Monday, May 25, 2020

சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 3


3.11.3.திருமணச் சடங்கு – சோளகர்கள் பெண் கேட்டு வரலாமா என்று பெண்வீட்டாரிடம் நேரடியாகக் கேட்பதற்குப் பதிலாக விதை தானியம் கேட்டு வரலாமா என்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 49-50). பெண்ணுக்குப் பரிசப்பணம் கொடுத்து மணம் செய்கிறார்கள்பரிசப்பணம் அவரவர் வசதிக்கேற்ப முடிவுசெய்யப்படுகின்றதுமூத்த மகன் இறந்துவிட்டால் அவனது மனைவியை இரண்டாவது மகனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள்திருமண வீட்டின் வாசலில் வெள்ளை நாகமரத்தின் ஒன்பது கவை குச்சிகளையும் ஒன்பது பச்சை மூங்கில்களையும் சேர்த்து பந்தல் அமைக்கிறார்கள்அந்தப் பந்தல் ஆளுயரத்திற்கு அமைந்திருக்கின்றதுபந்தலின் மேற்பரப்பு முழுவதிலும் நாக இலைகளை நிரப்பியிருக்கிறார்கள்மணமகன்மணமகள் ஆகிய இருவரது தலையிலும் காட்டுமல்லிகையினாலான சரத்தைக் கட்டியிருக்கிறார்கள்பீனாச்சியும் தப்பும் இசைக்க மணமகள் வீட்டை நோக்கி மாப்பிளை ஊர்வலம் தொடங்குகிறதுமணிராசன் கோயிலிலிருந்து மாப்பிளை ஊர்வலத்தைத் தொடங்குகிறதுசிறுவர்கள் இசைக்கு ஏற்றபடி ஆடுகிறார்கள்மணப்பெண்ணின் வீட்டு வாசலில் மணமகன் நிற்கிறான்மணமகனின் அருகிலிருந்த பெண் கையிலிருந்த மூங்கில் தட்டிலில் வெற்றிலைபாக்குசீப்புகண்ணாடிசீலைதாலி ஆகியவற்றை வைத்திருக்கிறாள்நாகஇலை பந்தலில் மணமகன் உட்கார வைக்கப்படுகிறான்மணமகளின் தோழி மணமகனது முகத்தில் கருப்பு மற்றும் வெள்ளை பொட்டுக்களை வைக்கிறாள். ‘கோமாதா மனம் குளிர்ந்தாள் . அடுத்தது நடக்கட்டும்’ என்று கோல்காரன் சொல்கிறான்மானா என்னும் மூங்கிலாலான உழக்கையில் குப்பையை நிரப்பி வைத்திருக்கிறார்கள்மணமகனை அந்த உழக்கையைப் பார்க்காமல் வந்து பின்னங்காலால் மூன்றுமுறை உதைக்கும்படி செய்கிறார்கள்குப்பை கீழே கொட்டியதும் திருஷ்டி கழிந்ததாகச் சொல்கிறார்கள்மணமகன் மணப்பெண்ணின் வீட்டிற்குள் சென்று அவளது சுண்டுவிரலை தன் சுண்டுவிரலுடன் இணைத்து நாகஇலை பந்தலுக்கு அழைத்து வருகிறான்கோவணத்துடன் நின்ற கோல்காரன் முன்னோர்களின் கோலை உயர்த்தி மந்திரத்தை முணுமுணுத்தப் பின்னர் மணமகன் தாலி கட்டுகிறான்மணமகளின் வீட்டில் வெல்லம் மற்றும் புளியங்கொட்டை சேர்த்துத் தயார் செய்துள்ள உணவைப் பெண்ணின் தாய்மாமன் மணமகனுக்கு ஊட்டுகிறான்மணமகன் வீட்டார் தயார் செய்துள்ள அரிசிசோறும் காரமான ஆட்டுக்கறி குழம்பும் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றதுதேக்குமர இலைகளைச் சிறுக் குச்சிகளால் தைத்துத் தயாரிக்கப்பட்ட இலையில் உண்டு மகிழ்கின்றனர்ஆண்கள் கஞ்சா புகையினை புகைத்து மகிழ்கிறார்கள்மணமகளின் வீட்டில் மணமக்கள் இருவரும் தனித்து விடப்படுகிறார்கள்அன்றைய இரவு உக்கடத்தீ ஏற்றி விடியும்வரை ஆட்டமும் பாடலும் இசையுமாய் கொண்டாடுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 53-56).
            கொல்லி மலை மலையாளிகள் வயதுப் பார்த்துத் திருமணம் செய்துகொள்வதில்லைபெண் வீட்டுக்காரர்களின் ஊரில் அனுமதி பெற்றுப் பெண் கேட்டு வருகிறார்கள்வீட்டிலிருந்து கிளம்பும்போது நல்ல சகுணம் பார்க்கிறார்கள்மாப்பிள்ளை வீட்டார் வந்ததும் நீர் சொம்பு கொடுத்துக் கம்பளி விரிக்கப்பட்ட திண்ணையில் அமர வைக்கிறார்கள்பெண் வீட்டில் கவுண்டன் கரைகாரன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்வந்தவர்களுக்குப் பூசிக்கொள்ளச் சந்தனம் கொடுக்கிறார்கள்விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதும் கை கழுவ நீர் கொடுக்கிறார்கள்மாப்பிள்ளை வீட்டார் சாப்பிட்டு முடிந்ததும் வீட்டில் ஏற்றப்பட்டுள்ள விளக்கை மாப்பிள்ளை வீட்டார் வணங்குகின்றனர்கம்பளி விரிப்பில் அமர்ந்து திருமணப் பேச்சைத் தொடங்குகின்றனர்ஊர் கவுண்டர் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கிறார்எங்கள் வீட்டில் பெண் இருப்பதை எப்படி தெரிந்துகொண்டு வந்தீர்கள் என்ற விபரத்தை ஊர் கவுண்டன் கேட்கிறார்வந்தவர்கள் அறிந்த முறையைத் தெரியப்படுத்துகிறார்கள்பையனுக்கு எத்தனையாவது திருமணமாக பெண் கேட்கிறீர்கள் என்பதையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள்மாப்பிள்ளை வீட்டாரும் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதுண்டா என்ற செய்தியைத் தெரிந்து கொள்கிறார்கள்பெண்ணுக்கு மாப்பிள்ளை கொடுக்க வேண்டிய பரிசப்பணம் எவ்வளவு என்பதைப் பேசி முடிவெடுக்கிறார்கள்இறுதியாகத் தங்கள் வீட்டுப் பெண்ணை இன்னார் வீட்டுப் பையனுக்கு மணம் செய்து கொடுப்பதாக மண்ணைத் தொட்டு சத்தியம் செய்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 152-156). கல்யாணத்துக்காக நெல் குத்தி காரியத்தைத் தொடங்கலாம் என்று ஊர்கவுண்டர் அனுமதியளிக்கின்றார்ஊர்க் கோவிலில் அல்லது பூசாரி வீட்டில் திருமணம் நிகழ்த்தப்படுகின்றதுபெண்ணும் மாப்பிளையும் விடியற்காலையில் நல்ல நேரம் பார்த்து வந்து சேர்கின்றனர்கவுண்டர்கரைகாரர்பூசாரிஐயன்பூசாரிதண்டல் போன்றவர்கள் வந்திருந்து திருமணத்தை நடத்தி வைப்பார்கள்கோவில் வீட்டில் பெண்ணும் மாப்பிளையும் தனித்தனியாக தங்கியிருப்பார்கள்கரைகாரர் கண்டனுக்குச் சந்தனம் பூசிவிடுகிறார்தண்டல் எல்லோருக்கும் சந்தனம் பூசிவிடுகிறார்கரைகாரர்கள் பெண்ணுக்கும் மாப்பிளைக்கும் சந்தனம் பூசிவிடுகிறார்கள்மாலையிட்டு கங்கணம் கட்டிவிடுகிறார்கள்கரைகாரர் மாப்பிள்ளையைத் தூக்கிச் சுமந்து மணவறையை மூன்று முறை சுற்றியதும் மணவறையில் அமர வைக்கிறார்மணமக்களை தூக்கிச் சுற்றும்போது மற்றொரு கரைகாரர் பாயை கட்கத்தில் வைத்துக்கொண்டு தண்ணீர் செம்புடன் பின்தொடர்ந்து சுற்றுவது வழக்கமாக இருக்கின்றதுஇது பரம்பரையாக இவர்களுக்கு இருக்கின்ற உரிமையாகும்பெண் மீதான தாய்மாமன் உரிமைக்காக கவுண்டர் வழக்கம்போல வழக்குப் பேசி பெண்வீட்டாரிடமிருந்து தாய்மாமனுக்குரிய உரிமைப்பணத்தை வாங்கிக்கொடுக்கிறார்உயர்ந்த கல்மேடையில் பாய்தண்ணீர்ச்செம்புசந்தனப்பேழை ஆகியவை வைக்கப்படுகின்றனகவுண்டர்கரைகாரர் ஆகியோரது காலில் விழுந்து இருவீட்டாரும் வணங்குகிறார்கள்கரைகாரர் கவுண்டரின் காலில் விழுந்து தாயே என்று வணங்குகிறார்கவுண்டர் மகராசனாயிரு என்று வாழ்த்துகிறார்தாலிகட்டலாமா என்று கவுண்டரிடம் கரைகாரர் அனுமதி கேட்கிறார்கவுண்டர் அனுமதியளிக்கிறார்மணவறைக்குப் பெண்ணை தூக்கிவர தாய்மாமனின் அனுமதியை வேண்டுகின்றனர். “வெள்ளிக்கடை தெறந்து விட்டோட்டு பூந்தேரை!” என்று கூறி அனுமதியளிக்கிறான்கரைகாரர் பெண்ணை மணமேடைக்கு தூக்கிவருகிறார்கரைகாரர் தாலியை எடுத்து கவுண்டரிடம் கொடுக்கிறார்பெண்ணுக்கு தாலி கட்டும் உரிமை கவுண்டருக்கு உரியதாக இருக்கின்றதுபெண்ணின் பின்னே மூன்று கரைகாரர்கள் நிற்க கவுண்டர் தாலி கட்டுகின்றார்திருமணம் முடிந்ததுகவுண்டர் தனது முதல் மொய்ப் பணத்தை வழங்குகிறான்அனைவரும் அவரவர் விருப்பப்படி மொய் வழங்குகின்றனர்கவுண்டர் வீட்டுக்குக் கூடை நிறைய சோறும் தேங்காய் பழமும் வைத்துத் தண்டல் மூலம் கௌரவக் காணிக்கையாக அனுப்புகின்றனர்திருமணம் முடிந்து ஊர் திரும்புபவர்களுக்கு ஒரு குத்துச் சோறும் தேங்காய்பழமும் கொடுக்கிறார்கள்பெண் வீட்டார் தமது ஊராரின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதற்காகக் குறைந்தது ஒரு மொடா அரிசியும் நூறு ரூபாயும் கொடுக்க வேண்டும்ஊர்க்காரர்கள்தர்மகர்த்தா ஆகியோரது முன்பு காலில் விழுந்து ஒரு மொடா அரிசிசமையலுக்கான காய்கறி பொருட்கள்நூறு ரூபாயை ஏற்குமாறு வேண்டிக் கொடுக்கிறார்கள்மணமகளை மணமகன் வீட்டிற்குச் சென்று விட்டுவிட்டு ஊர் திரும்புகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 202-210).
            படகர்கள் திருமண நிகழ்வுகளை ஆவணி மாதம் நிகழ்த்துகிறார்கள்மாப்பிளை வீட்டார் மணமகனை அழைத்துக்கொண்டு கோத்தர் இசை முழுங்க மணமகள் வீட்டிற்குச் செல்கிறார்கள்பரிசுப் பொருட்களையும் இருநூறு ரூபாய் பணத்தையும் சீராகக் கொடுத்து மணமகளை அழைத்து வருகிறார்கள்மனை வாயில் செம்மண் பூசிப் புதுப்பிக்கப்பட்டிருக்கிறதுமணப்பெண் மனைவாயிலில் வந்து நின்றதும் வயதான பெண்ணொருவள் குடத்திலிருந்து நீரெடுத்து மணப்பெண்ணின் கையில் மூன்று முறை வழங்குகிறாள். “குடத்திலிருந்து ஒழுகும் நீர் போல் வழி வழி வரும் இந்தக் குடும்ப வளர்ச்சியை ஏற்றுக் கொள்வாயாக” என்ற வாசகத்தையும் சொல்கிறாள்அந்த நீரை மணப்பெண்ணின் கைகளையும் கால்களையும் நனைக்கும்படி வழங்கியிருக்கிறாள்பொற்கம்பியில் கோக்கப்பட்ட மணிமாலை  ஒரு தட்டில் இருக்கின்றதுமுதியவள் அந்த மணிமாலையை எடுத்து மணப்பெண்ணின் கழுத்தில் போட்டு உள்ளே அழைத்து வருகிறாள்வீட்டின் புற மனையில் கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறதுகம்பளத்தில் புது வட்டிலில் சாமைச்சோறும் புதுப்பாலும் பரிமாறுகிறார்கள்மணமகனின் தங்கை மணப்பெண்ணுக்குக் கைகழுவ நீர் வழங்குகிறாள்பெண்களும் சுமங்கலிகளும் புடைசூழ பொன்னைப் போன்ற புதுப்பானையில் அருவியிலிருந்து புது நீரெடுக்க தயாராகிறார்கள்கோத்தர் இசை முழங்க மணமகள் அருவிக்கரையில் நீரெடுத்து மனைபுகுந்ததும் கணவரின் வீட்டுக்கு உரிமையுடையவளாகிறாள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 161-162).
            இருளர்களின் திருமணச்சடங்குகள் பற்றிய விவரங்கள் புதினங்களில் செறிவாக இடம்பெறவில்லை.

3.11.4.பிரசவச் சடங்கு – கொல்லிமலை மலையாளிப் பெண் கணவனல்லாத வேறொருவனுடன் சேர்ந்து கருவுற்றிருந்தால் பிரசவ வலியின்போது குழந்தை வெளிவராமல் தாய் மிகவும் துயரப்படுவாள்அவள் யாருடன் சேர்ந்து கருவுற்றாள் என்ற உண்மையை மருத்துவச்சியிடம் சொல்லிவிட வேண்டும்மருத்துவச்சி தர்மகர்த்தாவுக்குச் செய்தி அனுப்புவார்தர்மகர்த்தா அந்தப் பெண்ணின் கருவுக்குக் காரணமானவனை அழைத்துவருகிறார்கர்ப்பிணியின் வீட்டு நடுவில் விளக்கேற்றி வைக்கப்படுகின்றதுஇதனை நல்ல விளக்கு என்கிறார்கள்தர்மகர்த்தா அறிவுறுத்தியபடி அந்த நபர் விளக்கைக் கும்பிடுகிறார். “நான் செஞ்சது தப்புச்சு தாயேபெளை பொறுத்துக்கனும்நல்ல படியா கொழந்தை பெறக்கணும்” என்று கும்பிட்டுவிட்டு விளக்குத்திரியிலுள்ள கரிப்பசையை எடுத்துக் கர்ப்பிணியின் நெற்றியில் பொட்டு வைக்கிறான்தர்மகர்த்தா அவனது கையில் ஒரு அரிவாளைக் கொடுத்து என்ன செய்ய வேண்டுமென்பதை அறிவுறுத்துகிறார்அரிவாளைப் பெற்றுக்கொண்டவன் வாசல் படிக்கு மேலுள்ள எரவானக் கூரையிலுள்ள வரிச்சல் கம்பை மூன்று வெட்டு வெட்டிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகின்றான்இந்தச் சடங்கு முடிந்ததும் மருத்துவச்சியின் உதவியுடன் பிரசவம் எளிதாக முடிகின்றது. (சின்னப்ப பாரதி,கு. 2008: 84-93).
