Monday, May 25, 2020

சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 2


3.6.முக்கிய பொறுப்புகள்
3.6.1.கொத்தல்லி – சோளகர்கள் ஊர் தலைமைப் பொறுப்பினைக் கொத்தல்லி என்று அழைக்கிறார்கள்ஊரின் தலைவர் கொத்தல்லி என்ற சொல்லால் அழைக்கப்படுகிறார்ஊரின் அனைத்து நடவடிக்கைகளையும் கொத்தல்லிதான் முடிவெடுக்கிறார்.
3.6.2.கோல்காரன் – சோளகர்களது ஊரில் கோயில் வழிபாடுசடங்குகள் போன்றவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் கோல்காரரிடம்தான் இருக்கின்றதுவளைந்த சித்திர வேலைபாடுகள் நிறைந்த முன்னோர்களது ஆள் உயர கோலினை வைத்திருக்கும் உரிமையைக் கோல்காரர் பெற்றிருக்கிறார்மணிராசன் கோயில் திருவிழாவின் போது பத்து நாட்கள் பூசை செய்து விரதமெடுக்கிறார்கட்டுக்கோப்பாக விரதமெடுக்காவிட்டால் கோலை தொடக்கூடாது என்ற விதியுடன் செயல்படுகிறார்கள்.
3.6.3.தர்மகர்த்தா – கொல்லிமலை மலையாளிகளின் ஊர் தலைவராக தர்மகர்த்தா இருக்கின்றார்ஊரில் அனைத்து நிகழ்வுகளும் இவருக்குக் கட்டுப்பட்டுதான் நிகழ்கின்றன.
3.6.4.பூசாரி – தர்மகர்த்தாவிற்கு அடுத்த முக்கியப் பொறுப்பாக பூசாரி கருதப்படுகிறார்கொல்லிமலை மலையாளிகளின் சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் பூசாரியின் தலைமையில்தான் நடைபெறுகிறது.
3.6.5.ஊர் மூப்பன் – தாணிக்கண்டி இருளர்களுக்கு ஊர் தலைவராகச் செயல்படுகின்றவரை ஊர்மூப்பன் என்று அழைக்கிறார்கள்.
            படகர்கள்இருளர்கள் பற்றியப் புதினங்களில் ஊரின் முக்கியப் பொறுப்பாளர்கள் பற்றிய செறிவானத் தகவல்கள் விவரிக்கப்படவில்லை.

3.7.சமயம் / தெய்வங்கள்
3.7.1.ஜடை சாமி  கோயில்– ஜடைசாமியின் கோயில் சோளகர்களது வனத்திற்குள் அமைந்திருக்கின்றது. (பாலமுருகன்,.2013: 69). சோளகர்கள் நல்லதை நினைத்து வேண்டுவதற்காகவும்நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்காகவும்ஜடைசாமிக்கு படையல் வைத்து வழிபடுகிறார்கள்.
3.7.2.மணிராசன் கோயில் – முன்னோர் வழிபாடு நிகழும் இடமாக இக்கோயில் அமைந்திருக்கிறதுமணிராசன் கோயிலில் கழுத்தளவு சிலை ஒன்று மரத்தால் செய்யப்பட்டிருக்கிறதுஇ்ந்தக் கழுத்தளவு சிலையே மணிராசன் சிலையாகும்முறுக்கிய மீசையுடனும் திறந்த கண்களுடனும் மணிராசனின் உருவம் அமைந்திருக்கின்றதுவெங்கலத்தாலான மாட்டின் சிலை ஒன்று இருக்கின்றதுமாட்டின் கழுத்தில் கட்டுகின்ற உருண்டை மணிகள் கோயிலில் குவிந்திருக்கின்றனமணிராசன் சிலைக்கு முன்னால் ஒரு வில்வ மரம் இருக்கின்றதுவில்வமரத்தைச் சுற்றிலும் கற்கள் குவிந்திருக்கின்றனஇந்த வில்வமரத்தின் முன்பாக ஒரு குழி இருக்கின்றதுஇதனைக் கெப்பைக்குழி என்கிறார்கள்இந்தக் குழியில்தான் இறந்த முன்னோர்களது எலும்புகள் இருக்கின்றனமணிராசன் கோயில் விழாவன்று இறந்தவரின் எலும்புகளைப் புதைத்த குழியிலிருந்து எடுத்துவந்து எலும்புகளைக் கெப்பைக்குழியில் போடுகிறார்கள்இறந்தவரின் நினைவாக வில்வமரத்தைச் சுற்றி கல்லை வைத்துவிடுகிறார்கள்.  கெப்பைக்குழியில் எலும்பை போட்டபிறகே இறந்தவர் சமாதானமடைவதாக நம்புகிறார்கள்திருவிழாவின்போது கோல்காரன் பூசாரியின் உடலிலோ இறந்தவனை சார்ந்தவர்களின் உடலிலோ இறந்தவனின் ஆவி புகுந்து நீதி சொல்ல வேண்டும்அப்படி நிகழ்ந்தால் மட்டுமே இறந்தவன் நீதியான வாழ்க்கை வாழ்ந்திருப்பதாகக் கருதுகிறார்கள். (பாலமுருகன்,.2013: 23-24,97-98).
3.7.3.எங்குசீர்குட்டை – சோளகர்கள் தங்கள் பூமியில் மழை பெய்ய வேண்டி எங்குசீர்குட்டை என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள்மழை தெய்வமாகிய எங்குசீர்குட்டையை நினைத்து வனத்திலுள்ள தாண்ரி மரத்தில் வழிபாட்டை நிகழ்த்துகிறார்கள்மழை பொய்த்துப்போகின்ற சூழ்நிலையில்  பெண்கள் மட்டுமே இணைந்து நிகழ்த்துகின்ற பூசையாக அமைந்திருக்கின்றதுபூசைக்குரிய நாளை கொத்தல்லியும் கோல்காரனும் குறிப்பிடுகிறார்கள்அந்த நாளில் வீட்டை சாணி கொண்டு சுத்தம் செய்கிறார்கள்தொட்டிப் பெண்கள் அனைவரும் வீட்டிலுள்ள தானியங்களில் உணவு செய்து மூங்கில் கூடைகளிலும் முறங்களிலும் எடுத்துக்கொண்டு வனத்திற்குச் செல்கிறார்கள்தொட்டி ஆண்கள் அனைவரும் மணிராசன் கோயிலில் நின்று பெண்களை வழியனுப்புகிறார்கள்வனத்திலுள்ள உயரமான தாண்ரி மரத்தினைச் சுற்றிலும் உணவை வைத்துக்கொள்கிறார்கள்மரங்களடர்ந்த வனத்தில் தங்களது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்கிறார்கள்வானத்தைப் பார்த்து எங்குசீர்குட்டை என்ற மழை தெய்வத்தை நினைத்து “மழை பொழி தாயே மழை பொழி” என்று கூட்டமாக வேண்டுகிறார்கள்வட்டமாக கும்மியடித்து ஆடுகிறார்கள்ஒருவர் மாறி ஒருவராக பாடுகிறார்கள்மழை இல்லாததால் தங்களுக்கு நேர்ந்துள்ள துயரங்களைச் சொல்லி அழுகிறார்கள்எடுத்துவந்த உணவை மதிய நேரத்தில் உண்டு முடிக்கிறார்கள்உணவிற்குப் பிறகு மீண்டும் ஆட்டத்தைத் தொடர்கிறார்கள்மாலை நேரம் இருட்டத் தொடங்கியதும் மூங்கில் கூடைகளையும் முறத்தையும் அங்கேயே வீசிவிட்டு உடைகளை அணிந்துகொண்டு தொட்டிக்குத் திரும்பிச் செல்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 36-37).
3.7.4.படகல் மாதேஸ்வரன் கோயில் – சோளகணை என்னும் ஊரில் படகல் மாதேஸ்வரன் கோயில் அமைந்திருக்கின்றதுஇரண்டு பாறைகளுக்கு இடையில் லிங்கம் போன்ற கல் அமைந்திருக்கின்றதுஆண்டிற்கு ஒரு முறை திருவிழா நடைபெறுகிறதுசோளகர்களும் லிங்காயத்துச் சாதியினரும் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்கிறார்கள்பழம்தேங்காய் வைத்து வழிபடுகிறார்கள்லிங்காயத்துக்கள் மற்ற சாதியினர் பயன்படுத்துகின்ற பாத்திரத்தையோ அவர்களது உணவையோ ஏற்கமாட்டார்கள்எனவே அவர்கள் கோயிலில் அடுப்பு வைத்துச் சமைக்கவும் பயன்படுத்துவதற்கும் தனியாக மண்சட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. (பாலமுருகன்,.2013: 80-82).
3.7.5.விதைப்பின்போது வழிபடுதல் – சோளகர்கள் விவசாயம் செய்வதற்காக நிலத்தை உழுது முடித்ததும் விதை தூவுபவர் வேண்டுதலோடு விதை தூவுகிறார்பேதன் உழுத நிலத்ததில் ஜோகம்மாள் விதையைத் தூவுகின்றபோது வேண்டுதலை முணுமுணுத்துக்கொண்டே தூவுகிறாள். “காத்தவர் தின்னது போக... கண்டவர் தின்னது போக... கள்ளர் தின்னது போக... விளையணும்.. விளையணும் சாமி” என்பதாக வேண்டுகிறாள். (பாலமுருகன்,.2013: 43).
3.7.6.காளி கோயில் – கொல்லிமலை மலையாளிகள் காளி தெய்வத்தை வழிபடுகிறார்கள்ஊர் வேட்டை நிகழ்த்தப்படும்போது காளி கோயிலில் வழிபாடு நிகழ்த்துகிறார்கள்வேட்டை முடிந்ததும் வேட்டையாடிய இரையை காளிக்கோயிலுக்கு எடுத்துவருகிறார்கள்பச்சைப் பந்தல் போட்டு காளிக்குத் திருவிழா நடத்துகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 141,152).
3.7.7.ஈசன் – படகர்கள் ஈசன் என்ற தெய்வத்தை வழிபடுகிறார்கள்சூரியனை ஈசனின் உயிர் தோற்றமாகக் கருதி வழிபடுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 16).
3.7.8.ஹெத்தப்பாவின் கோயில் – மரகத மலையில் முதல்முதலில் வந்து வாழ்ந்த  முன்னோரான ஹெத்தப்பாவின் நினைவாக அந்தக் கோயில் அமைந்திருக்கின்றதுஅந்தக் கோயிலில் ஒரு தீபம் எரிந்துகொண்டு இருக்கின்றதுஅந்தத் தீபம்தான் அக்கோயிலின் தெய்வமாக வணங்கப்படுகின்றதுவேறு சிலைகள் எதுவும் கிடையாதுஅந்த தீபத்தை அணையாமல் பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஒரு சிறுவன் காவல் பணியைச் செய்கிறான்அந்தச் சிறுவனை ஊரார் கூடி நியமிக்கிறார்கள்அந்தச் சிறுவன் அவனது குடும்பத்தில் பால் கறக்கும் உரிமையை ஏற்கின்ற புனித சடங்கினை ஏற்றிருக்க வேண்டும்அந்தச் சடங்கை ஏற்றுள்ள சிறுவனையே புனித நெருப்பைப் பாதுகாக்கும் பொறுப்பாளனாக நியமிக்கிறார்கள்அச்சிறுவன் வாலிபனாகும்வரை பொறுப்பைத் தொடர்கிறான்வாலிப பருவத்தில் பொறுப்பை நிறைவு செய்து குடும்ப வாழ்விற்குத் திரும்பும்போது வேறொரு சிறுவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள்ஹெத்தப்பாவின் புனித நெருப்பு அணைக்கப்பட்டு புதிய நெருப்பு ஏற்றப்படுகின்றது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 56-57).
3.7.9.மாதலிங்கேசுவரர் கோயில் – படகர்கள் கீழ்மலையிலுள்ள மாதலிங்கேசுவரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்கிறார்கள்பள்ளமானப் பகுதியில் சிறிய குடில் போன்று மண்டபமும் நான்கு புறம் குளமும் அமைந்திருக்கின்றதுமண்டபத்தில் சிறிய அகல் விளக்கு எரிகின்றதுஅந்த அகல் விளக்கின் ஒளியில் இறைவனைத் தரிசிக்கிறார்கள்மாசி மாதம் அழல் மிதி திருவிழா நடத்துகிறார்கள்அழல் மிதித்து வழிபாடு செய்தால் புனிதமடைவதாகக் கருதுகிறார்கள்அழல் மிதி திருநாள் முடிந்ததும் விவசாய பூமியில் விதைப்பு திருநாள் நடைபெறுகிறது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 164-165).
3.7.10.ஹத்தையம்மன் -  படகர்கள் ஹத்தையம்மன் என்ற பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 166).
3.7.11.வெள்ளியங்கிரி ஈசன் – தாணிக்கண்டி இருளர்கள் வெள்ளியங்கிரி மலையிலுள்ள ஈசனை வழிபடுகிறார்கள்வெள்ளியங்கிரி மலையிலுள்ள ஏழு மலைகளைக் கடந்து ஈசனை வழிபடுகிறார்கள்.
3.7.12.வெள்ளை விநாயகர் கோயில் – வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் தொடக்கத்திலுள்ள கோயிலாக வெள்ளை விநாயகர் கோயில் அமைந்திருக்கின்றதுதாணிக்கண்டி இருளர்கள் வெள்ளை விநாயகரை வழிபடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 1-3).
3.7.13.காளியம்மன் கோயில் – தாணிக்கண்டியிலிருந்து சாடிவயலுக்குப் போகின்ற ஒற்றையடிப் பாதையில் வீரகாளியம்மன் கோயில் இருக்கின்றதுதாணிக்கண்டி இருளர்கள் வீர காளியம்மனை வழிபடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 86).
3.7.14.மலை மாதேஸ்வரன் கோயில் – தேன்கனிக்கோட்டை பகுதியில் வாழும் இருளர்கள் மலையிலுள்ள மாதேஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள்.
3.7.15.மாரியம்மன் கோயில் – முட்டத்து வயல் கிராமத்தில் மாரியம்மன் கோயில் இருக்கின்றதுபொன்னானும் அவர் மகள் செல்லியும் வழிபாடு செய்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 41-45).
            தளி பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலை இருளர்கள் வழிபடுகிறார்கள்மூன்றாண்டுகளாக மழையில்லாததால் மழை வேண்டி சித்திரை மாதம் கூழ் ஊற்றி மறுநாள் மாவிளக்கு வைத்து வழிபடுகிறார்கள்ஆனிமாத இறுதியில் மழைவேண்டி சிறப்பு பூசை செய்கிறார்கள்உடம்பில் மாரி வந்து ஒரு பெண் சாமியாடி குறி சொல்கிறாள்குறி சொன்ன பெண் மழை வரும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துகிறாள்பூசாரி கொடுத்த எழும்பிச்சம்பழத்தை வாயிலிட்டு மென்றுவிட்டு கைகளை முறுக்கிக்கொண்ட தரையில் படுத்து உருளுகிறாள்பூசாரி அந்தப் பெண்ணுக்குத் தீர்த்தம் தெளித்து திருநீறு பூசி நிதானப்படுத்துகிறார். (நஞ்சப்பன்,. 2007: 65-66).
3.7.16.மதூரம்மன் கோயில் – தளி பகுதியிலுள்ள மதூரம்மன் கோயிலை இருளர்கள் வழிபடுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 65).

3.7.17.மரத்தடி தெய்வங்கள் – தளி பகுதியிலுள்ள தேவலரி மரத்தடியில் இரண்டு தெய்வங்கள் இருக்கின்றன. 1.பசேஸ்வரன், 2.மாதையன்இரண்டு தெய்வத்திற்கு முன்னால் ஒரு காளை சிலை அமைக்கப்பட்டுள்ளதுஇந்த தெய்வங்கள் இருளர்களால் வழிபடப்படுகின்றனமழைவேண்டி வைகாசி மாதம் பொங்கலிட்டு வழிபடுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 65).

3.7.18.மழை தேவரு வழிபாடு – தளி பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில் ஆனிமாத இறுதியில் வழிபாடு முடிந்த மறுநாள் இளைஞர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட மழைதேவரு உருவத்தைத் தூக்கி வருகிறார்கள்மழைதேவரை பூக்களாலும் வேப்பந்தழைகளாலும் அலங்காரம் செய்திருக்கிறார்கள்மழைதேவரின் உருவத்தை ஒருவன் தலையில் சுமந்திருக்கிறான்ஒருவன்  மணியடித்துக் கொண்டிருக்கிறான்ஒருவன் திருநீறுதட்டை ஏந்திக்கொண்டிருக்கிறான்மற்றனைவரும் “அரகரா அரகரா” என்று கடவுளைப் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்முன் செல்பவர்கள் பறையை அடித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள்மழைதேவருக்கு அருகிலுள்ள ஒருவர் மழைவேண்டி பஞ்சப் பாடல் பாடுகிறார்அவர் பாட மற்றவர்களும் பாடுகிறார்கள். “சுண்டக்கா சூரக்கா உய்ய உய்ய மழை தேவரே / கண்டக்கா காரக்கா உய்ய உய்ய மழை தேவரே / சுண்டக்காயை தின்னு புட்டு சூத்துல அடைச்சி செத்த மக்க / காரக்காயை தின்னு புட்டு கழுத்துல அடைச்சி  செத்த மக்க / குட்டைச்சியம்மா புள்ள பெத்தா குட்டையிலே தண்ணியில்லே / காக்காச்சியம்மா புள்ள பெத்தா பானையிலே தண்ணியில்லே / ஊசிபோல மின்னிமின்னி உலகமெல்லாம் மழைபெய்ய / காசிபோல மின்னிமின்னி ககனமெல்லாம் மழைபெய்ய / சுண்டக்கா சூரக்கா உய்ய உய்ய மழை தேவரே” தெருத்தெருவாக எல்லா வீடுகளுக்கும் மழைதேவரை எடுத்துச் செல்கிறார்கள்மொந்தையிலும் செம்பிலும் ஒரு சிலர் குடத்திலும் தண்ணீர் எடுத்து மழைதேவருக்கு ஊற்றுகிறார்கள்மழைதேவரைச் சுமக்கும் இளைஞன் வலது மற்றும் இடது புறமாக சுற்றிக்கொண்டு ஊற்றப்படும் நீரை எல்லாப் பக்கமும் பரவலாக சிதறச் செய்கிறான்ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஆரியம்சோளம்கம்பு ஆகிய தானியங்களைத் தானம் தருகிறார்கள்இறுதியாக ஊர் பொது இடத்தில் கூடி கிடைத்த தானியங்களையும் காணிக்கை பணத்தையும் கணக்குப் பார்க்கிறார்கள்காணிக்கைப் பணத்தில் கடைகளுக்குச் சென்று தேங்காய்பழம்வெல்லம்கற்பூரம்பூஊதுபத்திதிரிசனம் ஆகியவைகளை வாங்கிவருகிறார்கள்தானியங்களைத் தனித்தனியாக மாவாக்குகிறார்கள்மறுநாள் மழைதேவருக்குப் பூசை நடத்தத் தொடங்குகிறார்கள்மதியம் இரண்டு மணியளவில் மழைதேவரை அலங்கரித்துப் பறையிசை முழங்க ஏரிக்குப் புறப்படுகிறார்கள்மழைதேவரைப் பின்தொடர்ந்து மக்கள் வருகிறார்கள்ஏரியில் பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறதுநொச்சித் தழைகளாலும் வேப்பந் தழைகளாலும் தென்னம் ஓலையால் பின்னப்பட்டுள்ள  பாய் ஆகியவற்றாலும் பந்தல் அலங்கரிக்கப்பட்டுள்ளதுபந்தலில் வெள்ளைத் துணியைப் பாவாடையாக விரித்து மழைதேவரை அமர்த்துகிறார்கள்அருகில் கற்களை அமைத்து அடுப்பு மூட்டுகிறார்கள்.  தயாரிக்கப்பட்ட மாவுகளைக்கொண்டு கூழ் சமைக்கிறார்கள்அரிசி மாவில் வெல்லம் சேர்த்துப் பச்சைமாவு தயாரிக்கிறார்கள்கூழ்பச்சைமாவுகடலைபொரி ஆகியவற்றை மழைதேவருக்குப் படையலிட்டு வழிபடுகிறார்கள்தேங்காயுடைத்துப் பூசை செய்கிறார்கள்வயதான மூன்று விதவைப் பெண்களை அழுவதற்காக அழைக்கிறார்கள்மழையை வரச்சொல்லி அழுதுகொண்டே பாடுகிறார்கள். (நஞ்சப்பன்,. 2007: 66-72).
3.7.19.சமயம் / தெய்வம் பற்றிய பிற செய்திகள் – கொல்லிமலை மலையாளிகள் நாச்சியார் என்ற பெண் தெய்வத்தையும்பெயர் குறிப்பிடப்படாத ஏழு சாமிகளையும் வழிபடுகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 41).

3.8.தோற்றத் தொன்மம்
3.8.1.சோளகர்களது தொன்மக்கதை – காரையன் பிள்ளையன் என்ற சகோதரர்கள் கொத்தேசால் என்ற மலையில் இருந்தார்கள்இருவரும் தெய்வ சக்தி உடையவர்களாக அறியப்பட்டார்கள்காரையன் அண்ணனாகவும் பிள்ளையன் தம்பியாகவும் வாழ்ந்தார்கள்மாதேஸ்வரன் என்பது பிள்ளையனுக்கு மற்றொரு பெயராக அமைந்திருந்ததுசாவண்ணா என்ற அரக்கன் வனம் முழுவதையும் அதிகாரம் செய்துகொண்டிருந்தான்கடவுள்களும் தேவர்களும் அரக்கனிடம் அடிமை வேலை செய்து வந்தார்கள்இரண்டு சகோதரர்களும் அடிமைகளாக இருந்தார்கள்அரக்கன் காரையனை மலையின் தென்பக்கம் வேலை செய்ய அனுப்பி வைத்திருந்தான்இளையவன் அரக்கனின் கட்டளைகளை மதிக்காதவன்போல அலட்சியமாக நடந்துகொண்டிருந்தான்அரக்கன் கோபத்துடன் இளையவனை நோக்கி உன் பெயர் என்னடா என்று கேட்டிருக்கிறான்.  தூரத்திலிருந்தே தனது பெயரை சொல்லியிருக்கிறான்அரக்கன் காதில் மாதேஸ்வரன் என்ற பதில் மாதாரி என்பதாகக் கேட்டிருக்கின்றதுசெருப்பு தைப்பவன் என்பதாகப் புரிந்துகொண்டு தனது கால்களுக்குச் செருப்புத் தைக்குமாறு கட்டளையிடுகின்றான்சிறந்த செருப்பைச் செய்வதற்குத் தற்காலிகமாக விடுமுறை தேவைப்படுவதாக அரக்கனிடம் முறையிடுகிறான்சாவண்ணாவும் சிறந்த செருப்பு கிடைக்காவிட்டால் தலையை சீவி கொன்றுவிடுவதாகவும்கிடைத்துவிட்டால் நிரந்தரமாக விடுதலை செய்வதாகவும் கூறி அனுப்பி வைத்திருக்கிறான்கிருஷ்ணக் கடவுளின் உதவியுடன் மெழுகு செருப்பைத் தயாரித்து வழங்குகிறான்செருப்பை அணிந்து வழுக்குப் பாறையில் நடக்குமாறு அரக்கனிடம் வேண்டுகிறான்அரக்கனும் மகிழ்ச்சியில் ஒப்புக்கொள்கிறான்வழுக்குப்பாறை வெயிலில் செருப்பு உருகி அரக்கன் வழுக்கி பள்ளம் நோக்கி உருண்டு விழுகிறான்அனைவரும் அரக்கனைக் கல்லால் அடித்துக் கொன்று விடுகிறார்கள்மாதேஸ்வரனது முயற்சியைத் தேவர்களும் கடவுளர்களும் பாராட்டுகிறார்கள்மக்கள் மாதேஸ்வரனது புகழை அறிந்து வழிபடுகிறார்கள்இதனை அறிந்த காரையன் அரக்கனை அழிக்க அண்ணனாகிய தன்னிடம் எந்த ஆலோசனையும் பெறாமல் செயல்பட்டு புகழடைந்ததற்காகக் கோபமடைகிறான்தம்பியை அழிப்பதற்காக விரட்டுகிறான்மாதேஸ்வரன் உயிர் தப்பிப்பதற்காக கிருஷ்ணனிடம் அடைக்கலமாகிறான்கிருஷ்ணனும் எவ்வளவோ முயற்சித்தும் காரையனிடமிருந்து மாதேஸ்வரனைக் காப்பாற்ற முடியவில்லைஇறுதியாக மாதேஸ்வரன் அண்ணனிடம் சரணடைகின்றான்மக்கள் மாதேஸ்வரனை வழிபடுவதற்கு முன்பாக மூத்தவனாகிய காரையனை வழிபட வேண்டுமென மக்களுக்கு கட்டளையிடுமாறு தம்பியை பணிக்கிறான்தம்பி தன்னை வழிபடும் மக்களுக்குக் கட்டளையிட்டதும் காரையன் சமாதானமடைகின்றான்மூத்தவனாகிய காரையன் வழியில் தோன்றியவர்கள் சோளகர்கள் ஆவர்மாதேஸ்வரன் வழியில் தோன்றியவர்கள் லிங்காயத்துக்கள் ஆவர்லிங்கம் அணிகின்ற வழக்கம் சோளகர்களிடம்தான் இருந்திருக்கின்றதுஇறைச்சி உண்ண ஆசைப்பட்ட சோளகர்கள் லிங்கத்தை தற்சமயமாக கழட்டி வைத்துவிட்டு இறைச்சி சாப்பிட்டபோது லிங்கத்தை மீண்டும் எடுக்க மறந்துவிட்டார்கள்அந்த லிங்கத்தை லிங்காயத்துக்கள் எடுத்துக்கொண்டார்கள்அன்றிலிருந்து சோளகர்கள் லிங்கம் அணியாதவர்களாகவும் இறைச்சி சாப்பிடுபவர்களாகவும் வாழ்கிறார்கள்லிங்காயத்துக்கள் லிங்கம் அணிகிறார்கள்இறைச்சி சாப்பிடுவதில்லை என்பதாக தொன்மக்கதை அமைந்திருக்கின்றது. (பாலமுருகன்,.2013: 74-77).
            படகர்கள்மலையாளிகள்இருளர்கள் பற்றிய தொன்மக் கதைகள் புதினங்களில் இடம்பெறவில்லை.

3.9.இடப்பெயர் வரலாறு
3.9.1.நீலி வாய்க்கால் தோன்றி கதை – முட்டத்து வயல் என்ற கிராமத்தில் நஞ்சை வயல்களே இருந்திருக்கின்றனவிவசாயம் செய்கின்ற கவுண்டர் சாதியினருக்கு இருளர்களது மூப்பன் கோயில் பூசாரியாக இருந்தார்அறுவடைக் காலந்தோறும் மூன்றில் ஒரு பங்கு தானியத்தைத் பூசாரிக்குக் கொடுப்பது வழக்கமாக இருந்ததுஇந்த வழக்கத்தை ‘சொமெ முக்கெ’ என்று  குறிப்பிடுகிறார்கள்ஒரு தருணத்தில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு வறட்சி உருவானதுநீர் நிலைகள் தண்ணீர் வராமல் வறண்டு இருந்தனவிவசாயிகள் ஒன்றிணைந்து அரசுக்குத் தெரியப்படுத்துகிறார்கள். “சொமேமுக்கெ எடுக்கக்கூடிய மூப்பன் யாரோ அவனே அந்தக் கரைவழிக்குத் தண்ணீர் கொண்டு வரவேண்டும்” என்பதாக அரசிடமிருந்து பதில் வந்திருந்ததுமுட்டத்துவயல் மூப்பன் எப்படி தண்ணீர் கொண்டு வருவது என்று அச்சப்பட்டார்அவரது மகள்கள் நீலிராசிஆகியோர் வடக்கு மலைப்பக்கம் சென்று நீரைக் கொண்டுவருவதாக தந்தையிடம் உறுதி சொல்லிச் செல்கிறார்கள்கருக்கு அரிவாளின் மூக்கினால் கீறிக்கொண்டு வாய்க்கால்களை உருவாக்கினார்கள்நீலி உருவாக்கிய வாய்க்காலை நீலி வாய்க்கால் என்று அழைக்கிறார்கள்ராசி உருவாக்கிய வாய்க்காலை ராசி வாய்க்கால்  என்று அழைக்கிறார்கள்விடியற்காலையில் வயல் கரையில் நீர் நிரம்பியதுவயல்கார கவுண்டர்கள் ஏரி அமைக்க முயன்றார்கள்ஏரி அமைக்க முடியவில்லைஅந்த ஏரிக்குப் பலி கொடுக்க வேண்டும் என்பதாக ஊர் முடிவெடுக்கப்பட்டதுமுட்டத்து வயல் மூப்பன் ஒரு ஊமைப் பெண்ணுக்குச் சடங்கு செய்து பலிகொடுத்து ஏரி அமைக்கின்றான்அந்த ஏரியை ஊமை மதகு என்று அழைக்கிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 31-32).
            சோளகர்கள்மலையாளிகள்படகர்கள் பற்றிய புதினங்களில் இடப்பெயர் வரலாற்றுக்குரிய தகவல்கள் இடம்பெறவில்லை.

3.10.குலம் இனம் சாதி
3.10.1.சோளகர்களின் குலம் - சோளகர்கள் ஐந்து குலத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். 1.ஆலார் குலம், 2.பெள்ளர் குலம், 3.சூரிய குலம், 4.ஓங்களூர் குலம், 5.சௌக்கியர் குலம் ஆகியன சோளகர்களது குலங்கள் ஆகும்சோளகர்களின் அனைத்துச் சடங்குகளிலும் ஐந்து குலத்திற்கும் முக்கியத்துவம் இருக்கின்றது. (பாலமுருகன்,.2013: 32).
3.10.2.லிங்காயத்துச் சாதி – சோளகர்களைவிட உயர்ந்த சாதியாகக் கருதப்படுகிறார்கள்சோளகர்களைப் போல இவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் அல்லசோளகர்களின் தொன்மக் கதையொன்றில் சோளகர்களும் லிங்காயத்துக்களும் ஒரு சகோதர்களின் வம்சாவழியினர் என்பதாக விளக்கப்படுகின்றதுலிங்காயத்துச் சாதியினர் தமது சாதியின் அடையாளமாகக் கழுத்தில் லிங்கத்தை அணிந்திருக்கிறார்கள்லிங்காயத்துச் சாதியை லிங்காயத்துக் கவுண்டர் என்றும் குறிப்பிடுகிறார்கள்லிங்காயத்துக்கள் கழுத்தில் அணிகின்ற லிங்கம் இரும்பினால் ஆனதுமும்முக லிங்கம் என்று அழைக்கிறார்கள்அந்த லிங்கத்தின் கீழுள்ள திருகாணியைத் திருகியதும் லிங்கம் இரண்டாகப் பிளக்கின்றதுஅதனுள் சிறிதாகவும் மொளுமொளுவென்றும் ஒரு கருப்புக்கல் இருக்கின்றதுஅந்தக் கல்லை மாதேஸ்வரன் கோயிலில் நாற்பது நாள் பூசையில் வைத்து எடுத்திருக்கிறார்கள்அந்தக்கல் மும்முக லிங்கக் கலசத்தில் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகின்றது. (பாலமுருகன்,.2013: 79-82).
3.10.3.செருப்புத் தைக்கும் சாதி – ஜோகம்மாளின் மகள் ரதி செருப்புத் தைக்கும் சாதியைச் சேர்ந்த சேகரன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறாள். (பாலமுருகன்,.2013: 192-193).
3.10.4.மலைக்கவுண்டன் – கொல்லி மலை மலையாளிகள் தங்களை மலைக்கவுண்டன் என்று அழைத்துக்கொள்கிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 57).
3.10.5.குறும்பர் இனம் – காடுகளில் வசிக்கின்ற குறும்பர் இன மக்களைப் பற்றிப் படகர்களது குழந்தைகளுக்கு அவர்களது பாட்டிகள் கதைகளைச் சொல்கிறார்கள்இரவு நேரங்களில் மந்திர மாயங்கள் செய்பவர்களாக குறும்பர்கள் கருதப்படுகிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 138-147).
3.10.6.தொரியர் – தொரியர் இனத்தவரை படகர்கள் தொரிய மல்லர் என்றும்தொரியா என்றும்மல்லா என்றும் அழைக்கிறார்கள்படகர்களுக்கு  உதவி செய்பவர்களாக வாழ்கிறார்கள். (ராஜம் கிருஷ்ணன். 2001: 19,36,38,41).
3.10.7.கோத்தர்  கோத்தர்களை முட்டுக்கோத்தர் என்றும் அழைக்கிறார்கள்படகர்களின் வாழ்க்கைச் சடங்கு அனைத்திலும் இவர்களது இசை சேவை இணைந்திருக்கிறதுகுழல்தாரைமத்தளம்தப்பட்டைபறை போன்ற இசைக்கருவிகளை இசைக்கிறார்கள்.
3.10.8.தாணிக்கண்டி இருளர்களது குலம் - தாணிக்கண்டி இருளர்கள் ஏழு குலங்களாக இருக்கிறார்கள். 1.வெள்ளீக, 2.கரட்டீக, 3.பேரகார, 4.சம்பை, 5.குறுநாக, 6. குப்பிலிக, 7.ஆறுமூக்இருளர்களின் வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் இந்த ஏழு குலங்களும் இணைந்துதான் நிகழ்கின்றன. (ஆட்டனத்தி. 2010: 23).
3.10.9.குலம் இனம் சாதி பற்றிய பிற செய்திகள் - மலையாளிகளது பஞ்சாயத்து நிகழ்கின்ற போது தர்மகர்த்தாவின் அருகில் கவுண்டர்காரைகாரர் ஆகிய சாதியினர் அமர்ந்து கொள்கிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் கவுண்டர் சாதியினருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்தேன்கனிக்கோட்டையில் ரெட்டிகவுடாநாயுடுபறையர்சக்கிலி போன்ற பிற சாதியினருடன் இருளர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

3.11.சடங்குகள்
3.11.1.பிறப்புச் சடங்கு – பிறந்த குழந்தை முதலில் அதன் வாயில் மலைத்தேனை இரண்டு சொட்டு விடுகிறார்கள்மலைத்தேனை சுவைத்த பிறகுதான் குழந்தை தாயிடம் சீம்பால் குடிக்கிறதுகுழந்தை பிறந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமான ஜடைசாமிக்குப் படையல் வைக்கிறார்கள்குழந்தை பிறந்த நிகழ்விற்குத் தீட்டுச் சடங்கு செய்கிறார்கள்குழந்தை பிறந்த மூன்று நாட்கள் தீட்டாகக் கருதப்படுகின்றதுநான்காம் நாளில்தான் தீட்டு நீங்கியதாகக் கருதுகிறார்கள்தீட்டைப் போக்குவதற்குக் குழந்தை பிறந்த மறுநாளன்று வீட்டை சாணத்தால் மெழுகி சுத்தம் செய்கிறார்கள்ஐந்து குலத்தவர்களையும் அழைத்துத் தீட்டு கழிக்கிறார்கள்ஐந்து குலத்தவர்களும் தாய்க்கும் குழந்தைக்கும் திருநீறு பூசி தீட்டு கழிக்கிறார்கள்.  (பாலமுருகன்,.2013: 17).
            மலையாளிகள்படகர்கள்இருளர்கள் பற்றிய புதினங்களில் பிறப்புச் சடங்கு பற்றியசெய்திகள் விவரிக்கப்படவில்லை.
3.11.2.பூப்புச் சடங்கு – சோளகர் தொட்டியில் ஒரு பெண் பூப்பெய்துவிட்டால் அவளைக் குளிக்கச் செய்து கொட்டகையில் அமரச் செய்கிறார்கள்பெண்ணுக்குச் சடங்கு செய்வதற்காகக் கானாம்புல் வேய்ந்த குடிசையை அமைக்கிறார்கள்இந்தக் குடிசை பெரும்பாலும் தாயின் சகோதரனால் அமைக்கப்படுகின்றதுநான்கு நாள்வரை அந்தக் குடிசையிலேயே தங்க வைக்கப்படுகிறாள்.  ஐந்தாம் நாளில் குளிக்கச் செய்கிறார்கள்புத்தாடை அணிய வைத்துப் பாடல்களுடன் அவளை வீட்டிற்கு அழைத்துவருகிறார்கள்பசுவின் சாணத்தில் ஒரு துளியை அவளது நாவிலிட்டு வீட்டினுள் அழைக்கப்படுகிறாள்கானாம்புல் குடிசை எரியூட்டப்படுகின்றதுபெண்ணைப் பெற்றவர்கள் தொட்டி மக்களுக்கு விருந்து படைக்கிறார்கள். (பாலமுருகன்,.2013: 116-117).
            தாணிக்கண்டி இருளர் சமூகத்தில் யாரேனும் பூப்பெய்துவிட்டால் வீட்டுத்திண்ணையில் குடிசை கட்டுகிறார்கள்பச்சை மூங்கில்களை வெட்டிப் படலாக்கித் தடுப்புச்சுவர் போன்று அமைக்கிறார்கள்மூங்கில் படலில் தென்னை மட்டைகளைப் பொருத்தி குடிசை அமைக்கிறார்கள்இந்தக் குடிசை ஒரு சிறிய வீடு போல அமைக்கப்படுகின்றதுஅந்தக் குடிசையில் பூப்பெய்தவளை முக்காலியில் அமர வைக்கிறார்கள்அந்தப் பெண்ணைக் குளிப்பாட்டி புத்தாடை அணிவிக்கிறார்கள்அந்தக் குடிசையில் தனியாக எட்டு நாட்கள்வரை தங்க வைக்கப்படுகிறாள்எட்டு நாட்களுக்குப் பிறகு தீட்டு நீக்கப்பட்டதாகக் கருதி வீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள்இறுதியாகத் தீட்டுக் குடிசையை எரித்துவிடுகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 56-57).
            மலையாளிகள்படகர்கள்தேன்கனிக்கோட்டை இருளர்களது பூப்புச் சடங்குகள் புதினங்களில்  இடம்பெறவில்லை.

சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 3

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை