Wednesday, January 24, 2024

காரிருள் பூத்த தாமரை

 

கருங்குழி இரவு
குளமெங்கும் தாமரை மலர்ந்தன

பண மதிப்பிழப்பால்
வரிசையில் சோர்ந்த சீமாட்டிகள்போல
பொலிவிழந்தன தெருவெங்கும் மரங்கள்

பல்லாயிரம் கால்களில் பயணித்த மரணம்
பிணமான தாயின் பாலில்லா மார்பை
பசியுடன் உந்திய குழந்தைபோல
எலும்பு தோல் போர்த்திய நாயினை குட்டிகள்
குடிசையின் முற்றத்தில் மொய்த்தன

தாயின் வயிறு கிழித்து
சிசுவை எரித்த சூலாயுதம்போல

பொந்திலிருந்த கிளிக்குஞ்சுகளை

விழுங்கித் தீர்த்தது சுழல் பாம்பு

ஏந்திய மெழுகுவர்த்திகளின் சிற்றொளிக்கு
அஞ்சி மறைந்த கொரனாபோல்
மின்மினிக்கு அஞ்சி முளித்தன
பெருங்கண் ஆந்தைகள்

பேரிருள் சூழ
தேர்தல் இரதங்களில் யாத்திரை தொடங்கிட

சாதி வெறியுடன் சனாதன நடனம்

பரப்புரை எங்கும் மதவெறி ஜாலம்

இலாப வெறிக்கு சாகச மகுடம்

மனிதநேயத்தின் அஸ்தம கோலம்

கோமாளிகள் கூத்திட வெடிப்பொலி அதிர்ந்தன

 

ச்ச்சீ…
நரியிடும் ஊளை என்றனர் பலர்
பேய் என்றது பிள்ளை
நீ என்றேன் நான்.

  

https://makkalathikaram.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b0/carirul-flower-lotus-newbie/

No comments:

Post a Comment

ஒரே மாடு! ஒரே போடு!

ஒரே மாடு! ஒரே போடு!   கட்டெறும்பு நிலத்தில் காலூன்றி வானுயர நிற்கிறது பிசாசு   வானம் முழுக்க விண்மீன்கள் டாலர்களாய் மிளிர்கின்றன காவி இருட்ட...

அதிகம் பார்க்கப்பட்டவை