Saturday, May 23, 2020

காவல்கோட்டம் நாவலில் பாலின அரசியல் 2


     காவல்கோட்டம்  நாவலில் பாலின அரசியல் 2

காவல் செய்து காவக்கூலி வாங்கும் தாதனூர்க்காரர்களில் கொடிக்கா வகையறாக்கள் மட்டும் விதிவிலக்கு. இவர்கள் அரண்மனைக்கோநகரத்தெருக்களுக்கோகிராமங்களுக்கோ காவல் தொழில் செய்தது ராணி மங்கம்மாவின் காலத்திலிருந்தே விடுபட்டது. மங்கம்மாளின் வெற்றிலைத் தோட்டத்திற்கு காவல் வேலை கிடைத்ததால் மற்ற தாதுனூர்க்காரர்களைப் போன்ற முறையில் கொடிக்கா வகையறாவைச் சேர்ந்தவர்கள் காவக்கூலி பெறுவதில்லை. ஆனால் மங்கம்மா காலத்திற்குப் பிறகு வெற்றிலைத் தோட்ட காவல் நிறைவுபெற்றது. அரண்மனைத் தோட்டக்காவலையும் இழந்துமற்ற தாதனூர்க்காரர்களைப் போன்ற காவக்கூலி பெறுகின்ற உரிமையையும் இழந்து வாடியது கொடிக்கா வகையறா. இதற்கு முடிவுகட்டும் நோக்கத்துடன் பல பிரச்சினைகள் நடந்துள்ளன. இறுதியாகத் தாதனூர் கருப்பு கோயிலில் நீதி கேட்டுப் பெண்களுடன் கூடியிருந்தார்கள் கொடிக்கா வகையறாக்கள். 

இந்த நிகழ்வின் மூலம் ‘கலகம் செய்வது ஆணின் பண்புபயம் என்பது பெண்ணின் பண்பு’  என்ற சமூகத்தின் பாரம்பரிய கருத்திற்கு எதிராகப் பெண்கள் கலகம் செய்தால் அஞ்சாத ஆண்களே கிடையாது என்ற கருத்தைப் பதிவு செய்கிறார். ‘ஆமாம்பா… கலகம் பண்றதுக்காகவே பொம்பளப்புள்ளைகளபூரா கூட்டி வந்திருக்காங்கெ. அவளுகளும் கொண்டைகள இழுத்து முடிஞ்சிட்டு வந்து நிக்கிறாளுக’(சு.வெங்கடேசன்: 2008,பக்-507) இந்த வார்த்தைகள் ஊர்ப் பெரியாம்பள மாயாண்டிப் பெருசிடம் அவரை அழைத்து வரச்சென்ற பேயாண்டியின் வார்த்தைகளாகும்.
பேயாண்டியின் இத்தகைய வார்த்தைகள் வெளிப்படுத்துவது எதை

ஊர்;க்கூட்டத்தில் பெண்கள் சாதாரணமாக கலந்துகொள்ள முடியாது. ஆண்கள் மட்டுமே கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய இடத்தில் பெண்களுக்கு என்ன வேலைஆம்ஊர்க்கூட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது. பெண்கள் கலந்து கொள்வது ஆண்களுக்கு இழிவு. காவல் உரிமைக்காக தாதனூரில் முன்பு நடந்த கூட்டமெல்லாம் கொடிக்காவகையறாவின் ஆண்களோடு மட்டுமே முடிந்து போயுள்ளது. அதனால்தான் இழிவென்றும் பாராமல் இந்த முறை பெண்களையும் கூட்டி வந்துள்ளனர் கொடிக்காவகையறாக்கள். 

தானாக முன்வந்து கூட்டத்தில் பங்கு பெறவில்லைபெண்கள் ஆண்களால் கூட்டி வரப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறந்து விடவேண்டாம். ஏதாவது வழியில் பெண்கள் கலந்து கொண்டால் அதிகாரம் படைத்த ஆண்கள் எப்படி ஏசுகிறார்கள். கொடிக்கா வகையறாப் பெண்களை நையாண்டி செய்து அறிமுகப்படுத்த அவசியம் என்ன இருக்கிறது. ஆண்களை முதன்மைப்படுத்தி பெண்களை இழிவுபடுத்துகின்ற அரசியல்தான் இருக்கிறது. அதனால்தான் பேயாண்டியின் வார்த்தைகளை இவ்வாறு செதுக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.

கருப்பு கோயிலில் கொடிக்கா வகையறா பெரியாம்பள மண்டையன் ‘யப்பா… நாங்களும் சடச்சி மக்கதான். இனியும் எங்கனால பொறுக்க முடியாது. மருத காவல்ல எங்களுக்குன்னு நாலு தெரு பகுந்து வுடு’  (சு.வெங்கடேசன்: 2008,பக்-510) என்று பேச்சை தொடங்கி வைத்தார். பிறகு இருநூறு ஆண்டுகால நிகழ்வுகளை ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டியும்நையாண்டி செய்தும்ஈவு இரக்கமில்லாமலும் ஆளாளுக்குப் பேசிக்கொண்டிருந்தனர். யாரோ உதிர்த்து விட்ட வார்த்தைகள் கொடிக்கா வகையறாவின் செல்லாயிக்கிழவியை உசுப்பேற்றிவிட்டது. ‘ஆம்பளய ஆசப்பட்ட தேவடியாளும் கெட்டா… பொம்பளய ஆசப்பட்ட காவக்காரனும் கெட்டான்டா…’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-511) என்ற வார்த்தைகளைக்கேட்டு கொதித்துப் போன செல்லாயிக்கிழவியின் பேச்சு தாதனூக்காரர்ளை உண்டு இல்லையென்று செய்தது. எவனும் பதில் பேச முடியாத அளவிற்கு கேட்க முடியாத வார்த்தைகளைக் கொட்டித்தீர்;த்தாள்.
மாயாண்டிப்பெருசு கூட்டத்திற்கு வந்த போது கூட அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது கூட்டத்தின் முன்பகுதியில் அமைதியாய் அமர்ந்திருந்த இந்த செல்லாயிக்கிழவிதான். இவள் மாயாண்டிப் பெருசுவின் வயதை ஒத்தவள். கொடிக்கா வகையறாவின் உயிரோடு இருப்பவர்களில் மூத்த கிழவி. “பொண்டுகச்சட்டிப்பய நீயெல்லாம் ஊர் பெரியாம்பள” (சு.வெங்கடேசன்: 2008,பக்-511) என்ற செல்லாயிக்கிழவியின் வார்த்தைகள் மாயாண்டிப் பெருசை அரட்டிப்போட்டது. ‘இப்ப சொல்றெ கேட்டுக்கோ… வர்ற அமாவாசைக்குள்ள காவப்புடிச்சு வுடலைன்னா என்ன நடக்கும்னு தெரியாது’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-511)என்று எச்சரித்து கூட்டத்தை முடித்து வைத்தாள் செல்லாயிக்கிழவி.  அவ்வாறே மதுரைக்கு பக்கத்திலிருக்கும் பெரிய கிராமமான நெடுங்குளத்தை காவல் பெற்றார்கள் கொடிக்கா வகையறா.

கூட்டத்தில் பெண்கள் தங்கள் கருத்துக்களையோஉணர்வுகளையோ வெளிப்படுத்துவது அநாகரிகமானது என்ற சமூகத்தின் ஆணாதிக்க கருத்திற்கு எதிராக ஒரு பெண்ணாகிய செல்லாயிக்கிழவியின் பேச்சு அந்த கூட்டத்தில் எவ்வளவு முக்கியத்துவமும்முதன்மையும் பெற்றிருந்தது என்பதை இங்கு அழகாக சித்தரித்துள்ளார் ஆசிரியர்.  ஆயினும் கொடிக்கா வகையறா செல்லாயிக்கிழவியை பெரியாம்பள மாயாண்டிப் பெருசுக்கு நிகரானவராக கருத இடமில்லை. பெரியாம்பள என்பது கூட்டத்தின் தலைமைப் பண்புள்ளவரை குறிக்கும் ஒரே சொல்பெரியமனுசிபெரியாத்தா போன்ற சொல் இதற்கு நிகரான சொல் அல்ல. காவல் உரிமைகேட்கும் கொடிக்கா வகையறாக்களை தலைமையேற்று வழிநடத்துபவர்  பெரியாம்பள மண்டையனேசெல்லாயிக்கிழவி அல்ல. தாதனூர்க்காரர்களை அரட்டிப்போட்ட செல்லாயிக்கிழவியின் வார்த்தைகள்  அவர்களின் கல்லெறி போலவும்வளறியெறி  போலவும் வீரியமானதாக தோன்றினாலும்உண்மையில் கொடிக்கா வகையறாவின் சார்பாக தாதனூர் பெரியாம்பள மாயாண்டி என்ற ஆணிடம் செல்லாயிக்கிழவி என்ற பெண் முறையிடுவதாகவே அமைத்திருக்கிறார் நாவலாசிரியர்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் காவல்முறை ஒடுக்கப்பட்டது. ஐரோப்பிய பாணியில் சட்டம் ஒழுங்குநீதித்துறைகாவல்துறை போன்ற தனக்குச் சாதகமான வடிவங்களை இங்கு நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தது பாரம்பரியம். பாரம்பரியமாக இருந்த காவக்கூலி முறையை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டது. காவல்துறையினர்க்கும்காவல்காரர்களுக்கும் இடையிலான வீரம் செறிந்த சண்டைகள் அதிகமாகவே நடந்துள்ளன. காவல்காரப் பெண்களின் வீர உணர்வுகள் வெளிப்படுகின்ற பல சம்பவங்கள் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போலீஸ்காரர்கள் காவக்காரர்களை அடித்து நொறுக்கி கைது செய்து இழுத்துப் போகிறார்கள். விராட்டிப்பத்தை கடந்து செல்லும் போது விராட்டிபத்து காவக்காரனின் மனைவி வீராயி என்பவள் தண்ணீர் கொடுப்பதற்காக ஓடுகிறாள். போலீஸ்காரர்கள் தடுக்கிறார்கள். ‘ஏ மாமே மச்சாங்களுக்கு நீங்க என்னடா தண்ணீ கொடுக்கக் கூடாதுன்னு சொல்றது’(சு.வெங்கடேசன்: 2008,பக்-817)  என்று நரம்பு புடைக்க கோபத்தோடு கத்துகிறாள். குதிரையிலிருந்த ரிசர்வ் போலிஸ் சார்ஜன்ட் ஸ்பெல்டிங் தண்ணீர் குடத்தை எட்டி உதைத்துக் கொட்டினான். அவ்வளவுதான்அடுத்த நொடியில் கண்சிமிட்டும் நேரத்தில் அவளது வீரச்செயல் அரங்கேறியது. அவனது காலைப்பிடித்து கீழே இழுத்து இடுப்பிலிருந்த பனங்கருக்கால் சங்குக்குழியை அறுத்துக்கொன்றாள். அடுத்த சில நிமிடங்களில் போலிஸ் நாய்களால் அடித்தே  கொல்லப்பட்டாள்.

ஊர்க்கண்மாயில் வயிறு கிழிக்கப்பட்ட ஓரு பிணம். கோரைப்புல் தூரைப் போல பிணத்தைச்சுற்றிலும் கொத்துக் கொத்தாக மிதந்தன அதன் குடல்கள். இன்ஸ்பெக்டர் சேதுப்பிள்ளைக்கே இந்த நிலமையா! என்று கச்சேரி போலீஸார் அனைவரும் அச்சத்தில் உறைந்திருந்தனர். வண்டியோட்டி சொன்னதை முக்கிய அதிகாரி ஸ்டீபென்ஸன் நம்புவதற்கு தயாரில்லை. ஆனாலும்;, டி.எஸ்.பி. ஸ்டெட்மென்ட்டாக எழுதிவாங்கிக்கொண்டார். ஸ்டேட்மென்ட்டில் இருப்பதும்ஸ்டீபென்ஸன் நம்ப மறுத்ததும் இதுதான். 

இன்ஸ்பெக்டர் சேதுப்பிள்ளையைக் கொன்றது இரண்டு பெண்கள். கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தான் சேதுப்பிள்ளை. புல்லுக்கட்டு தூக்கிப் போன வழியில் கண்மாயில் சிக்கிய விஷமியை இரண்டு வீரப் பெண்களும் நழுவ விடாமல் காரியம் சாதித்துள்ளனர்.

மொக்கைச்சாமிமந்தைக்கல் பெரியாம்பள என்று எல்லோராலும் கிண்டலாக அழைக்கப்படுபவர். ஊர்ப்பெண்களை ஒருத்திவிடாமல் வம்பளப்பவர். ஆனால்கழுவாயியைக் கண்டால் மட்டும் மனுசன் பொட்டிப் பாம்பாக ஆயிடுவான். அவ முக்கு திரும்புனா போதும்மந்தைக்கல்ல விட்டு எந்திருச்சு எவ்வளவு வேகத்துல போவார்னு சொல்லமுடியாது. இவர் கழுவாயிக்கு மட்டும் இப்படி பயப்படுவதற்கு என்ன காரணம் என்பது ஊருக்கே தெரியாத ரகசியம். உண்மையில் கழுவாயியின் பலமே அவரை பயமுறுத்தியிருக்கிறது. மந்தையில் கிடக்கும் இளவட்டக் கல்லை இரண்டுமூன்று முறை தூக்கிப் போடுகின்ற பலம் அவளுக்குத்தான் உண்டு. “பொசகெட்ட ஆம்பிளைக ஆட்டையும் கன்னுக்குட்டியையும்தான் தூக்குவாங்கெ. என்னோட வயசு ஆம்புளைய வந்து கல்ல மூனு  தடவ தூக்கிப் போடச் சொல்லு பாப்போம்” (சு.வெங்கடேசன்: 2008,பக்-983); என்று மந்தையில் நின்று சவால் விட்டு கூப்பிடுவாள். எங்கே தன்னை நேருக்கு நேராக கல்லைத்தூக்கச் சொல்லி கூப்பிட்டுவிடுவாளோ என்று ரோசப்பட்டுதான் மந்தைக்கல் பெரியாம்பிளை இவளைப் பார்த்தபோதெல்லாம் ஓடி ஒளிந்தார். 

இந்தக் கழுவாயிதான் ஒரு இரவில் அவுட்போஸ்ட் கட்டிடத்திற்கு அருகிலுள்ள புதரில் மறைந்து கொண்டாள். வெளியில் காவலுக்கு நின்ற வெள்ளைக்கார போலிசுகளில் ஒருவனை மட்டும் அடித்து பன்னரிவாளால் மூன்றே இழுவையில் கழுத்தைத் தனியாக அறுத்து எடுத்து அவுட்போஸ்ட் கட்டிடத்திற்குள் வீசி எறிந்து போலீஸ்காரர்களைப் பயத்தில் உறைய வைத்தாள். பின்னொரு நாள் இந்த வீரப்பெண்ணும் போலீஸ் நாய்களால் காணாமல் போய்விட்டாள்.

கச்சேரிப் போலீஸ்காரர்கள் மீது ஒரு மிகப் பெரிய தாக்குதலை வீரப்பெண்கள் திட்டமிட்டிருந்தனர். அவர்களது திட்டம் வெற்றி பெறுவதற்கு ஏதுவான முறையில் பெண்கள் கூட்டமாகக் கூடி கச்சேரி போலீஸ்காரர்கள் அறிய முடியாத அளவிற்குக் கிணற்றின் வாயை அடைத்துவிட்டுச் சென்றார்கள். அவ்வளவுதான்அன்று இரவு கச்சேரி போலீஸ்படைமீது காளைகளை ஏவி;தாக்குதலை நிகழ்த்தினர். ஆறுகாளைகள் முழு போலீஸ்படையையும் குத்திக் கிழித்த செய்தி ஆட்சியாளர்களைத் தொடை நடுங்க வைத்தது. அந்த ஆறு காளைகளில் அங்கம்மாக்கிழவியின் பேத்தி பின்னியக்காளின் காளைகள் மட்டும் இரண்டு. கச்சேரி போலீஸார் பின்னியக்காளைத் தேடினார்கள். இன்னொரு திட்டத்திற்குத் தன் காளைகளைத் தயார்படுத்தி அனுப்பி வைத்தாள்பின்னியக்காள். மறுநாள் காலையில் காளைகள் குடல்சரிந்து இறந்து கிடந்தன. அந்த சோகத்திலேயே கிடந்தவள் ஐந்தாம் நாளில் உயிரை விட்டாள்.


தாதனூருக்கு ஜல்லிக்கட்டுக்காளைகளை அனுப்பியதிலிருந்து போலீஸ் கையில் சிக்காமல் இருந்த அங்கம்மாக்கிழவி நல்லூர் முகாமில் சிக்கினாள். கிழவி என்று கூட பார்க்காமல் ஆளாளுக்கு மிதித்தார்கள். பெரியாத்தாவைக் காப்பாற்ற குரல் கொடுத்தவர்களுக்கான அடியில் பாதியையும் கிழவியே வாங்கிக் கட்டிக்கொண்டாள். பிறகுஅரைமயக்கத்திலிருந்த கிழவி எதிரில் நின்றுகொண்டிருந்த போலீஸை நோக்கி கும்பிடுவதைப்போல செய்கை செய்தாள். என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என நின்றுகொண்டிருந்த அந்த வெள்ளைக்காரன் மேல் சற்றும் எதிர்பாராதபடி பாய்ந்து குரல்வளையைக் கடித்துத்துப்பினாள். மூஞ்சியெல்லாம் ரத்தம் தெரித்தது. போலீஸ்காரனின் அலறலில் லத்திகள் கிழவியின் உடலை நொறுக்கித்தள்ளின. நல்லூர் மந்தையில் குப்புற விழுந்தபடி வீரக்கிழவியின் உயிர் பிரிந்தது. 

இவ்வாறு தாதனூரின் பெண்கள் கச்சேரி போலீஸ்காரர்களுக்கு எதிராக நிகழ்த்திய வீரதீரச் செயல்கள் நம்மை உறைய வைக்கின்றன. 
மக்கள் மறந்து விடுவதில்லை. தங்களுடன் வாழ்ந்தவர்களையும் தங்களுக்காக வாழ்ந்தவர்களையும் ஏதேனும் வழியில் நினைவு கொள்கிறார்கள். ஊர்ப் பெரியாம்பள மாயாண்டிப்பெருசின் மகள் அங்கம்மாக்கிழவியும். அவளது பேத்தி பின்னியக்காளும்போலிஸ்காரர்களைத் தொடை நடுங்கவைத்த அவளது கொறவக்காளையும் வீரணக்காளையும் பட்ட சாமிகளாக வழிபடப்பட்டன. ஒரு வேப்பமரத்தின் அடியில் நடப்பட்டுள்ள இரண்டு பெரிய மற்றும் சிறிய குத்துக்கற்களே அந்தப் பட்ட சாமிகள். அந்த வேப்பமரத்தை மாயாண்டிப் பெருசாகக் கருதினார்கள். நாவலின் முடிவுக்கு முன் ‘மாயாண்டிப் பெரியாம்பிள கிளை பரப்பி வேம்பென நின்று கொண்டிருந்தார்’(சு.வெங்கடேசன்: 2008,பக்-1039) என நாவலாசிரியர் குறிப்பிடுவது எதைக் குறிக்கின்றதுமண்ணின் வீரப்பெண்களான அங்கம்மாக்கிழவி மற்றும் பின்னியக்காளின் வரலாற்றுப் புகழ் மாயாண்டிப் பெரியாம்பள என்ற ஆணுக்குள் அடங்கி விடுகிறது என்பதையே.

கம்பணன்கிருஷ்ணதேவராயர்விஷ்வநாதன் போன்றவர்கள் பெண்ணின் உணர்வுகளை மதிக்கும் பெருந்தன்மை உடையவர்களாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும்பெருந்தன்மை என்பதும் அதிகாரத்தின் வெளிப்பாடு என்பதை மறந்து விட முடியாது. வெகு சில காரணங்களால் அதிகாரம் நிறைந்த இத்தகைய ஆண்கள் ஒருசில பெண்களின் உணர்வுகளை மதிக்கிறார்கள். ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதையைசமஉரிமையைஉணர்வு வெளிப்பாட்டை மதிக்கக் கூடியவர்கள் அல்ல என்பதே இதன் பொருள். அதிகாரம் படைத்த நாங்கள் அதிகாரமற்ற எல்லோரிடமும் மோசமாக நடந்து கொள்வதைப் போல நான் உங்களிடம் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் பெருந்தன்மை. நாவலில் இடம் பெற்றுள்ள இத்தகைய பெருந்தன்மையாளர்களை ஆணாதிக்க போக்கிற்கு எதிரான கதாப்பாத்திரங்களாக கருத முடியாது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

          கர்ப்பினிப்பெண் சடச்சிகங்காதேவிமுந்நூற்றுவர் குதிரைப்படை வீராங்கனைகள். துக்காதேவிதாதனூரை நடுங்கவைத்த செல்லாயிக்கிழவிவிராட்டிப்பத்துக் காவக்காரனின் மனைவி வீராயிஇன்ஸ்பெக்டர் சேதுப்பிள்ளையைக் கொன்ற இரு வீரப் பெண்கள்கழுவாயிஅங்கம்மாக்கிழவிபின்னியக்காள் ஆகிய பெண்களது வீர வெளிப்பாடுகள் மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயினும் ‘என்நிகழ்காலம் உங்கள் நிழலிலேயே கழிந்து விட்டது. இது போதும் எனக்கு’(சு.வெங்கடேசன்: 2008,பக்-28) என்ற கங்காவின்  வார்த்தைகளும்,

பெண்மனதின் குமுறல்களை நீ அறிய மாட்டாய். அந்தப்புரத்தின் சுவர்களுக்குள்தான் அவள் எதையும் செய்ய முடியும்’ (சு.வெங்கடேசன்: 2008,பக்-64) என்ற துக்காதேவியின் வார்த்தைகளும்,

பெரியாம்பிள கிளை பரப்பி வேம்பென நின்று கொண்டிருந்தார்’(சு.வெங்கடேசன்: 2008,பக்-1039) என்ற சொற்களின் பயன்பாடும் நமக்கு உணர்த்துவது இதுதான். 

பெண்களை அடிமைப்படுத்தும் பாரம்பரிய கருத்திற்கு எதிராக பெண்களை அமைத்திருக்கிறார். ஆனால்பெண்களை வீரர்களாக படைத்திருப்பதன் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக தோன்றினாலும்அதன் உள்ளீடாக ஆண்களை முதன்மைப்படுத்துவதே ஆசிரியரின் நோக்கம். அதுவே நாவலிலும் வடிக்கப்பட்டுள்ளது.

          நாவலில் வெளிப்பட்டுள்ள இத்தகைய ஆணாதிக்கத் தன்மையானதுபெண் விடுதலையில்தான் சமூக விடுதலை அடங்கியிருக்கிறது என்றுணர்ந்துள்ள மார்க்சியராகிய நாவலாசிரியரின் வெளிப்பாடு என்பதை மறுக்கமுடியாது. ஆனாலும்இது திட்டமிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாஅல்லது ஆயிரமாயிரம் காலமாய் நம் மூளையில் வேரூன்றியுள்ள ஆணாதிக்கப்போக்கு நம்மை மீறிக்கொண்டு வெளிப்படுகிறதேஅத்தகைய ஒரு வெளிப்பாடாஎன்பது ஆசிரியருக்கு மட்டுமே தெரிந்த உண்மை.



1 comment:

  1. இதில் உள்ள விமர்சனங்கள் சரியே! ஒரு ஆண் பாரம்பரிய ஆணாதிக்கக் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் விடுபட ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டும்.

    ReplyDelete

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை