சொரனைக் கெட்ட நமக்காக
புதியவன்
உன் கையை
அருவாளால் வெட்டுவேன்
இன்னொரு கையால்
ஆப்பிள் கொடு எனக்கு...
உன் காலை
துப்பாக்கியால் சுடுவேன்
இன்னொரு காலால்
ஆட்டமிடு எனக்கு...
உன் மூளைக்குள்
அமிலத்தை ஊற்றுவேன்
பதிலுக்கு உன் நாவால்
துதிபாடு எனக்கு...
உன் கண்களை
சிகரெட்டால் பொசுக்குவேன்
என் கால்களைப் பிடித்து
தாராளமாய் பயணம் செய்...
தவறியும்
கண்சிவக்காதே
முஷ்டியை முறுக்காதே
வன்முறை செய்வது
அநீதியடா...
No comments:
Post a Comment