Monday, May 25, 2020

சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் 1


இயல் – 3
சமூக வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள்

3.1.முன்னுரை
          இந்த இயலில் ஆய்விற்குரிய ஐந்து புதினங்களிலிருந்து இயற்கையின் அங்கமாகிய பழங்குடி மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்பெறும்தமிழகப் பழங்குடிகளின் குடும்பம்உணவுமுறைதிருமணம்,  சமயம்தெய்வம்சடங்குகள்பாலின ஏற்றத்தாழ்வுகலைவிளையாட்டுஅறிவியல்மருத்துவம்விழாக்கள்கல்விபஞ்சாயத்துசட்டம்வாய்மொழி வழக்காறுகள்புழங்குபொருட்கள் ஆகியவை பற்றி இவ்வியலில் ஆராயப்பெறும்.

3.2.குடும்பம்
சோளகர்களிடத்தில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஆணும் பெண்ணும் கணவர் மனைவி என்ற உரிமையுடன் தனி வீடு அமைத்து வாழ்கிறார்கள்கணவர் இறந்துவிட்ட இளம் சோளகப் பெண்கள் மறுதிருமணம் செய்து கொள்கிறார்கள்விதவையான பெண்கள் தனது பிள்ளைகளுடன் தாய்வீடு திரும்பி விடுகிறார்கள்தாய்வீட்டிலிருந்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்கிறார்கள்அல்லது கணவனது சகோதரரைத் திருமணம் செய்துகொள்கிறார்கள்சோளகர்கள் வயது பார்த்துத் திருமணம் செய்துகொள்வது இல்லைபெரியவர்களால் குலம் பார்க்கப்பட்டுத் திருமணம் செய்துகொள்கிறார்கள்ஆண்களும் பெண்களும் வெளிப்படையாகத் தங்களது காதலை முறையிடுவதற்கு எந்தத் தடைகளும் இ்ல்லைமனம் உடன்பட்டால் திருமணம் செய்துகொள்கிறார்கள்விருப்பம் இல்லாத கணவனை விட்டு புதியக் கணவனைத் தேர்ந்தெடுக்கின்ற உரிமை பெண்களுக்கு இருக்கின்றதுபழைய கணவர் தன் காதலிக்குக் கொடுத்தப் பரிசப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்தன் மனைவி பழைய கணவருடன் வாழ்ந்து பெற்றக் குழந்தையையும் தன் குழந்தையாக ஏற்று வாழ்கிறார்கள்பழைய கணவரிடமே குழந்தையை விட்டுக்கொடுத்து வருவதும் நிகழ்கிறதுஇந்த நிகழ்வுகள் பெரும்பாலும் பஞ்சாயத்தார் கூடி நிறைவேற்றுவதாக அமைகின்றது. (பாலமுருகன்,.2013: 49-52,83,94-95).
                        கொல்லிமலை மலையாளிகள் கூட்டுக்குடும்ப முறையைப் பின்பற்றுகிறார்கள்திருமணமான கணவனும் மனைவியும் இறுதிக் காலம்வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பது நிர்பந்தம் இல்லைமனம் ஒட்டாதவர்கள் பிரிந்து சென்று வேறொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்ஆயினும் இறுதிக் காலம் வரை சேர்ந்து வாழவேண்டும் என்பதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறார்கள்பிடாரி தனக்குக் கணவனாக வரவிருக்கும் சக்கரவத்திக் கருமனுடன் ‘ஒருத்திக்கு ஒருவனாகவும்ஒருவனுக்கு ஒருத்தியாகவும்’ வாழ வேண்டும் என்று விரும்புகிறாள்ஆனால் திருமணப் பேச்சின் போது அவனுக்கு முதல் திருமணம் முடிந்த செய்தியை அறிந்து வருத்தப்படுகிறாள்காட்டு வேலையைச் செய்வதற்கு ஆளில்லை என்பதற்காக தனது பையனுக்கு மூன்று வயதிலேயே பதினெட்டு வயது பெண்ணைத் திருமணம் செய்து வைத்ததாகக் கருமனின் தந்தை விளக்குகிறார்அவர்களுக்கு ஒரு பையனும் மூன்று பெண்களும் பிறந்தார்கள்ஆனால் பையன் வாலிபனாவதற்குள் அந்தப் பெண் வேறொரு பையனை மணம் செய்து குடும்பமாகிவிட்டாள் என்பதாக தெரியவந்ததும் பிடாரி மகிழ்ச்சியடைகிறாள்ஊரார் முடிவுசெய்தபடி கருமனும் பிடாரியும் திருமணம் முடித்துக்கொண்டு பூங்குளத்தில் குடும்பமாகிறார்கள். (சின்னப்ப பாரதி,கு. 2008: 152-156).
படகர்கள் தங்களது அத்தை மற்றும் மாமன் மகளைத் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறார்கள்முறைகாரர்களை திருமணம் செய்கின்ற முறை முக்கியத்துவமாக இருக்கின்றதுமுறைகாரர்கள் இல்லாதவர்களைத் திருமணம் செய்து குடும்பம் நடத்துதல் என்பது இரண்டாம்பட்சமாக இருக்கின்றதுகூட்டுக்குடும்ப வாழ்வை மேற்கொள்கிறார்கள்திருமணமான பெண் கணவர் வீட்டில் இணைந்து குடும்பம் நடத்துகிறாள்மனைவி வீட்டில் கணவன் இணைந்து குடும்பம் நடத்துதல் என்பது அரிதாகவே நிகழ்கிறதுகுடும்பத்தில் மனம் ஒட்டாவிட்டால் பஞ்சாயத்தில் முறையிட்டு பிரிந்துசென்று வேறு திருமணம் செய்துகொள்ள உரிமையிருக்கின்றதுமுதல் மனைவி வாழும்போது இரண்டாவது மனைவியைக் கட்டுதல் என்பது அரிதாக இருக்கின்றது. (ராஜம் கிருஷ்ணன். 2001: 51-53,101,130,156-162).
            தாணிக்கண்டி இருளர்கள் தாயின் சகோதரரின் மகளையோ தந்தையின் சகோதரியின் மகளையோ திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறார்கள். (ஆட்டனத்தி. 2010: 83-85).
            ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறையானது பாலுறவு உரிமை வரலாற்றில் இறுதி வடிவமாக இருக்கின்றது.
சென்ற காலத்தில் நடந்ததைப்போலசமுதாயம் முன்னேற குடும்பமும் முன்னேறும்சமுதாயம் மாற அதுவும் மாறும்அது சமுதாய அமைப்பின் படைப்புஅதன் பண்பாட்டை அது பிரதிபலிக்கும்நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து ஒருதார மணக் குடும்பம் மிகவும் முன்னேற்றம் அடைந்திருக்கின்றதுஎனவே ஆண்பெண் சமத்துவம் முழுமையாக சாதிக்கப்படுகின்றவரை அது மேலும் மேம்பட முடியும் என்று குறைந்தபட்சமாகக் கருதிக்கொள்ளலாம்நெடுந்தூர எதிர்காலத்தில் ஒருதார மணக் குடும்பத்தினால் சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாமல் போனால்அதற்குப் பின்னால் வரப்போகின்றவற்றின் இயல்பை ஆருடம் கூற முடியாது.”(எங்கெல்ஸ்பி. 2008: 68)
ஆணின் சொத்தாதிக்க நலனை அடிப்படையாகக் கொண்டு திருமண வடிவமாக நிலைபெற்றிருக்கிறது.
            “மனித வரலாற்றில் காதலும் திருமணமும் வெவ்வேறு துருவங்கள்.தாய்தலைமை சமூகத்தில் ஆணாதிக்கப் பண்புகளுக்கு எதிராக பெண்களிடம் தோன்றிய விடுதலை உணர்விலேயே காதல் பிறந்ததுதந்தை அதிகாரச் சமூகத்தில் பெண் விடுதலைக்கு எதிராக ஆண்களிடம் தோன்றிய சொத்தாதிக்க உணர்விலேயே திருமணம் பிறந்தது.” (புதியவன்.2016: 24).
பழங்குடி மக்களது குடும்ப அமைப்புகளின் இயங்குதலில் ஒருத்திக்கு ஒருவன் என்ற ஒருதார மணமுறை இறுக்கமான வடிவத்தை அடையவில்லைஒருதார மணமுறை அதிகாரப்பூர்வமான குடும்ப அமைப்பாக நடைமுறையில் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும்கூட இறுக்கம் அடையாமல் நெகிழ்வுத் தன்மையுடையதாகவே இருக்கின்றதுபருவம் அடைந்த சிறுவனை ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதுமூன்று வயது சிறுவனை பதினெட்டு வயது பெண் திருமணம் செய்து கொண்டு மற்றவர்களின் உரிமைக்காரர்களின் உதவியுடன் குழந்தை பெற்றுக்கொள்வதுகணவனைவிட்டு விலகி வேறொரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்வதுஆகிய நடைமுறையிலுள்ள வடிவங்கள் ஒருதார மணமுறையின் இறுக்கமடையாதத் தன்மையை நிரூபிக்கின்றனஇருளர்களைப் பற்றிய இரண்டு புதினங்களுமே குடும்ப அமைப்பைப் பற்றிய செறிவானத் தகவல்களை விவரிக்கவில்லைதுண்டு துண்டான செய்திகளை இங்குமங்கும் காண முடிகிறது.

3.3.உணவுமுறை
3.3.1.காய்கள்
அவரைக்காய்கத்திரிக்காய்மொச்சைக்காய்காரக்காய்சூரக்காய்கசப்பு நாரத்தங்கைபுளியங்காய்நெல்லிக்காய்  போன்ற காய்கறி வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள். அவரைக்காய்களையும்கத்திரிக்காய்களையும் சோளகர்கள் இறைச்சியோடு சேர்த்து சமைத்து உண்ணுகிறார்கள்மலையாளிகள் மொச்சைப் பயிரை வேகவைத்துத் தாளித்து உண்கிறார்கள்படகர்கள் புளி சேர்க்காமல் மொச்சைப் பருப்பில் குழம்பு செய்து சாப்பிடுகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பஞ்சக் காலத்தில் காரக்காய்சூரக்காய் ஆகிய காய்களைச் சாப்பிடுகிறார்கள்.
3.3.2.கீரைகள்
புளிச்சான் கீரைசீங்கைக் கீரைஈங்கி நெக்கிரி கீரைமெள்ள நெக்கிரி கீரைவசலை கீரைசீங்கை கீரைசுருளி கீரைபாவை கீரைபட்டி கீரைகோவை கீரை போன்ற கீரை வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள்.   மலையாளிகள் புளிச்சான் எனும் ஒருவகையான கீரையைத் துணை உணவாகச் சமைத்து உண்கிறார்கள்சோளகர்கள் தங்களது உணவில் சீங்கை எனும் கீரை வகையைச் சமைத்து உண்கிறார்கள்.  மலையாளிகள் ஈங்கி நெக்கிரிமெள்ள நெக்கிரி எனும் கீரை வகையோடு பலா கொட்டைகரு மொச்சைகசப்பு நாரத்தங்காய் ஆகியவற்றைக் கலந்து ரசம் எனும் திரவ உணவை சமைத்து உண்கிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் கீரையை டாகு என்கிறார்கள்வசலை டாகுசீங்கை டாகுசுருளி டாகுபாவை டாகுபட்டி டாகுகோவை டாகு ஆகிய கீரை வகைகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
3.3.3.பழங்கள்
நெல்லிக்கனிபலாப்பழம்அன்னாச்சிப் பழம்வாழைப்பழம்ஆரஞ்சுப் பழம்கூழாம்பழம்தவிட்டுப்பழம்முள்ளுப்பழம்நாகப் பழம்அத்திப்பழம்நாகதாளி பழம் போன்ற பழ வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள். சோளகர் சிறுவர்கள் வனங்களிலிருந்து நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப்பிடுகிறார்கள்கொல்லிமலை மலையாளிகள் பலாஅன்னாச்சிவாழைஆரஞ்சுகூழாம்பழங்களைச் சாப்பிடுகிறார்கள்படகர் சிறுவர்கள் தவிட்டுப்பழம்முள்ளுப்பழம் ஆகிய பழங்களை வனங்களில் சேகரித்துச் சாப்பிடுகிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் நாகப் பழம்அத்திப்பழம் ஆகிய பழங்களைச் சாப்பிடுகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பஞ்ச காலத்தில் நாகதாளி பழத்தைச் சாப்பிடுகிறார்கள்.
3.3.4.கிழங்குகள்
வள்ளி கிழங்குஇருளைக் கிழங்குபூமி சர்க்கரைக் கிழங்குசோலக் கிழங்கு,  கற்றாழைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள்சோளகப் பழங்குடிகள் வள்ளிக்கிழங்குஇருளைக் கிழங்குபூமி சர்க்கரைக் கிழங்கு ஆகிய கிழங்குகளை காடுகளிலிருந்து சேகரித்துவந்து சமைத்துச் சாப்பிடுகிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் கிழங்குகளைக் கசாங்கு’ என்று அழைக்கிறார்கள்சோலெக் கிழங்கு எனும் ஒரு வகை கிழங்கைச் சாப்பிடுகிறார்கள்இந்தக் கிழங்கை வேக வைக்காமல் தீயில் சுட்டுச் சாப்பிடுகிறார்கள்இந்தக் கிழங்கு இனிப்புச் சுவையுடையதாகும்தேன்கனிக்கோட்டை இருளர்கள் பஞ்சக் காலத்தில் கற்றாழைக்கிழங்கை வெட்டிவேக வைத்துபுளி கரைசலில் ஒரு வாரம் ஊர வைத்துச் சாப்பிடுகிறார்கள்.

3.3.5.தானியங்கள்
இராகிகேழ்வரகுசாமைஅரிசிகொள்ளுமூங்கில் குருத்து ஆகிய தானியங்களைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவாக உண்கிறார்கள்இராகி தானியத்திலிருந்து இராகிக்களி,  இராகிக் கூழ் ஆகிய உணவுகளைச் செய்து சாப்பிடுகிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் இராகி உப்புமா செய்து சாப்பிடுகிறார்கள்அரிசியிலிருந்து அரிசிச் சோறுஅரிசிக் கஞ்சி செய்து சாப்பிடுகிறார்கள்தமிழகப் பழங்குடிகள் பொதுவாக அரிசிச் சோற்றை அரிதாகத்தான் சாப்பிடுகிறார்கள்திருமணம் போன்ற விழாக்களில் மட்டும்தான் அரிசிச் சோறு உண்ணுகிறார்கள்மலையாளிகள் திருமணத்தின்போது வெல்லம்புளியங்கொட்டை கலந்து செய்யப்பட்ட ஒரு வகை சோற்றைச் சாப்பிடுகிறார்கள்கஞ்சி என்பது திரவ வடிவிலான உணவாகும்மலையாளிகள் அரிசியைக் கஞ்சியாக காய்ச்சிக் குடிக்கிறார்கள்.  நெல்லினை அவித்து சோறு சமைத்துச் சாப்பிடுகிறார்கள்கேழ்வரகிலிருந்து கேழ்வரகு களிகேழ்வரகு கூழ் ஆகிய உணவகளைத் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள்மலையாளிகள் கேழ்வரகைப் பக்குவப்படுத்தி மாவாக்கிக் களியாகக் கிளரி உண்ணுகிறார்கள்புளிச்சாறுகொள்ளுக்கடுப்பான் ஆகியன துணை உணவாக பயன்படுத்தப்படுகின்றன.
கேழ்வரகு மாவிலிருந்து கூழ் என்னும் திரவ வடிவிலான உணவைத் தயார் செய்து குடிக்கிறார்கள்பச்சைமிளகாயைத் துணை உணவாகக் கடித்துக்கொள்கிறார்கள்கொள்ளு என்னும் தானியத்திலிருந்து மலையாளிகள் கொள்ளு கடுப்பான் எனும் உணவைத் தயார் செய்கிறார்கள்கொள்ளுக் கடுப்பானை கேழ்வரகுக் களிக்கு துணை உணவாகச் சமைத்து உண்கிறார்கள்சாமையிலிருந்து சாமைக் கஞ்சிசாமைச் சோறு ஆகிய உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்மலையாளிகள் சாமையைக் கஞ்சியாகச் சமைத்து குடிக்கிறார்கள்படகர்கள் சாமையைச் சோறாகச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் இறப்பு நிகழ்ந்த வீட்டில் வருகை தருபவர்களின் பசியாற்றுவதற்காக உப்புக்கஞ்சி என்ற உணவைச் சமைக்கிறார்கள்தேன்கனிக்கோட்டை மலைகளில் வாழும் இருளர்கள் பஞ்சக் காலத்தில் மூங்கில் குருத்துக்களை வேக வைத்து உண்கிறார்கள்.

3.3.6.இறைச்சி
மான் கறிபன்றிக்கறிகரடிக்கறிஆட்டுக்கறிகோழிக்கறி ஆகிய இறைச்சி வகைகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் பெரிதும் விரும்பி உண்கிறார்கள்சோளகர்கள் மானை வேட்டையாடுவதற்கு வாய்ப்பு அமைகின்ற தருணங்களில் மான் கறியைச் சமைத்து உண்கிறார்கள்மான் கறியை விரைவில் பதப்படுத்தி சமைக்காவிட்டால் கறி திரண்டு கெட்டுவிடும்தற்காப்பிற்காக வேட்டையாடப்பட்ட கரடியின் இறைச்சியைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்தேவைக்கு அதிகமாகக் கிடைத்த இறைச்சியை உப்புக்கண்டமாகப் பக்குவப்படுத்தி சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள். மலையாளிகள் பன்றி கறி உணவை பன்றி சாறு என்கிறார்கள்பன்றி வேட்டையின் போது அல்லது பஞ்சாயத்தார் தீர்ப்பால் குற்ற விருந்து வைக்கப்படும்போது பன்றி உணவை உண்ணுகிறார்கள்இறைச்சியை சாறு போன்று திரவநிலை உணவாகவும் சமைக்கிறார்கள்மசாலில்லாது உப்பிட்டு வேகவைத்தும் சாப்பிடுகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் அரிதாக பன்றிக்கறியை சாப்பிடுகிறார்கள்வாய்வேட்டு வைப்பவர்களுக்கு அரிதாக பன்றி இறைச்சி கிடைக்கும்போது இருளர்களுக்கும் பங்கு கிடைக்கின்றது.
3.3.7.பிற உணவுகள்
தேன்பொரிமுறுக்குபொரிஉருண்டைகடலைஇட்லிசாம்பார்சட்னிபுளியங்கொட்டைபலாக்கொட்டைவெல்லம்கருப்பட்டிதேயிலைவெற்றிலைகாபிஆனம்,  புளிசாறுபனியாரம்நெய்சீங்கைப்பூகள்ளிமுள்ளியான்சித்தராண்ணம்ஆகியன தமிழகப் பழங்குடி மக்கள் உண்ணுகின்ற பிற உணவுகள் ஆகும்.
            சோளகர்கள் திம்பம் சந்தையிலிருந்து தங்கள் வீட்டுப் பிள்ளைகள் திண்பதற்காக பொரிமுறுக்கு போன்ற திண்பண்டங்களை வாங்கிவருகிறார்கள்பால் கலக்காமல் தேயிலையை நீரில் கலந்து கருப்புத்தேநீர் என்ற பானத்தை அருந்துகிறார்கள்கஞ்சா புகைக்கும்போது சிலநேரங்களில் கருப்பட்டியைக் கடித்துக்கொள்கிறார்கள்வாயை சிவப்பு நிறமடையச் செய்யும் வெற்றிலையை மென்று உண்ணுகிறார்கள்.
            கொல்லிமலை மலையாளிகள் கருப்பட்டி பனியாரம் என்னும் இனிப்புச் சுவையுடைய உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்ஆனம் என்னும் ஒரு வகை உணவைத் தயாரித்து உண்கிறார்கள்புளிச்சாறு எனும் உணவைச் சமைத்து சோற்றில் இட்டுப் பிசைந்து சாப்பிடுகிறார்கள்கீழ்நாட்டு சந்தையிலுள்ள கடைகளில் இட்லிசாம்பார்சட்னி போன்ற உணவுகளை வாங்கி உண்கிறார்கள்.
            படகர்கள் உறவினர்களின் வீட்டிற்கு வருகைத் தரும்போது வீட்டுக் குழந்தைகளுக்காகப் பொரிஉருண்டைகடலைஆரஞ்சு ஆகிய திண்பண்டங்களுடன் வருகிறார்கள்வெந்நீரில் தேயிலையிட்டுக் கலந்து அருந்துகிறார்கள். காபித்தூளையும் வெல்லத்தையும் வெந்நீரில் கலந்து அருந்துகிறார்கள்பாலிலிருந்து நெய் தயாரித்து உணவில் கலந்து சாப்பிடுகிறார்கள்.
            தாணிக்கண்டி இருளர்கள்  சுடு நீரில் காபிப் பொடி போட்டுக் கடுங்காபி என்னும் பானத்தைத் தயாரித்து அருந்துகிறார்கள். அரிசிச் சர்க்கரைதேன்ஆகியவற்றைப் பூப்புச் சடங்கு நிகழும்போது உண்கிறார்கள்.
            தேன்களிக்கோட்டை இருளர்கள் கற்றாளை வகையைச் சேர்ந்த சிறிய தாவரமாகிய கள்ளிமுள்ளியானைப் பஞ்ச காலத்தில் பறித்து வந்து பச்சையாகவோ வேகவைத்தோ சாப்பிடுகிறார்கள்சீங்கைப்பூவை வேகவைத்து உண்கிறார்கள்சிற்றுண்டிக் கடையில் சித்தராண்ணம் எனும் உணவைச் சாப்பிடுகிறார்கள்சித்தாரண்ணம் என்பது நெல்லரிசிச் சோற்றில் புளிப்புச் சுவையும் கடலைக் கொட்டை தாளிப்பும் கலந்து செய்யப்படுகின்ற உணவாகும்வெற்றிலை போடுவதும் வழக்கம்.
3.3.8.போதைப் பொருட்கள்
கஞ்சாபுகையிலைபீடிசாராயம் ஆகிய போதைதரும் பொருட்களைத் தமிழகப் பழங்குடிகள் உட்கொள்கிறார்கள்.  சோளகர்களில் கஞ்சா அல்லது புகையிலையைச் சிவபாணம் என்றும் அழைக்கிறார்கள்ஆண்கள் பெண்கள் இரு பாலருமே பீடி போன்ற  புகைப்பானில் கஞ்சாவை வைத்துப் புகைக்கிறார்கள்கொல்லி மலை மலையாளிகள் புகையிலையை உற்சாகம் பெறுவதற்காக வாயில் அடக்கிக்கொள்கிறார்கள்படகர்களில் சிலர் சாராயம் குடிக்கிறார்கள்தாணிக்கண்டி இருளர்கள் கஞ்சாபீடி ஆகியவற்றை போதைப் பொருட்களாகப் பயன்படுத்தகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் கஞ்சாபுகையிலை ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்சிலர் சாராயம் குடிக்கிறார்கள்.

3.4.உடை
மாராப்புச் சீலைசீட்டிப் பாவாடைதாவணிநைட்டிசீலைத்துணிஜாக்கெட்மார்க்கட்டு சேலைமண்டாக்குரவிக்கை சீட்டிகோவணம்அரைக்கை சட்டைகால்சட்டைதுண்டுவேட்டிவெள்ளை வட்டுவேட்டி மல்லுகம்பளிஆடை போன்ற உடைகளை தமிழகப் பழங்குடி மக்கள் உடுத்துகிறார்கள்.
3.4.1.ஆண்களின் உடை - கோவணம் என்பது இடுப்பளவு மட்டுமே போர்த்தப்படுகின்ற சிறிய அளவிளான துணியாகும்இந்தத் துணி ஆண்களின் உடையாக அமைந்திருக்கின்றதுசோளகர்கள்கொல்லிமலை மலையாளிகள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் இடுப்பில் கோவணம்வேட்டி ஆகிய உடுப்புகளை உடுத்துகிறார்கள்கொல்லிமலை மலையாளிகளில் ஆண்கள் சிலர் அரைக்கை சட்டை அணிகிறார்கள்செடி கொடிகளின் பாலும் அழுக்கும் கரையும் படிந்ததாக அந்தச் சட்டை இருக்கின்றதுபடகர்கள் இடுப்பில் வேட்டிமல்லு என்னும் துணிவகையை உடுத்துகிறார்கள்நீல நிறத்திலும் சிவப்பு நிறத்திலுமான கம்பளி ஆடைகளை அணிகின்றார்கள்வெள்ளை வட்டு என்னும் துணிவகையைத் தலையைச் சுற்றி உடுத்திக்கொள்கிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர்கள் வேட்டித்துணியைத் தலையில் உருமால் கட்டிக்கொள்கிறார்கள்புகையிலையை வேட்டித்துணியில் முடிச்சிட்டு வைத்துக்கொள்கிறார்கள்.
3.4.2.பெண்களின் உடை – சோளகப் பெண்கள் மார்பில் ஜாக்கெட் உடுத்திக்கொள்கிறார்கள்சீலைத்துணியைக் கட்டிக்கொள்கிறார்கள்கொல்லிமலை மலையாளிகளில் பெண்கள் மார்க்கட்டு சேலையை உடுத்துகிறார்கள்தலையில் மண்டாக்கு என்னும் உடுப்பை அணிந்துகொள்கிறார்கள்படகர் பெண்கள் ரவிக்கை சீட்டிவெள்ளை முண்டு எனும் துணிவகைகளை உடுத்துகிறார்கள்தாணிக்கண்டி இருளப் பெண்கள் மாராப்புச் சீலைசீட்டிப் பாவாடைதாவணிநைட்டி போன்ற உடைகளை உடுத்துகிறார்கள்தேன்கனிக்கோட்டை இருளர் பெண்கள் சேலை உடுத்துகிறார்கள்.

3.5.புழங்கு பொருட்கள்
3.5.1.உணவுக் கருவிகள்
வாழை இலைதேக்கு இலைசோற்றுக் கூடைமூங்கில் தட்டுசுரைபுருடைசட்டிஅலுமினியக் குண்டாஅலுமினியச் செம்புமொந்தைகிண்ணம்வெங்கல வட்டில் ஆகியவற்றைத் தமிழகப் பழங்குடி மக்கள் உணவிற்கான கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.1.சட்டி – சமைப்பதற்கு பயன்படுத்தும் பாத்திரத்தைச் சட்டி என்கிறார்கள்.
3.5.1.2.அலுமினியக் குண்டா – கஞ்சி குடிப்பதற்காக மலையாளிகள் பயன்படுத்துகின்ற பாத்திரமாகும்.
3.5.1.3.அலுமினியச் செம்பு –  தேன்கனிக்கோட்டை இருளர்கள்  கூழ்நீர்  ஆகியவற்றை அருந்துவதற்கு அலுமினியச் செம்பைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.4.மொந்தை - தேன்கனிக்கோட்டை இருளர்கள்  கூழ்நீர்  ஆகியவற்றை அருந்துவதற்கு மொந்தை என்னும் கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.5.சோற்றுக் கூடை – மலையாளிப் பெண்கள் உணவைச் சமைத்துவிட்டு வயல்களில் வேலை செய்யும் தங்கள் வீட்டு ஆடவர்களுக்கு உணவை எடுத்துச் செல்வதற்காக சோற்றுக்கூடையைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.6.மூங்கில் தட்டு – உணவை வைத்துச் சாப்பிடுவதற்கு மூங்கில்தட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.7.கிண்ணம் – பால் அருந்துவதற்காக படகர்கள் பயன்படுத்தப்படும் பாத்திரம் ஆகும்.
3.5.1.8.வெங்கல வட்டில் – படகர்களது வீட்டுப் பெண்கள் தலைவனாகக் கருதப்படுகின்ற வீட்டு ஆணுக்கு உணவு படைப்பதற்காக வெங்கல வட்டிலைப் பயன்படுத்தப்படுகின்றனர்.
3.5.1.9.சுரைபுருடை– சுரைக்குடுவையைத் தேன் சேகரிக்கின்ற கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.1.10.தேக்கு இலை – தேக்கு மர இலைகளைச் சிறு குச்சிகளால் தைத்து உணவு பரிமாறுவதற்கான இலையை உருவாக்குகிறார்கள்.
3.5.1.11.வாழை இலை – உணவைச் சாப்பிடுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்வாழை இலையைத் தொன்னைபோல உருட்டிப்பிடித்து கூழை ஊற்றி அருந்துகிறார்கள்.
3.5.2.நீர் சேகரிப்பு கருவிகள்
சுரைபுருடைமொந்தைகுடம்பானை ஆகியவற்றைத் தமிழகப் பழங்குடி மக்கள் நீர் சேகரிக்கின்ற கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.2.1.சுரைபுருடை – சுரைக்காயினை தாகத்திற்கு அருந்துவதற்கான தண்ணீரை நிரப்பி பாதுகாக்கும் கலமாகப் பயன்படுத்துகின்றனர்இதனை சுரைபுருடை என்று அழைக்கிறார்கள்கோயில் மற்றும் உறவினரைச் சந்தித்தல் போன்ற பயணங்களில் சுரைபுருடையில் நீரை நிரப்பி எடுத்துச் செல்கின்றனர்.
3.5.2.2.பானை – தண்ணீர் எடுத்துச் சேமிப்பதற்கான கலமாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.2.3.குடம் – தாணிக்கண்டி இருளர்களும் தேன்கனிக்கோட்டை இருளர்களும்  நீர் சேகரிப்பதற்குக் குடத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.தற்காப்புக் கருவிகள்
தடிகவ்வைக்கோல்போர்வைகம்பளி துணிசெருப்புமூங்கில் கம்பு ஆகியவற்றைத் தமிழகப் பழங்குடி மக்கள் தற்காப்புக் கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.1.தடி – வயதானவர்கள் ஊன்றி நடப்பதற்குப் பயன்படுத்துகின்ற கருவிசோளகர் தொட்டியில் கொத்தல்லிக் கிழவர் இந்தக் கருவியைப் பயன்படுத்துகிறார்.
3.5.3.2.கவ்வைக்கோல் – தாணிக்கண்டி இருளர்கள் தற்காப்பு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.3.போர்வை –  சோளகர்கள் குளிரை எதிர்கொள்வதற்காகப் போர்வை என்றத் துணியைப் பயன்படுத்துகின்றார்கள்.
3.5.3.4.கம்பளித் துணி – கொல்லி மலை மலையாளிகளும் படகர்களும் குளிரை எதிர்கொள்வதற்காக கம்பளிகளைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.3.5.செருப்பு –  படகர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது செருப்பு அணிந்துகொண்டு செல்கிறார்கள்.
3.5.3.6.மூங்கில் கம்பு – வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு மலையேற்றத்திற்கான ஊன்றுகோல் கருவியாக மூங்கில் கம்பை விற்கிறார்கள்.
3.5.4.இசைக் கருவிகள்
மூங்கில் தப்பை,  பீனாச்சிபறைமேளம்உருமிசங்குஜால்ராசுரைபுருடைபீக்கிபொரைகொகால்பறை,  குழல்தாரைமத்தளம்தப்பட்டைதகர டின் ஆகிய இசைக்கருவிகளைத் தமிழகப் பழங்குடி மக்கள் இசைக்கருவிகளாகப் பயன்படுத்துகிறார்கள்சோளகர்கள் பீனாச்சி எனும் சிறிய வடிவிலான நாதஸ்வரத்தைப் போன்ற இசைக் கருவியை வாயில் வைத்து ஊதுதல் மூலமாக இசைக்கிறார்கள்தப்பை மத்தளம் என்னும் கருவியைக் கைகளால் தட்டித் தாளம் இசைக்கின்றார்கள்மூங்கிலால் தட்டுதல் மூலமாகவும் தாளம் இசைக்கிறார்கள்இதனை மூங்கில் தப்பை என்கிறார்கள்பறைமேளம்உருமிசங்கு போன்ற கருவிகளை மலையாளிகள் பயன்படுத்துகிறார்கள்படகர்கள் காவல் பரணுக்குச் செல்கின்றபோது ஊதுகுழல் என்னும் இசைக்கருவியையும் எடுத்துச் செல்கிறார்கள்பறை,  குழல்தாரைமத்தளம்தப்பட்டை ஆகிய இசைக்கருவிகளைக் கோத்தர்கள் இசைக்கிறார்கள்படகர்களின் முக்கிய நிகழ்வுகளில் கோத்தர்களின் இசையும் இடம்பெறுகின்றதுமுட்டத்துவயல் இருளர் சுரைப்புருடையை இசைக்கருவியாகப் பயன்படுத்துகிறார்ஓசையெழுப்பும் மணிகளைக் காய்ந்த சுரைபுருடைக்குள் இட்டு ஆட்டுதல் மூலமாக இசை எழுப்புகிறார்கள்ஜால்ராபீக்கிபொரைகொகால்பறை போன்ற கருவிகளைத் தாணிக்கண்டி இருளர்கள் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.பிறக் கருவிகள்
புகைப்பான்ஞெலிகோல்மர உழக்குமூங்கில் கூடைமுறம்கோணிப்பைசாக்குவெள்ளி காப்புவெக்கிச் செடிநெருப்பு பெட்டிசுருக்குப் பைதிருநீறு சட்டிஅகல் விளக்குமணிஅரைநாண் கயிறு ஆகிய பிற கருவிகளையும் தமிழகப் பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.1.புகைப்பான் – களிமண்ணால் விரல் அளவிற்குச் செய்யப்பட்டுள்ள கருவிஇதனைப் புகையிலை கஞ்சா புகைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.2.ஞெலிகோல் – நெருப்பை உருவாக்குவதற்கு பயன்படுத்துகின்ற கருவி ஆகும்குளிரை எதிர்கொள்வதற்கு குடிசைக்குள் நடுமையத்தில் நெருப்பை மூட்டவதற்கும்குடிசைகளுக்கு வெளியில் தொட்டியினர் அனைவருக்கும் பொதுவாக உக்கடத்தீ மூட்டுவதற்கும் இந்தக் கருவி பயன்படுத்தப்படுகின்றது.
3.5.5.3.மர உழக்கு – தானியங்கள்நெல்லிக்கனிகள்உப்பு போன்ற பொருட்களை வைத்துக்கொள்வதற்கு மர உழக்கு பயன்படுத்தப்படுகின்றது.
3.5.5.4.மூங்கில் கூடை – வனத்திலிருந்து மூங்கிலைச் சேகரித்து அவற்றைச் சிம்புகளாக வெட்டி கூடை முடைகிறார்கள்இந்தக் கூடையைப் பொருட்களைச் சேகரித்து எடுத்துச்செல்வதற்கும் சேகரித்து வைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.5.முறம் – மூங்கில் சிம்புகளால் முறத்தைப் பின்னுகிறார்கள்இக்கருவியைப் பொருட்களைக் குவித்து அள்ளுவதற்காகப் பயன்படுத்துவார்கள்.
3.5.5.6.கோணிப்பை சாக்கு – காட்டுக் கொட்டகையில் வைக்கோல் பரப்பில் தூங்குகின்றபோது கோணிப்பை சாக்கைப் போர்வையாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.7.வெள்ளிக் காப்பு – வெள்ளி உலோகத்தால் செய்யப்படுகின்ற காப்பினை கையில் அணிகின்ற அணிகலனாகப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.8.வெக்கிச் செடி – படகர் பெண்கள் தலை குளிப்பதற்கு வெக்கிச்செடி எனும் ஒரு வகை மூலிகையைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.9.நெருப்புப் பெட்டி – விளக்கேற்றுவதற்கு நெருப்புப் பெட்டியைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.10.சுருக்குப் பை – தாணிக்கண்டி முதியவர்கள் வெற்றிலை பாக்கு வைத்துக்கொள்வதற்காக இந்தச் சுருக்குப் பையைப் பயன்படுத்துகிறார்கள்.
3.5.5.11.திருநீறுச் சட்டி – திருநீறு நிரப்பப்பட்ட திருநீறு சட்டியானது குடிசையின் மூங்கிலில் தொங்குகிறது.
3.5.5.12.அகல் விளக்கு – படகர்கள் தங்களது வீடுகளில் மாலை நேரமானதும் இருளை எதிர்கொள்வதற்காக அகல் விளக்கைப் பயன்படுத்துகிறார்கள்ஆமணக்கு எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுகிறார்கள்விளக்கேற்றப்படும் இடத்தைத் தீபமாடம் என்று அழைக்கிறார்கள்.
3.5.5.13.மணி – இறைவனுக்குப் பூசை செய்கின்ற போது மணி அசைத்து ஆட்டுதல் மூலமாக புனித ஒலி எழுப்புகிறார்கள்.
3.5.5.14.அரைநாண் கயிறு – தேன்கனிக்கோட்டை இருளர்கள் எருக்கன்  செடி நாரில் தயாரிக்கப்பட்ட அரைநாண் கயிற்றைக் கட்டிக்கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை