Monday, November 21, 2022

யாதும் போரே யாவரும் தீர்ப்பீர்

பசித்தழும் குழந்தைகளுக்கு
பால்நிலவை உருட்டி வருகையில்
என் காலுடைத்தாள் மனைவி

உழைத்தும் பசி நீங்கா கோடியர்களுக்கு
அட்சய பாத்திரம் ஏந்தி வருகையில்
என் கையை கொய்தனர் உறவோர்

இலக்கிய வானில்
விண்மீன்களை நடுகையில்
மானுட மனம் உயர பாடுகையில்
பணத்தில் தலை புதைந்த
ஒழுக்கம் இல்லா வணிக மாக்கள்
சொத்தில் சமாதியிட்டு
என்னை உயிரோடு புதைத்தனர்

சீழ்பிடித்த பாழுலகம் அழுகி நாறுகையில்
புத்துலகை அடிவயிற்றில் பிரசவிக்க உந்துகையில்
என் புடைத்த வயிற்றை கிழித்து கொன்றனர் மதவெறியர்கள்

எரிக்கும் வெயில் தாங்கா உயிர் வெளியை
வாயு மண்டலமாக அரண் செய்கையில்
என்னை அணுகுண்டால் சிதற கொலுத்தினர் இலாப வெறியர்கள்

பேரொலி அருவியாய்

பயம் தரும் சூழ்ச்சிகள் இரைந்தன

என் இசைக்க முடியா வாழ்க்கை
ஆயிரம் ஆயிரம் இறந்தன
நீர்படு குமிழ்களாய் உடைந்தன

நான் இறந்தேன் என்பதே திண்ணம்
எரிக்கவோ புதைக்கவோ ஆண்டுகள் ஆகலாம்
ஆயினும் ஆயினும்
மின்னல்படு ஒளிபோல்
திடுதீம் என்று உயிர்க்கின்றேன்

மானுடத்தின் உயிராய்
நான் குரலிடும்போதும்

இயற்கையின் இதயமாய்

நான் இசைத்திடும்போதும்

வீரத்தின் தோழராய்

நான் களம்சேரும்போதும்

பிரபஞ்சத்தின் ஆன்மாவாய்
மக்கள் அதிகாரம் நிலைபெறும்போதும்

மரணமில்லா பெரும் வாழ்வில்
சிலாகித்து நனைகின்றேன்

யாதும் போரே
யாவரும் தீர்ப்பீர்

 https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/25-11-2022-yathum-pore-yavarum-theerpeer/

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை