அணிலாடும் நெடுமரங்கள்
சுள்ளென்று
எரித்தது வெயில்
மூன்று நெடு
மரங்கள்
கோடிணைத்தால்
முக்கோணம் வடிவுறும்
அகண்ட பாரதமாய்
நிழலிட்டன
இலைகளுக்கு
இடையில் நிலமெங்கும் வெண்புள்ளி
புலி கொன்ற
மடமானின் எஞ்சிய எலும்பு
இந்திரனின்
வஜ்ரம்போல் காட்சி தந்தது
ஒழுக்கமுள்ள
எறும்புகள்
இந்திரனை மிதித்தபடி
உணவு சேகரித்தன
ஒளிந்தொளிந்து
தப்பித்து
ஓடோடும் பெண்
அணிலை
மரத்திற்கு
மரம் மாறி
அணிலாடும் ஆணினங்கள்
வன்புணர்ந்து
விளையாடின
வில்லாடும்
ராமன்
அணில் முதுகை
வருடியபடி
நிழலாடி மகிழ்ந்திருந்தான்
சில்லிட்டு
காற்றடிக்க
அணில்களால்
கிளரப்பட்ட ராமன்
சிற்றின்ப தீனிக்கு
புராணமெல்லாம் நினைவசைத்தான்
பார்வதியை மோகித்து
மகள் புணர்ந்த பிரம்மன்
நிர்வாணத்தை
எட்டிப்பார்த்து தலை இழந்த பிரம்மன்
அகலிகையை ஏய்த்த
இந்திரன்
துளசியை ஏய்த்த
ஸ்ரீவிஷ்ணு
நாரதனின் வில்
ஏங்க
அறுபது பெண்
புணர்ந்து வருடம் தந்தான்
மோகித்த நாரதனையும்
புணர்ந்திசைத்தான்
சிறுத்தை அடித்த
மான்
ஓநாய் திருடிக்
கவர்தல் போல
சிசுபால ருக்மணியை
கிருஷ்ணன் திருடிப்
புணர்ந்தான்
பிறர் மனை எழுவரை
புணர்ந்த தாகம் தீராதும்
கோபியப் பெண்
பத்தாயிரம்
புசிபுசித்தப்
பின்பும்
ராதையும் புணர்ந்தான்
கள்ளக் கிருஷ்ணன்
நினைவாடும்
புராணங்கள்
ராமன் தலை கிறுகிறுக்க
அணிலாடு மன்றத்தில்
காம வெறி உச்சமிட
மன்றம் தொடங்கினான்
ராமன்
பாலியல் ஜல்சாவில்
பலபல தொண்டர்கள்
பாரத மகள்களை
வில்லெய்து எரித்தனர்
வன்புணர்ந்து
பிசுபிசுத்த கோயில் கருவறை
கொலைபட்ட சிறுமியின்
நசுங்கிய எலும்புகள்
புண்பட்டு பிளந்த
யோனிபோல்
ரத்தம் பிசுப்பேறி
கிடந்தன பாறைகள்
அனுமன் ஓய்வாக
சாய்ந்திருந்தான்
குருதியில்
வால் நனைத்து மகிழ்ந்திருந்தான்
ஊர்கூடி வன்புணர
நிர்வாண மகளை
ஊர்வலம் செய்தனர்
மண்ணும் வானும்
வெட்கி குனிந்தன
காற்றெங்கும்
காவிகளின் ராம கோசம்
நாடெங்கும்
பெண்கள்பிண நாற்றம் வீசும்
வில்விட்ட அம்பு
உயிர் தொடுதல்போல்
உயிர்விட்ட
பெண்குரல் செவி பாய்ந்தன
அணங்கு சூல்
இசக்கி
கொல்லிப்பாவை
மாரி
காளி வனப்பேச்சி
தவ்வை கொற்றவை
ஒருமித்த தமிழுடல்
சினமேறி சிலிர்த்தன
கரு நீல சிவப்பொளியில்
போருடலாய் மிளிர்ந்தன
பாலியல் ஜல்சா
வில்லர்கள்
பிண மாலை ஆனார்கள்
சனாதனப் பன்றி
வெட்டி
வில்லர்கள்
நெருப்பேறி
கிளரப்பட்ட
பேய் கஞ்சி
காளியின் போர்
கஞ்சி
சமூக நீதிக்கு
நோய் மருந்து
ஜனநாயக உயிர்க்கு
பெரும் விருந்து
கருத்த நெற்றியில்
பவுர்ணமிப் பொட்டு
திரிசூலக் கூத்தாடும்
முத்தமிழ் அணங்கு
புரட்சியின்
மூவண்ணப் புகையாக சூழ்ந்தாள்
சனாதன ராமனை
அருவமாய்ச் சூழ்ந்தாள்
தொடைநடுங்கி
ராமன்
அச்சத்தின்
உச்சம் தொட்டான்
சரயு நதி எங்கே?
திசையெங்கும்
தேடினான்
தற்கொலைக்கு
ஏங்கினான்
சோலி முடித்தாள்
தமிழணங்கு
வில்லாடும்
ராமனின் சங்கறுத்தாள் வில்லறுத்தாள்
அறுபட்ட வில்
துடிதுடித்து புரள
சனாதனப் பேயன்
கடல் அழித்த
சுவடானான்
No comments:
Post a Comment