            சோளகர்கள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் பிரசவச் சடங்குகள் பற்றிய செய்திகள் செறிவாக இல்லை.
3.11.5. முகூர்த்த ஏர் கட்டுதல் – மலையாளிகள் முதல் வருட அறுவடையை முடிந்து அடுத்த வருடத்திற்கான விதைப்பிற்காக நிலத்தை உழுவதற்கும் கொத்துவதற்கும் முன்பாக முகூர்த்த ஏர் கட்டுதல் என்ற சடங்கைச் செய்து முடிக்கிறார்கள்புதிய உழவுக்கும் புதிய விதைப்பிற்கும் சரியான தருணம் எதுவென்று முடிவெடுத்துக் காட்டிலோ வயலிலோ முதன்முதலாக உழவு ஏர் கட்டப்படுகின்றதுஇதனையே முகூர்த்த ஏர் என்கிறார்கள்இந்த ஏரை ஊர் பூசாரி கட்டுகிறார்பரம்பரை பரம்பரையாக ஊர் பூசாரிதான் முகூர்த்த ஏரைக் கட்டுகிறார்முகூர்த்த ஏரை கட்டுவதற்குரிய செய்தியை முதல் நாள் தண்டோரா மூலமாக ஊராருக்கு அறிவிப்பார்கள்முகூர்த்த ஏர் கட்டுகின்ற நாளன்று வீட்டில் அடுப்பு எரிக்க மாட்டார்கள்பயறு வேக வைக்க மாட்டார்கள்குளிக்கவோ துணிதுவைக்கவோ கூடாதுவேலை செய்யக் கூடாதுகாடு அழிச்சு நெருப்பு மூட்டக் கூடாதுஇந்த நடைமுறைகளைக் கடைபிடிக்காதவர்கள் சம்பிரதாயத்தை மீறிய குற்றத்திற்காகப் பஞ்சாயத்தார் முன்னிலையில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனையை ஏற்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 52-53).
3.11.6. பால்கறக்கும் சடங்கு – படகர்கள் வீட்டில் பால்கறக்கும் பொறுப்பை ஏற்கவிருக்கும் சிறுவனுக்குப் புனிதச் சடங்கினைச் செய்கிறார்கள்அதிகாலையிலேயே வீட்டை மெழுகிச் சுத்தம் செய்கிறார்கள்சுடுநீர் வைத்து அனைவரும் நீராடுகிறார்கள்பால் கறப்பதற்கான காரி எருமையைக் குளிப்பாட்டி மணிகள் கட்டி அலங்காரம் செய்கிறார்கள்புனிதச் சடங்கை ஏற்கவிருக்கும் சிறுவன் புதிய உள்ளாடைகளையும் மேலாடைகளையும் அணிந்திருக்கிறான்பெண்கள் மரியாதையுடன் ஒதுங்கியிருக்கிறா்கள்சிறுவனின் தந்தை காலையிலேயே பால்மனையைச் சுத்தம் செய்துவிடுகிறார்பால் கலயங்களைத் துலக்கி சுடுநீரூற்றி கழுவி வைத்திருக்கிறார்பரம்பரை பரம்பரையாகப் பயன்படுத்திவந்துள்ள மூங்கில் பாற்குழாயையும் சுத்தம் செய்து வைத்திருக்கிறார்அந்தப் பாற்குழாயை எடுத்து வந்து ஊரார் முன்பாகக் கிழக்கு முகம் பார்த்து எருமையின் மடியில் பால் கறக்கிறார்முக்கால் பங்கு நிறைந்ததும் பொறுப்பேற்கும் சிறுவனிடம் ஒப்படைக்கிறார்கள்சிறுவன் அந்த ஹொணேயை வாங்கி பாலைக் கறந்து பால்மனைக்கு எடுத்துச் செல்கிறான்வீட்டிலுள்ள அனைத்துப் பாத்திரங்களிலும் பாலைத் தெளிக்கிறான்தந்தை மீதும் தாயார் மீதும் பெரியவர்கள் மீதும் பாலைத் தெளிக்கிறான். “வற்றாத பால் வழங்க வளம் பெறுவாய்;  எருமைகளும் பசுவினங்களும் செழிக்கட்டும்” என்று ஒவ்வொருவரும் ஆசிர்வதிக்கின்றனர். (ராஜம் கிருஷ்ணன். 2001: 62-67).
3.11.7. இறப்புச் சடங்கு – கொல்லி மலை மலையாளிகளில் யாரேனும் இறந்தால் உடனே சாவு மேளத்துடன் செய்தி அனுப்புகிறார்கள்சாவு மேளமும் வான வெடியும் வயலுக்கோ சோலைகளுக்கோ சென்றவர்களை வரவழைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றனஉள்ளூர்காரர்கள் யாரும் வேலைக்குச் செல்ல மாட்டார்கள்வெளியூரிலிருந்து உறவினர்கள் அவர்களது ஊராருடன் வந்துவிடுகிறார்கள்உறவினரும் உறவினரது ஊராரும் துண்டு வேட்டி போன்ற பொருட்களைக் கொடுக்கின்றனர்உறவினர்கள் கொடுக்கின்ற பொருட்களைக் கோணி என்கிறார்கள்கோணியைப் பிணத்தோடு சேர்த்துப் புதைத்துவிடுகிறார்கள்சாவு நிகழ்ந்து குறைந்தது மூன்று நாட்களாவது இடைவெளிவிட்டுக் கருமாதி செய்கிறார்கள்சாமிக்குக் காப்பு கட்டுவதாக இருந்தாலோ மாதத்தின் கடைசி நாளாக இருந்தாலோ கருமாதியை அன்றே வைத்துவிடுகிறார்கள்.  சாவு நிகழ்ந்த அன்றே கருமாதியெனில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு ரூபாயும் ஒரு படி அரிசியும் கொண்டுவந்து சாவு வீட்டாருக்குக் கொடுத்து உதவுகின்றனர்அந்த அரிசியில் கருமாதியை முடிப்பதற்காகப் பொங்கலிடுதலும் வந்திருப்பவர்களுக்குத் தேவையான உணவு தயாரித்தலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. ‘சாமி கும்பிட வாங்க’ என்று அழைப்பு வருகின்றதுஇறந்தவனின் பழைய துணிகளை மடித்து வைத்து அதன் முன்னால் பொங்கல் படையலிட்டுச் சூடம் ஊதுபத்தி ஏற்றி வழிபடுகிறார்கள்படையலிட்ட பொங்கலை இறந்தவனைக் குளிப்பாட்டிய இடத்தில் போட்டு கை கழுவுகிறார்கள். ‘தலைக்குச் சீலை கொடுக்குறவங்க வாங்க’ என்று அழைக்கப்பட்டதும் இறந்தவனின் மகன் மொட்டையடிப்பதற்காக மனைவியின் சகோதரர்கள் அவனது தலைக்கு முடிச்சிட்ட பணத்துடன் சீலையைக் கட்டிவிடுகிறார்கள்சம்பிரதாய ஆறுதல் மொழியாக ஒரு பாடல் வழக்கம்போலப் பாடப்படுகின்றது. “நச்சுத் தலைவலி / நையாண்டிக் காய்ச்சல் / கோம்பை குதிச்சோம் / கோடங்கி பார்த்தோர் / கோடங்கி பார்த்த புள்ளே / கொறையெழுத்தா நின்னுபோச்சு / பள்ளம் குதிச்சோம் / பஞ்சாங்கம் பார்த்தோம் / பஞ்சாங்கம் பார்த்தபுள்ளெ / பாதியெழுத்தா நின்னு போச்சு / ஆணாப் பொறந்தார்க்கு / சந்தை தொணை / வேட்டை தொணை / கூட்டம் தொணை / பொண்ணாப் பொறந்தார்க்கு / நெக்கிரி தொணை / தண்ணி தொணை / வெறகு தொணை / ஆத்தக் கூட்டி ஊத்தெறச்சு / ஆயிரம் செந்நெல் வெளைவிக்க / அதுலெ ஒண்ணு சாவியாச்சு” இந்த வரிகளை ஒரு பெரியவர் முன் அடி எடுத்துப் பாட மற்றவரும் தொடர்ந்து பாடுகிறார்கள்இறுதியில் அனைவரும் பசியாற உண்டு கருமாதியை முடிக்கின்றனர். (சின்னப்ப பாரதி,கு. 2008: 261-264).
            படகர்களது ஹட்டியில் யாரேனும் இறந்துவிட்டால் உடனே தொரிய மல்லரை அழைக்கிறார்கள்இறந்த செய்தியை எங்கெல்லாம் சென்று யாரிடமெல்லாம் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி அனுப்பிவைக்கப்படுகிறார்கள்இசை சேவையை வழங்குவதற்காக கோத்தர்கள் அழைக்கப்படுகிறார்கள்செவ்வாய் கிழமையன்று இறந்தவரை தகனம் செய்ய மாட்டார்கள்கழிகளும் கம்புகளும் குச்சிகளும் சேகரித்து இறந்தவரின் இறுதி ஊர்வலத்திற்காக ஏழடுக்கில் சப்பரம் தயாரிக்கிறார்கள்சப்பரத்திற்குத் தேவையான துணிகள் பட்டுகள் அனைத்தும் வாங்கி வருகிறார்கள்இறந்தவரை அவரது மகள் குளிப்பாட்டுகிறாள்.  புதிய ஆடைகளை உடுத்தி நெற்றியில் இரண்டு வெள்ளி நாணயங்களை ஒட்டி சப்பரத்தில் படுக்க வைக்கிறார்கள்வானுலக யாத்திரைக்குத் தேவையான உணவாக வெல்லம்தினைமாவுசாமைஅரிசிகடலைபொரிபணியாரம் ஆகியவற்றைக் கூடைகளில் வைக்கிறார்கள்மக்களனைவரும் அவரது கால்களைத் தொட்டு வணங்குகிறார்கள்இறுதி காணிக்கைகளாக மஞ்சள் சிவப்பு கோடுகளிட்ட துணிகளைப் போர்வைக்குள் வைக்கின்றார்கள்இறுதி ஊர்வலம் நிகழ்கிறதுஇறந்தவரை மயானத்தில் எரியூட்டுவதற்கு முன்பாக பாவமன்னிப்பு பாடலொன்றைப் பாடுகிறார்கள்இறந்தவர் உயிர்வாழ்ந்தபோது செய்த பாவங்கள் அனைத்திற்கும் மன்னிப்பு வேண்டுகின்ற பாடலாகும். “முன்னோர் செய்த பாவம் / மூத்தோர் செய்த பாவம் / தான் செய்த பாவம் / தமியர் செய்த பாவம் / எல்லாம் விலகட்டும்! / எல்லைக் கற்கள் விலக்கிய பாவம் / எண்ணற்ற பொய்களின் பாவம் / ஏழையின் துயர் தீர்க்காத பாவம் / எளியோரை வாட்டிய பாவம் / பிறர் பூமி செழிக்கப் பொறுக்காத பாவம் / பிறர் மாடு கறந்திட பொறுக்காத பாவம் / அயல் வாழ்வு சிறந்திடத் தாளாத பாவம் / அசூயைக் கிடந்தந்த ஆகாத பாவம் / பச்சை மரங்களை வெட்டிய பாவம் / பசுவைப் பாம்பைக் கொன்ற பாவம் / கோள்மூட்டி பகை செய்த பாவம் / குளிரில் விரைத்தோரை விரட்டிய பாவம் / தண்ணீரைப் பிழைத்திட்ட பாவம் / தாயாருக்கிழைத்திட்ட பாவம் / உண்ணீரைக் கலக்கிட்ட பாவம் / ஊருக்குப் பிழை செய்த பாவம்”. இவ்வாறாக முந்நூறுக்கும் மேற்பட்ட பாவங்களைச் சொல்லி இறந்தவரின் ஆன்மாவைத் தூய்மையடைய வேண்டுகிறார்கள்வேண்டுபவர்கள் அனைவரும் தங்களது குற்றங்களையும் நினைத்துப்பார்த்து தூய்மையடைய முயல்கிறார்கள்இறந்தவரின் மகன் நெருப்பு வைக்கிறார். (ராஜம் கிருஷ்ணன். 2001: 400-405).
            தாணிக்கண்டியிலுள்ள இருளர்கள் யாரேனும் இறந்தால் வண்டாரி என்னும் சேவையாளரை அழைத்து இறப்புச் செய்தியை ஊரார் உறவினர் அனைவருக்கும் தெரியப்படுத்தச் சொல்லி அனுப்புகிறார்கள்பொரைகொகால்பீக்கிஜால்ரா ஆகிய இசைக் கலைஞர்களின் இசைச் சத்தம் முழங்கிக்கொண்டு இருக்கின்றனமரண செய்தி கேட்பதற்காக வருகை தருகின்ற குலத்து மனிதர்கள் காய்ந்த குச்சி அல்லது பிரம்புடன் வருகிறார்கள்இறப்பு வீட்டார் வண்டாரியின் மூலமாக அந்தக் குச்சிகளைச் சேகரித்து வைக்கிறார்கள்சப்பரம் கட்டப்படுகின்றதுஒரு அடி உயரத்தில் நான்கு குச்சிகளை நடுகிறார்கள்அந்தக் குச்சிகளுக்கு மேலாக பாடை அமைக்கப்பட்டிருக்கின்றதுபிறை சந்திர வடிவில் பாடையைத் தயார் செய்கிறார்கள்ஏழு பெண்கள் கூடி இறந்தவனின் மனைவிக்குச் சடங்கு செய்கிறார்கள்இருளப் பெண்களின் தாலி கருப்பு பாசியால் கோர்க்கப்பட்ட கயிறாகும்இறந்தவனது மனைவியின் கழுத்திலிருந்த கருப்பு பாசிக் கயிறை அறுத்து இறந்தவனது கால் பெரு விரலில் கட்டுகிறார்கள்அவளது தலைமுடிகளில் இரண்டொன்றை பிடுங்கி இறந்தவனது கால் பெருவிரலில் கட்டுகிறார்கள்நீலி வாய்க்காலிலிருந்து எடுத்தவந்து தண்ணீரை குறுநாககுப்பிலிகஆறுமூக் ஆகிய குலத்தவர்கள் இறந்தவரின் உடல் மீது தெளிக்கிறார்கள்இறந்தவரின் வீட்டிற்குள் சென்று நீர்கோமியம் ஆகிய இரண்டையும் தெளிக்கிறார்கள்இறந்தவனை இறுதி ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம் செய்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 22-30).       
            சோளகர் பற்றிய புதினத்தில் இறப்பு கருமாதி செய்திகள் செறிவாக அமையவில்லை.

3.12.சுகாதாரம்
            சோளகர்கள்படகர்கள்தாணிக்கண்டி இருளர்கள் ஆகியோரது வாழ்க்கைச் சூழல்கள் சுகாதாரப் பிரச்சனைகளற்ற ஆரோக்கியமான நிலைமையைக் கொண்டிருக்கின்றனகொல்லி மலை மலையாளிகளிகள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் ஆகியோரது வாழ்க்கைச் சூழலில் சுகாதாரப் பிரச்சனைகள் இருக்கின்றன.
            கொல்லிமலை மலையாளிகள் வாரம் ஒரு முறைதான் குளித்து உடம்பை சுத்தம் செய்கிறார்கள்ஞாயிறு விடுமுறையன்று மட்டும்தான் ஓடைக்குச் சென்று சுடுநீர் வைத்துக் குளிக்கவும்நிதானமாகத் துணி துவைக்கவும் வாய்ப்புடையவர்களாக இருக்கிறார்கள்வாரம் ஒரு முறை குளிப்பதனால் அழுக்கான உடலில் பேன்கள் ஊறுவது இயல்பாக இருக்கின்றதுதலைக்குத் தேய்த்துக் குளிப்பதற்காக ஆட்டுப்பால்ஆட்டுத்தயிர் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
            தேன்கனிக்கோட்டை இருளர்கள் தலைக்கு களிமண்ணைத் தேய்த்துக் குளிக்கின்றார்கள்தேன்கனிக்கோட்டையிலுள்ள ஏரியில் குளித்தல்துவைத்தல்கால்கழுவுதல்,  மாடுகளைக் குளிப்பாட்டுதல் அனைத்தும் நிகழ்த்தப்படுகின்றனஇந்த நீரையே குடிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

3.13.பாலின அதிகாரம்
கெம்பம்மாள் இறந்து போன தனது கணவனின் தம்பியை மறுதிருமணம் செய்ய விரும்புகிறாள்இதனை அறிந்த சிக்குமாதாவின் தந்தை இளைய மகனிடம் கெம்பம்மாளின் மீது வெறுப்புணர்வை உருவாக்க முயல்கிறான்உன் அண்ணி குடிசைக்குப் போகாதேஅவளை திருமணம் செய்து கொண்டதால்தான் உன் அண்ணன் இறந்துபோனான் என்பதாக அவதூறாக பேசுகிறான். (பாலமுருகன்,.2013: 50)
வீரபத்திரன் மல்லி இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு இழுத்துச் செல்கிறார்கள்மல்லி காவல்துறையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்மேலும்வேற்று சாதிப் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறாள்விடுதலையடைந்து இருவரும் வீடு திரும்பியபோது கணவனும் வீட்டாரும் ஊராரும் இவளைச் சாதி கெட்டுபோனவளாகச் சொல்லி ஒதுக்கிவைக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 151)
3.13.1.வீட்டுக்கு தூரம் வைத்தல் – பெண்களை அவர்களது மாதவிடாய் காலங்களில் தீட்டானவர்களாகக் கருதுகிறார்கள்ஆகவே அவர்களது மாதவிடாய் நாட்களில் வீட்டுக்குத் தூரமாகத் தள்ளி வைத்துவிடுகிறார்கள்ஊரிலுள்ள பொது குடிசையில் அந்தப் பெண்கள் தனியாகத் தங்கவைக்கப்படுகிறார்கள்அவர்கள் சுத்தமாகும்வரை வீட்டிற்குள் நுழையக் கூடாதுவீட்டிலுள்ளவர்கள் உணவைத் தயார் செய்துவந்து கொடுத்துச் செல்ல வேண்டும்வீட்டிற்குத் தூரமான பெண் பொது குடிசையில் தங்காமல் வீட்டிலேயே தங்கியதாகத் தெரியவந்தால் பஞ்சாயத்தார் முன்பு குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவாள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 54).
3.13.2.பால்மனை உரிமை மறுப்பு - மரகதமலை ஹட்டியில் படகர்கள் பால் கறந்து பால் மனைக்குச் செல்லுதல் என்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள்ஹொணே என்ற அந்த மூங்கில் பாத்திரத்தில் ஆண்கள் பால் கறக்கிறார்கள்அந்தத் தருணங்களில் பெண்கள் மறைவாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறார்கள்பெண்களின் பேச்சுக் குரல்கூட கேட்கக் கூடாது என்று வலியுறுத்தப்படுகிறார்கள்பால்மனை என்ற அறைக்குள் நுழைவதற்கான உரிமை பெண்களுக்கு கிடையாதுபேதைப் பருவம் தாண்டிய பெண்கள் பாலைக் குடிக்கக்கூடாது என்பதாகக் கற்பிக்கப்படுகிறார்கள். (ராஜம்கிருஷ்ணன்.2001: 33).
            தமிழகப் பழங்குடிகளின் வாழ்வில் தந்தைவழி அதிகாரச் சமூகம் நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதால் பாலின அதிகாரம் என்பது ஆணாதிக்க நலன் சார்ந்து பெண்கள் மீது சுமத்தப்படுகின்ற ஒடுக்குமுறையாகவே இருக்கின்றது.

3.14.நம்பிக்கை
3.14.1.தெய்வம் பற்றிய நம்பிக்கை
3.14.1.1.மணிராசன் – தொட்டியினர் தங்களது வாழ்வை அநீதியாக வாழ்ந்தால் மணிராசன் கோபத்திற்கு ஆளாவோம் என்பதாக நம்புகிறார்கள்மணிராசன் மக்களைக் காப்பதற்காகத் தினமும் இரவில் வலம் வருகிறார் என்பதாகவும் தீய ஆவிகளிடமிருந்து தொட்டி மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதாகவும் நம்புகிறார்கள். (பாலமுருகன்,.2013: 23).
3.14.1.2.ஜடைசாமி – ஜடைசாமி தனது காட்டில் மனிதர்கள் வேட்டையாடுதலுக்கான எல்லையை வகுத்திருக்கிறான் என்று நம்புகிறார்கள்சோளகர்களுக்கு வேட்டைப்பொருள் அல்லாத உயிரினத்தை வேட்டையாடினால் ஜடைசாமியின் கோபத்திற்கு ஆளாக நேரும் என்று நம்புகிறார்கள். (பாலமுருகன்,.2013: 27).
3.14.1.3.பிள்ளையார் - சாணி வெட்டு விழாவில் பிள்ளையார் உருவத்திற்கு சாணியைப் பூசிவிட்டால் சாணியிலிருந்து தன்னை சுத்தம் செய்துகொள்வதற்காகப் பிள்ளையார் மழையைப் பொழியச்செய்வார் என்பதாக மலையாளிகள் நம்புகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 107).
3.14.1.4.தேவர் காடு - நாற்றாப்பாளையம் வனத்திலுள்ள தேவர் காடு என்ற பகுதியில் இறைவன் உறைந்திருப்பதாக நம்புகிறார்கள்தேவர் காட்டில் வன விலங்குகளை வேட்டையாடினால்கூட  உயிரினங்களின் உடலைக் கருவிகளும் குண்டுகளும் துளைக்காது என்ற நம்புகிறார்கள்இந்த வனத்தில் வேட்டையாடுதலோ மரம் செடிகளுக்கு தீங்கு செய்தலோ கூடாது என்று கருதுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 126).
3.14.2.ஆவி பற்றிய நம்பிக்கை
3.14.2.1.முன்னோர்களின் ஆவி – இறந்தவர்களது எலும்புகளுள்ள கெப்பை குழியில் சோளகர்களின் முன்னோர்களது ஆவிகள் உறைந்திருக்கின்றன என்று  நம்புகிறார்கள்முன்னோர்களது ஆவி தங்கள் குடும்பத்தைப் பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.
3.14.2.2.துர்ஆவி – கெட்ட மனிதர்கள் அகால மரணமடைந்தால் அவர்கள் ஆவியாக அலைகிறார்கள் என்பதாக நம்புகிறார்கள்அத்தகைய கெட்ட மனிதர்களின் ஆவியை துர்ஆவி என்கிறார்கள்துர்ஆவிகளிடமிருந்து தொட்டி மக்கள் மணிராசன் கடவுளால் காப்பாற்றப்படுவதாக சோளகர்கள் நம்புகிறார்கள்.
3.14.3.விலங்கு பற்றிய நம்பிக்கை
3.14.3.1.யானை - யானைகளைத் தெய்வத் தன்மையுள்ள உயிரினமாக சோளகர்கள் நம்புகிறார்கள்யானைகள் சத்தியவாக்கிற்குக் கட்டுப்படுகின்ற உயிரினமாதலால் அநீதியாக நடந்துகொள்ளாது என நம்புகிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தீட்டுக் கழிக்காமல் இரண்டு மூன்று நாட்களில் வீட்டிற்கு வந்துவிட்டால் யானை ஊருக்குள் புகுந்துவிடும் என்று நம்புகிறார்கள்.
3.14.3.2.பாம்பு - தாணிக்கண்டி இருளர்கள் பாம்பைப் பார்த்துவிட்டுச் சென்றால் நினைத்த காரியம் நடக்காது என்பதாக நம்புகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பாம்பை அடித்துவிட்டு தலையை நசுக்காவிட்டால் கொன்றவர்களைத் தேடிப்பார்த்து பழிவாங்கும் என்பதாக நம்புகிறார்கள்அடித்தப் பாம்பைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டால் மழைவராது என்று நம்புகிறார்கள்.
3.14.4.பறவை பற்றிய நம்பிக்கை
3.14.4.1.காகம் -கால நேரத்திலே ஒத்தக் காக்கா கூரையிலே உக்காந்து கத்துச்சுனா ஒன்னு யாராவது ஒறம்பரை வரணும்இல்லாட்டி சாவுச்சேதி வரனும்” (சின்னப்பபரதி,கு.2008: 259.) காகம் சப்தமிடுவதைப் பற்றி இவ்வாறாக நம்புகிறார்கள்.
3.14.4.2.ஆள்காட்டிக்குருவி - தேன்கனிக்கோட்டை இருளர்கள் பயணத்தின்போது ஆள்காட்டிக்குருவியை சாஸ்திரக் குருவி என்று அழைக்கிறார்கள்சாஸ்திரக்குருவி சப்தமிட்டால் இரண்டுமுறை சப்தமிடுகிறதா என்பதைக் கவனிக்கிறார்கள்ஒரு முறை சப்தமிட்டால் கெட்டது நிகழும் என்று நம்புகிறார்கள்இரண்டு முறை சப்தமிட்டால் நல்லது நிகழும் என்று நம்புகிறார்கள்.

3.14.5.பிற நம்பிக்கைகள் – மலையாளிகள் குடுகுடுப்பைக்காரன் இரவில் குறிசொன்னால் பலிக்கும் என்று நம்புகிறார்கள்அவன் நிகழ்வதாகக் குறிப்பிடுகின்ற கெட்டச் சூழல்களை அவனது பரிகார சடங்குகள் மூலமாக சரிசெய்ய முடியும் என்று நம்புகிறார்கள்திருமண காரியமாக செல்பவர்கள் வழியில் கட்டுக்கழுத்தி நிறைகுடத்துடன் செல்வதைப் பார்த்தால் நல்ல சகுணம் என்பதாக நம்புகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் மந்திரித்து விபூதி பூசினால் காய்ச்சல் போன்ற நோய்கள் குணமடையும் என்று நம்புகிறார்கள்குறும்பர்கள் செய்வினை செய்பவர்கள் என்பதாக படகர்கள் நம்புகிறார்கள்நோய் வந்தவர்களைக் குணமாக்குவதற்கான மூலிகை வேர்களைக் குறும்பர்கள் மந்திரித்துத் தருகிறார்கள்அதனை அவர்கள் சொல்லும் முறையில் கசாயம் வைத்துப் பயன்படுத்தினால் நோய் குணமடைவதாக நம்புகிறார்கள்அவர்கள் மாய மந்திரங்கள் செய்யும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது படகர்களின் நம்பிக்கை.

சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 4

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை