திரிசூலம்
வெகு சில ஆண்டுகளாக
எலும்பிச்சம்பழம்
குத்தப்படாமல்
பூசாரி கிழவியும்
சூலாயுதமும்
பொலிவின்றி
நிற்கின்றன
குங்குமச் சாறு
பிதுங்க
எலும்பிச்சம்
பழம் ஒன்றை
சூலத்தில் சூடினேன்
கொலை செய்த
பாதகர்களே
ஓய்.. ஏய்..
என்று
பூசாரி கிழவி
கொற்றவை ஆடினாள்
கண்ணீர் பூ
உதிர்த்தபடி
வெறி பிடித்து
அலறினாள்
மீன்குஞ்சு
போல் திரிந்த
சிறுசுகளை கொளுத்துனீக
தெருத்தெருவா
வீடுடைத்து
இளசு பெருசு
துடிதுடிக்க
வாள் வீசி வெட்டுனீக
ஜெய்ஸ்ரீராம்
தாகம் தீர
ரத்தப் பிண்டம்
கொடுத்தீக
வேட்டிக்குள்
விரைத்திருந்த
ராமனின் வில்
பாய்ச்ச
காக்கை உடை
கிழித்து
உடைந்த பெண்களை
எரித்தீக
வில்லெடுத்த
ராமன்களே
நிறைமாத கர்பிணிக்கும்
புடைத்த வயிறு
கிழித்தீக
சிசுவென்று
பாராது
தின்றொழித்த
ஓநாய் போல்
சூலாயுத வாயால்
உயிர் செருகி
எரித்தீக
காவி வெறி பேடிகளே
சனாதனத்தின்
மலக்கழிவே
அணங்கு சூழ்
கொற்றவை
காளி ஆடி வருகிறாள்
நீலம் கருப்பு
சிவப்பு
திரிசூலம் ஏந்தி
வருகிறாள்
காவிக்குடுமி
பொசுங்க
விரைத்த குறி
அறுந்த வாலாய்
துடிதுடித்து புரள
எலும்பிச்சம்
பழம் போல்
சனாதன மூளை
அழுகி பிசுபிசுக்க
சூலாயுத கூர்
நாவில்
காவிக் கதை
முடிப்பாள்
No comments:
Post a Comment