போம்.

 

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை